Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூரின் ஆட்சி

Featured Replies

மஹிந்தவின் நல்லாட்சியில் மக்கள், நீதி, நிர்வாகம் என்பவற்றுக்கான வரைவிலக்கணங்கள் மாற்றி எழுதப்பட வேண்டும். இது உலகப் பொதுக் கொள்கைகளுக்கு முரணானதாகவே அமைக்கப்பட வேண்டும். இதன் மூலமே அவரின் கருத்தை மெய்ப்பிக்க முடியும்.


நாட்டில் நல்லபடி ஆட்சி நடக்கிறது. இதனை விரும்பாத சிலர் அரசுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர். நீதித்துறையும், நிர்வாகத்துறையும் சீராக இயங்குவதால் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு அவை இடைஞ்சலாக உள்ளன.

 

இதன்காரணமாகவே பொய்ப் பிரசாரங்கள், சதிமுயற்சிகள் அரசின்மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதனைக் கண்டு அஞ்சவேண்டிய தேவை எமக்கில்லை". அண்மையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்து இது.

 

நீதி நிர்வாகத்துறை இப்போது உள்ள அரசின் கீழ் சீராக இயங்குகிறது என்றும் இதனை விரும்பாத கூட்டத்தாலேயே குழப்பம் ஏற்படுகிறது என்றும் ஜனாதிபதி கருதுகிறார். விமர்சனங்களுக்கும், மிரட்டல்களுக்கும் தாம் ஒருபோதும் அடிபணியப் போவது இல்லை என்று மார்தட்டிக்கொள்ளும் மஹிந்த குடும்பம் மனச்சாட்சியுடனேயே இந்தக் கருத்தைத் தெரிவிக்கிறதா? அல்லது தங்கள் மனதைச் சாந் திப்படுத்துவதற்காக இதுபோன்ற கருத்துக்களை  வெளியிடுகின்றதா? என்பது புரியாத புதிராக உள்ளது.


அல்லது அரசு சீராக இயங்குகிறது; நாட்டில் வாழும் மக்கள் தான் தினமும் ஏதோ குழப்பத்தை உண்டுபண்ணுகிறார்கள் என்று சொல்வது போன்றும் யோசிக்க வேண்டியும் உள்ளது. அப்படியானால் பாவம் இந்த அரசு.

 

படுகொலைகள், காணாமற் போதல்கள், பெண்கள் மீதான வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், நில ஆக்கிரமிப்பு, பேச்சுச் சுதந்திர மறுப்பு என்று எல்லாம் மலிந்து இருக்கக்கூடிய நாட்டில், எந்தப்பகுதியில் நீதி நிர்வாகம் சீராக இயங்குகிறது என்பதை மஹிந்த குறிப்பிடவில்லை. அவர் சொன்னது ஒட்டு மொத்தமாக நாட்டில் என்ப தைத்தான்.


அப்படியானால் கொலைகள், கொள்ளைகள், ஆள்கடத்தல்கள், அத்துமீறல்கள், அடக்கு முறைகள் என்று வரிசைப்படுத்தக்கூடிய சம்பவங்கள் தான் இந்த வகை ஆட்சி என்று மஹிந்த கூற விரும்புகிறாரா? என்றும் எண்ணத் தோன்றுகிறது.

 

ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தி நல்லாட்சியை அமைக்க வேண்டியது அரசின் கடமை. ஜனநாயக நாட்டில் நல்லாட்சிப் பண்புகள் கட்டாயமாக நடை முறையில் இருக்கவேண்டும். இதில் ஏதாவது ஒன்று இலங்கையில் சரியாக இயங்குகிறதா? என்றால், அரசு மட்டும் சரியாக இயங்குகிறது மக்களும் அதிகாரிகளும் தவறிப் போய் உள்ளனர். என்றுதான் மஹிந்த விடை கூறுகிறார்.


மஹிந்த கூறும் கருத்துக்கு மாற்றுக்கருத்துக் கூற வேறொரு சக்தி எங்களிடம் இல்லை என்பதால் அவர்கள் நெருப்பைக் கக்கினாலும் தாங்கியே தீரவேண்டிய சூழல் இலங்கை நாட்டு மக்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

 

சத்தம் போடாமல் இருந்து சாதிக்கும் பண்பு கொண்டவர் ஜனாதிபதி மஹிந்த. அவர் சொல்லிக்கொள்வதெல்லாம் "உங்களைப் போல எத்தனை பேரை பார்த்திருக்கிறேன் நான்" என்பதுதான்.

 

அதாவது சாக்கடை அரசியலிலிருந்து அரியணை வரை வந்த கதையையே மஹிந்த அனைவருக்கும் ஞாபகப்படுத்திக் கொள்வார். இதனால் யாரும் மறுகருத்துக் கூற முடியாது.

 

தந்திரமாக அரசியல் நகர்வுகளைச் செய்து ஓர் இனத்தின் எல்லா உரிமைகளையும் பறித்தெடுப்பதே இவரது வாழ்நாள் ஆசை. வடக்குக் கிழக்கில் அரசு தவிர எந்தக் கட்சியும் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதில் அவர் குறியாக இருக்கிறார். தனது செல்லப்பிள்ளையாக இருந்தாலும் தனது செருப்பின் கீழேயே இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் மஹிந்த.

 

இதை அறியாத செல்லப்பிள்ளைகள் தங்கள் இனத்தையே காட்டிக்கொடுத்து வக்காலத்து வாங்குகின்றனர்.  இவர்கள் பார்வையில் இலங்கை அரசியல் நிர்வாகத்தில் நல்லாட்சி நடக்கிறது என்பது சாலப்பொருத்தம். அமைதிச் சூழல் நிலவுகின்றபோதிலும், ஆபத்து நிலைச் சட்டதிட்டங்களே இலங்கையில் நடைமுறையில் இருக்கின்றன.


வெளியில் இருந்து வந்து, கள்வன் திருடாவிட்டாலும், உள்வீட்டுப் பிள்ளைகளே திருடி விட்டுப் பொலிஸில் முறைப்பாடு செய்ய, வெளியிலே கள்வனைத் தேடும் சட்டமே நடைமுறையில் இருக்கின்றன. நிர்வாகக் கட்டமைப்பில் குடும்பத்துக்கே ஒதுக்கீடுகள் இருப்பதால் வெளியிலிருந்து யாரும் நுழைந்து கொள்ளை அடித்துவிட முடியாது. அந்த அளவுக்கு இறுக்கமாகப் பகிரப்பட்டிருக்கின்றன பதவிகள். இந்த விசித்திரம்தான் இலங்கையில் சரித்திரமாக மாற்றப்படுகிறது.

 

உரிமைகளைத் தட்டிக்கேட் பவர்கள் பயங்கரவாதிகள், குற்றவாளிகள், ஊழல் மோசடிக்காரர்கள் என்று புனைபெயர் சூட்டி அவர்களை பின்தொடர்ந்து மிரட்டுவதே நல்லாட்சிப் பண்பாக மாற்றப்பட்டிருக்கிறது. மஹிந்தவின் நல்லாட்சியில் மக்கள், நீதி, நிர்வாகம் என்பவற்றுக்கான வரைவிலக்கணங்கள் மாற்றி எழுதப்பட வேண்டும்.


இது உலகப் பொதுக் கொள்கைகளுக்கு முரணானதாகவே  அமைக்கப்பட வேண்டும். இதன் மூலமே அவரின் கருத்தை மெய்பிக்க முடியும். "தம்பியுடையான் சண்டைக்கு அஞ்சான்" என்பதைப் போல அண்ணன்  தம்பி மகன் என்று குடும்பக் கட்டமைப்புக்குள் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து இருக்கும் மஹிந்த கூட்டுத்தாபனத்தின் நிலைப்பாடும் அதிகாரங்களை கொண்டதே.

 

ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஒற்றுமையாகவும் மற்றையவர்களிடத்தில் வக்கிரம் கொண்டவர்களாகவும் இருப்பதோடு, சூழ்ச்சிகளை நன்கறிந்தவர்களாகவும் இருப்பதால் கூட்டுத்தாபனத்தைக் கட்டமைப்பு மாறாமல் பேணமுடிகிறது. எதிர்தரப்பு அரசியல் வாதிகளுக்கும் இத்தகைய ஒரு கூட்டுத்தாபனத்தைக் கொண்டு நடத்துவதற்கு வக்கில்லை.


வந்த சந்தர்ப்பங்களையும் கைநழுவ விட்டுவிட்டு பின்னே கொக்கரிப்பதே அவர்களின் வேலையாகவும் இருக்கிறது. இந்த எடுகோளே அரசுக்கு வசதியாக இருக்கிறது. நாம் எதைச் சொன்னாலும் கேட்டுத்தான் ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தோற்றுவித்திருக்கிறது. அச்சுறுத்தக்கூடிய அல்லது பேரம்பேசக்கூடிய சக்தி ஒன்று இல்லையென்ற துணிச்சலே அரசின் இவ்வாறான கனகச்சி தங்களுக்குக் காரணமாக அமைகின்றன.

 

மக்கள் பெரும்பாலும் தொழில், ஊதியம், வாழ்க்கைச் சுமை என்று காலத்தைக் கழிப்பதற்காக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் அவர்கள் கொஞ்சம் "பிஸி' யாகவே இருக்கவேண்டியுள்ளது. சற்று ஓய்ந்துவிட்டால் ஒருநேரச் சாப்பாட்டுக்கே ஆப்பாகிவிடும். பாவம் அப்பாவிச் சனங்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்பைப் பார்ப்பதா? நாட்டில் சட்டதிட்டங்கள் சரிவர இயங்குகின்றவா என்பதைக் கவனிப்பதா?


இதனால் அவர்கள் அரசியலில் இருந்து விலகி இருக்க எண்ணுகின்றனர். எதைச் சொன்னாலும்; கேட்டாலும் எந்தப் பயனும் கிடைக்கப்போவது இல்லை என்பதை மக்கள் உணர்ந்து கொண்டு விட்டார்கள். அரசும், வீதியில் இறங்கிப் போராடுவோர் குறித்து நன்கே படித்திருக்கிறது. அதனால் செவிடன் காதில் ஊதிய சங்குபோல், அந்தக் குரல்கள் அவர்களுக்குக் கேட்டாலும் கேட்பதில்லை.

எத்தனைநாள்  தான் கத்துவீர்கள் நடந்து முடிந்துவிட்ட ஒன்றுக்காக? என்ற ஏளனத்துடன் போராட்டக்காரர்களை நோக்குகிறது அரசு. சர்வதேச ரீதியில் வரக்கூடிய அழுத்தங்களுக்கே சாக்குப் போக்குச் சொல்லி மழுப்பிவிடும் திறமை இருக்கையில் உள்ளூர் அரசியல் வாதிகளுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் மகாதிறன் மங்கி மறைந்து விடுமா என்ன? கேட்பதற்கு முன்னரே பதில் சொல்வார்கள் அரச தரப்பினர்.

 

மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எந்தத் திட்டங்களும் வெளிப்படைத் தன்மையாக நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை. அவை ஏதோ ஓர் அரசியல் பின்புலத்திலேயே செய்யப்படுகின்றன. இதனால் தேவையுடைய மக்களுக்கு அவை சென்றுசேர்வதில்லை. இதனை யாராவது தட்டிக்கேட்டால், அவரது பதவியும் செல்லாது போய்விடுகிறது. இந்த அழுத்தங்களால் அதிகாரத்தை தட்டிக்கேட்கும் பண்புகள் முடக்கப்பட்டுள்ளன.


நல்லாட்சிக்கு இருக்கக்கூடிய வெளிப்படைத் தன்மை, கணக்குக் காட்டல், வினைத்திறன், பரஸ்பர பகிர்ந்தளிப்பு போன்றன எல்லாம் எந்த அடிப்படையில் இலங்கை அரசியலில் செயலாற்றுகின்றன என்பதற்கு விடையே இல்லாத சூழ்நிலையில் நல்லாட்சி நிமிர்ந்து நிற்கிறது எனச் சொல்லிக் கொடுக்கிறது அரசு.

 

வடக்கு கிழக்குப் பகுதிகளில் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் சூழலில் மக்களுக்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுத்திருப்பதாக மகிழ்ச்சியுறுகிறது அரசு. இவை யெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருப்போருக்கு மஹிந்த சொல்லும் நல்லாட்சி புரிந்திருக்கும். அதை வேறுபடுத்தத் தெரியாதவர்கள் மக்களைப் பிழை சொல்லுவதில் தவறில்லை. அவர்களைப் பொறுத்த வரை

மக்கள்தான் துரோகிகள்.



http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=6911843210538260

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.