Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம உரிமை இயக்கம்

Featured Replies

தமிழர்களின் உரிமை இலங்கையில் முற்றிலும் மறுக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. மனித உரிமை இந்த 20ஆம் நூற்றாண்டில் இவ்வளவு மறுக்கப் படுகிறது என்றால் அது எப்படி ஒரு சனநாயகம் ஆகும்?





  • தொடங்கியவர்

இந்தக் களத்திலும் சில புதிய சிந்தனைகளுடன் தாயகத்தில் புதியவர்கள் வரவேண்டும் என்ற கருத்துக்கள் வைக்கப்பட்டன.

 

அவர்களுக்கு  இந்த அமைப்பு அவ்வாறானதாக அமையலாம்.

  • தொடங்கியவர்

அரசு நாசிவாதிகளைப் போல் செயற்படுகிறது; சம உரிமைகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டாளர் தெரிவிப்பு



அரசாங்கம் மக்கள் மீது தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு நாசிவாதிகளைப் போல் செயற்பட்டு வருவதாக சம உரிமைகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டாளர் ரவிந்திர முதலிகே தெரிவித்துள்ளார்.

பொருளாதார மாயைக்கு மயங்காது அதற்கு எதிராக போராடுவோரை காணாமல் போக செய்யும் அரசாங்கம், கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு சாதாரண சட்டத்தை செயற்படுத்தவில்லை.

போருக்கு பின்னர், வடக்கு கிழக்கு மக்களை பதிவுசெய்யும் போது, குடும்பங்களை புகைப்படம் எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும்  மீண்டும் அரசாங்கம் அவ்வாறே தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது.

அத்துடன் மட்டக்களப்பில் மீண்டும் குடும்பங்களை புகைப்படம் எடுக்கும் நடவடிக்கைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த புகைப்படத்திற்கு அரச இலச்சினையுடன் இலக்கம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. தென்பகுதிக்கு கிடைக்கும் அடிப்படை உரிமைக் கூட இதன் மூலம் வடக்கு, கிழக்கு மக்களுக்கு இல்லாமல் போயுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக வடபகுதியை சேர்ந்த நிமலரூபன், தில்ருக்ஷன் ஆகிய தமிழ் கைதிகள் கொலை செய்யப்பட்டனர். லலித், குகன் பொன்ற அரசியல் செயற்பாட்டாளர்கள் காணாமல் போக செய்யப்பட்டது போல, 
தெற்கிலும் சிறைக்கைதிகளை கொலை செய்த அரசாங்கத்தின் இராணுவ ஆட்சியானது நிச்சயம் எதிர்காலத்தில் தெற்கிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இனங்களுக்கு இடையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முனைப்புகளை மேற்கொண்டு வரும் தொழிலாளர்கள், மாணவர்கள், மீனவர்கள்,விவசாயிகள், இளம் சக்திகளுடன் கூடிய அரசியல் செயற்பாட்டினால் மாத்திரமே இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும்


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



http://onlineuthayan.com/News_More.php?id=507961680008219933

  • தொடங்கியவர்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சம உரிமைகளுக்கான இயக்கம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டமொன்று கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை, வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ கெடுபிடிகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் என ஏராளமானோர் இதில் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம்.



P01(130).jpg



P02(108).jpg



P03(79).jpg



P04(51).jpg



http://tamil.dailymirror.lk/--main/55040-2012-12-18-13-44-04.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.