Jump to content

Neuron வானூர்தி..


Recommended Posts

ஆறு ஐரோப்பிய நாடுகளின் Stealth தொழில் நுட்பத்துடன் கூடிய ஆளில்லா தாக்குதல் போர் வானூர்தியின் unmanned combat air vehicle (UCAV) முதலாவது பறப்பு 01/12/2012அன்று நடைபெற்றது. பிரான்ஸ், இத்தாலி, சுவீடன், ஸ்பெயின், கிரேக்கம், சுவிற்சலாந்து ஆகிய 6 நாடுகள் இத்திட்டத்தில் இணைந்திருந்தன. 500 மில்லியன் அமேரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட இந்த வானூர்திக்கு நியுரோன் nEUROn எனப் பெயரிடப்பட்டுள்ளது. தூரப்புலமானி தவிர்ப்பு(Stealth) தொழில் நுட்பம் Stealth என்பதன் தமிழ் அர்த்தம் தவிர்த்து அல்லது அகப்படாமல் முன்னேறுதல். போர் முனையில் எதிரி வானூர்திகளை தூரப்புலமானி (Radar) மூலம் கண்டறிவர். தூரப்புலமானியால் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்கு Stealth தொழில் நுட்பம் உதவிகிறது. இதன்படி வானூர்தி தட்டையாக வடிவமைக்கப்படும். அத்துடன் தூரப்புலமானியில் இருந்து வரும் வானொலி அலைகளை உறிஞ்சும் இரசாயனப் பதார்த்தம் வானூர்தியில் பூசப்பட்டிருக்கும். ஈழ வான்படையின் வானூர்திகள் கூட தூரப்புலமானியில் அகப்படாமல் இருந்தது. அது எப்படியோ தெரியாது. ஆளில்லாப் போர் வானூர்திகள் உலக நாடுகளிடையே ஆளில்லாப் போர் வானூர்திகளின் உற்பத்தியும் பாவனையும் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் வேவு பார்க்கவும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்த ஆளில்லாப் போர் வானூர்திகள் இப்போது மேலும் நவீன மயப்படுத்தப்பட்டு தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன. ஆப்க்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானின் வட பகுதியிலும் 2006-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஆளில்லாப் போர் வானூர்திகள் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளைக் கொன்றுள்ளன. நியுரோன் வானூர்திகள் நியுரோன் வானூர்திகள் ஆளில்லாத தொழில்நுட்பத்தையும் (Drone Technology) தூரப்புலமானி தவிர்ப்பு(Stealth Technology) தொழில் நுட்பத்தையும் இணைத்து உருவாக்கப்படுகின்றன. இது இரண்டு Adour mk951 இயந்திரங்கள் மூலம் இயக்கப்படுகிறது. lesar உதவியுடன் செல்லக்கூடிய 250kg எடையுடைய இரு குண்டுகளையும் காவிச் செல்லக்கூடியது. இதன் உயர் வேகம் Mach 0.8 ஆகவும் எடை 4,500 கிலோ ஆகவும் காணப்படுகிறது.

http://vinnummannum.blogspot.com/2012/12/neuron.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு ஐரோப்பிய நாடுகளின் Stealth தொழில் நுட்பத்துடன் கூடிய ஆளில்லா தாக்குதல் போர் வானூர்தியின் unmanned combat air vehicle (UCAV) முதலாவது பறப்பு 01/12/2012அன்று நடைபெற்றது. பிரான்ஸ், இத்தாலி, சுவீடன், ஸ்பெயின், கிரேக்கம், சுவிற்சலாந்து ஆகிய 6 நாடுகள் இத்திட்டத்தில் இணைந்திருந்தன. 500 மில்லியன் அமேரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட இந்த வானூர்திக்கு நியுரோன் nEUROn எனப் பெயரிடப்பட்டுள்ளது. தூரப்புலமானி தவிர்ப்பு(Stealth) தொழில் நுட்பம் Stealth என்பதன் தமிழ் அர்த்தம் தவிர்த்து அல்லது அகப்படாமல் முன்னேறுதல். போர் முனையில் எதிரி வானூர்திகளை தூரப்புலமானி (Radar) மூலம் கண்டறிவர். தூரப்புலமானியால் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்கு Stealth தொழில் நுட்பம் உதவிகிறது. இதன்படி வானூர்தி தட்டையாக வடிவமைக்கப்படும். அத்துடன் தூரப்புலமானியில் இருந்து வரும் வானொலி அலைகளை உறிஞ்சும் இரசாயனப் பதார்த்தம் வானூர்தியில் பூசப்பட்டிருக்கும். ஈழ வான்படையின் வானூர்திகள் கூட தூரப்புலமானியில் அகப்படாமல் இருந்தது. அது எப்படியோ தெரியாது. ஆளில்லாப் போர் வானூர்திகள் உலக நாடுகளிடையே ஆளில்லாப் போர் வானூர்திகளின் உற்பத்தியும் பாவனையும் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் வேவு பார்க்கவும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்த ஆளில்லாப் போர் வானூர்திகள் இப்போது மேலும் நவீன மயப்படுத்தப்பட்டு தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன. ஆப்க்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானின் வட பகுதியிலும் 2006-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஆளில்லாப் போர் வானூர்திகள் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளைக் கொன்றுள்ளன. நியுரோன் வானூர்திகள் நியுரோன் வானூர்திகள் ஆளில்லாத தொழில்நுட்பத்தையும் (Drone Technology) தூரப்புலமானி தவிர்ப்பு(Stealth Technology) தொழில் நுட்பத்தையும் இணைத்து உருவாக்கப்படுகின்றன. இது இரண்டு Adour mk951 இயந்திரங்கள் மூலம் இயக்கப்படுகிறது. lesar உதவியுடன் செல்லக்கூடிய 250kg எடையுடைய இரு குண்டுகளையும் காவிச் செல்லக்கூடியது. இதன் உயர் வேகம் Mach 0.8 ஆகவும் எடை 4,500 கிலோ ஆகவும் காணப்படுகிறது.

http://vinnummannum.blogspot.com/2012/12/neuron.html

 

 

நன்றி பிரியா பகிர்வுக்கு, தொடர்ந்து பகிருங்கள்.

 

இன்னும் நன்றாக முன்னேறியிருப்பார்கள், உலகத்தின் சதியில் எல்லாம் முடிந்துவிட்டது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் 2 மணி நிலவரம்! நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது. அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் 2 மணி நிலவரப்படி வாக்காளர்களின் வீதம் கம்பஹா – 52%, யாழ்ப்பாணம் – 35%, முல்லைத்தீவு – 46%, வவுனியா – 51%, மன்னார் – 40%, பதுளை – 40%, இரத்தினபுரி – 58%, கேகாலை – 49%, மட்டக்களப்பு – 23%, திருகோணமலை – 51% https://athavannews.com/2024/1400437
    • வாக்குப் பெட்டியில்... "கோல்மால்" பண்ண திட்டம்  போடுகிறார்களோ....
    • அதிகார பரிமாற்றம் என்பது சுமூகமாக நடைபெறும்.  1981 ஆண்டு யாழ்ப்பாண அபிவிருத்திச் சபைத் தேர்தலில்  ரணில் முன்னின்று மோசடி செய்தார் என்பது உலகறிந்ததேஇ ஆனால் இம்முறை அப்படி செய்வதற்கு ரணிலுக்கு குறிப்பிட்ட அளவு ஆதரவு அரசாங்க ஊழியரிடமும்இ பாதுகாப்பு தரப்பிடமும்  இல்லை.  அண்மைக்காலங்களில் ஜேவிபி/மக்கள் சக்தி பாரியளவு நிழல் அரசொன்றை கட்டி அமைத்துள்ளார்கள்இ குறிப்பாக அரச ஊழியரிடமும்இ பாதுகாப்பு  தரப்பிடமும்.
    • தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்    தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் வன்முறைகள் ஏற்படின் அது கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகின்றது, இந்த சூழலைப் பேணுமாறு பொதுமக்களிடமும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ”ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்" என்றும் அமைச்சர் தெரிவித்தார். [எ]     https://newuthayan.com/article/தேவை_ஏற்பட்டால்_ஊரடங்குச்_சட்டம்_அமுல்படுத்தப்படும்
    • தீவிர தமிழ் தேசியவாதம் என்ற போர வையில  சிங்கள இனவாதத்துக்கு சமமாக தமிழ் இனவாதம் பேசும் தரப்புகள  ஶ்ரீலங்காவில் ஒரு கடும் இனவாத ஜனாதிபதி பதவிக்கு வரவேண்டும் என்றே எப்போதும் எதிர் பார்கிறார்கள். அதன் மூலமே தமது தமது வியாபாரம் செல்வ செழிப்புடன் நடைபெறும் என்றே  எப்போதும் நினைக்கிறார்கள்.  அந்த வகையில் ஐரோப்பாவில் இருக்கும் கடும் தமிழ் இனவாதியின் முகநூல் பதிவு  இப்படி கூறுகிறது.  அனுர வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகப் பிந்திய செய்திகள் சொல்கின்றன. மிக்க மகிழ்ச்சி. ஏனென்றால் இதுவரை தமிழர் தேசம் சந்திக்காத பாசிச இன ஒடுக்குதல்களை ஜேவிபியிடமிருந்து எதிர்பார்க்கலாம். அதற்கு வரலாற்றில் ஏகப்பட்ட சாட்சியங்களும் இருக்கின்றன. ஜே ஆர், சந்திரிக்கா, மகிந்த, கோத்தாவை தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு பாசிசம் முறுக்கேறிய ஒரு இயக்கம்தான் ஜேவிபி. எமக்கும் இதுதான் தேவை. ஏனெனில் மைத்ரி, ரணில் போன்றவர்களை வைத்து  தமிழ்த் தேசக் கோட்பாட்டிற்கு உள்ளக / வெளியக சக்திகளால் வைக்கப்பட்ட செக் இதன் வழி தகர்க்கப்பட்டிருக்கிறது. நாளையிலிருந்து தமிழீழம்  நம்பிக்கையுடன் தனது புதிய பாய்ச்சலை தொடங்கும். வெல்வோம் ❤️ வென்றே தீருவோம் 🔥 இவரை போன்ற  சுயநலமிகளின் சிந்தனை தான் தமிழினத்தை இன்றைய  அதல பாதாள அவல நிலைக்களுள் கொண்டு வந்திருக்கிறது.  இவரின் எதிர்பார்ப்பை வெல்லப் போகும் ஜனதிபதி நிறைவேற்ற கூடாது என்பதே தமிழர்  எதிர்பார்பபு. 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.