Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் வாழ்வியல் கருவூலம் பாகம் இரண்டு

Featured Replies

  • தொடங்கியவர்

பொருட்பால் - அரசியல் - இடன் அறிதல் ( Knowing the Place , Du discernement du terrain.)

 

 

தொடங்கற்க எவ்வினையும் ; எள்ளற்க முற்றும்
இடம்கண்ட பின்அல் லது.491

பகைவரை வளைத்தற்குத் (முற்றுகையிடுவதற்கு) தகுந்த இடத்தைத் தெரிந்து கொண்டாலன்றி எத்தொழிலையும் தொடங்கக் கூடாது . அவர் வலிமையற்ற சிறியர் என்று இகழவும் கூடாது .

எனது கருத்து :

இந்த " இடம் " எண்டிற சாமான் எவ்வளவு தூரம் ஒருத்தனை கவிண்டுகொட்டுண வைக்கும் எண்டு சதாம் விசையத்திலை பாத்தன் . ஒழுங்காய் அமெரிக்காவுக்கு தண்ணி காட்டி கொண்டிருந்த சதாம் , சும்மா கிடக்காமல் பக்கத்திலை இருந்த குவைத்துக்குள்ளை காலை வைக்கைப்போய் , கடைசியிலை அந்தாளே பங்கருக்குள்ளை இருக்கவேண்டியதாய் போச்சுது .

Begin no work of war, depise no foe,
Till place where you can wholly circumvent you know.


Ne rien commencer avant d'avoir trouvé le terrain où (l’ennemi) puisse être enveloppé ! Ne pas le dédaigner !

முரண்சேர்ந்த மொய்ம்பி ன்அவர்க்கும்
அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவும் தரும்.492

பகைவரைக்காட்டிலும் வலிமையுள்ள அரசர்க்கும் தக்க காவலையுடைய இடத்தை அடைதல் பல நலன்களை உண்டாக்கும்


எனது கருத்து:

ஒருத்தர் கேம் கேட்டால் அதை வெட்டியாடிற தில் உங்களுக்கு இருந்தாலும் , இடம் பாத்து அடிச்சால் ஆள் அரக்காது . இல்லாட்டில் உங்களுக்கு ஏழரைச்சனிதான் . இதைத்தான் எங்கடை பெரிசுகள் பருவத்தே பயிர் செய் எண்டும் சொல்லியிரிக்கினம் .

Though skill in war combine with courage tried on battle-field,
The added gain of fort doth great advantage yield.


A l'armée dont la force est dissimulée (à l'ennemi), l'appui d'une place fortifiée donne de nombreux avantages.

  • 2 weeks later...
  • Replies 146
  • Views 10.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.493

பகைவரை வெல்லுதற்கேற்ற இடத்தை அறிந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டு, போர்த் தொழிலைச் செய்தால் , வலிமை இல்லாதவரும் வலிமையடைந்து வெற்றி பெறுவர் .

எனது கருத்து :

இதுக்கு செரியான உதாரணம் உலகத்திலை இருக்கிற விடுதலை இயக்கங்களின்ரை போராட்ட முறையான கெரில்லாத் தாக்குதல்தான் . குறைஞ்ச மனிதவளத்தோடை இடம்பாத்து அடிக்கிறது . அதிலை நாங்கள் மாஸ்ரர் டிக்கிறி செய்தனாங்கள் கண்டியளோ.

E'en weak ones mightily prevail, if place of strong defence, They find, protect themselves, and work their foes offence.

Même une faible armée acquiert la force de vaincre, si elle se fait protéger et combat l'ennemi sur unterrain reconnu propice.

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின். 494

பாதுகாப்பாயுள்ள இடத்தைப் பொருந்தி நின்று போர் செய்வாராயின் , அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தைக் கைவிடுவர் .

எனது கருத்து :

ஒருத்தரை அடிக்கமுதல் அவற்றை வேலையளை புலன்ஆய்வு செய்து முற்றுகை இட்டால் ஆள் சரண்டர் ஆகவேண்டியதுதான் .

The foes who thought to triumph, find their thoughts were vain,
If hosts advance, seize vantage ground, and thence the fight maintain.


Les Rois) qui ont choisi leur position et attaquent, couverts par une place fortifiée, font perdre à l'ennemi, l'espoir de vaincre.

  • தொடங்கியவர்

நெடும்புனலுள் வெல்லும் முதலை;
அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற.495

முதலை ஆழமுள்ள நீர்நிலையில் பிற உயிர்களை வெற்றி கொள்ளும் .அந்நீர் நிலையை விட்டு அது நீங்குமாயின் அம்முதலையையை பிற உயிர்கள் வென்று விடும்.

எனது கருத்து:

உண்மைதான் கண்டியளோ . உலகத்திலை இருக்கிற சர்வாதிகாரியளுக்கு அவையின்ரை அடிபொடியள்தான் பலம் . எங்கை ஒருநாள் சனத்தோடை சனமாய் நிக்கச்சொல்லுங்கோ , அடிச்சே கொண்டுபோடுவங்கள் , கொலனல் கடாபிக்கு நடந்தமாதிரி .

The crocodile prevails in its own flow of water wide,
If this it leaves, 'tis slain by anything beside.


Dans une eau profonde, le crocodile triomphe de tous (les êtres vivants); s'il s'en écarte (tous les êtres vivants) ont raison de lui.

கடல்ஓடாக் கால்வல் நெடுந்தேர்; கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து. 496

நிலத்தில் இயங்கும் வலிமையான சக்கரங்களையுடைய தேர்கள் கடலில் ஓடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் பூமியில் ஓடமாட்டா .

எனது கருத்து :

புகழ் எண்ட போதையிலை கற்பனையான விசயத்தை உண்மை எண்டும் , உண்மையான விசயத்தை கற்பனை எண்டும் முடிவுகட்டி , காரியத்திலை இறங்கி கவிண்டு கொட்டுண்டு போன ஆக்களை நான் கன இடத்திலை பாத்திருக்கிறன் .

The lofty car, with mighty wheel, sails not o'er watery main,The boat that skims the sea, runs not on earth's hard plain.

Les grands chars qui ont des roues puissantes pour rouler sur terre pleine ne peuvent rouler sur l'océan, de même les vaisseaux qui parcourent la mer ne peuvent voyager sur terre.

  • தொடங்கியவர்

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா, எஞ்சாமை எண்ணி

இடத்தால் செயின். 497

குறைவற ஆராய்ந்து, தமக்கு ஏற்ற இடத்தோடு பொருந்தச் செய்வாராயின் அரசர்க்குத் தமது மனத்திண்மையே அன்றி வேறு துணை வேண்டுவதில்லை .

எனது கருத்து :

இது ஒருவகையிலை ஒருத்தரை பப்பாவிலை ஏத்திறமாதிரி . ஏனெண்டால் ஒருத்தரை விழுத்த அஞ்சாமை எண்டிற பயப்பிடாத குணம் மட்டும் காணாது . கடைசிவரை உயிரைகொடுக்கிற படைத்தளபதியள் வேணும் . அவையளை எதிரி விலைக்கு வாங்கீட்டால் கதை கந்தல் கண்டியளோ .

Save their own fearless might they need no other aid,
If in right place they fight, all due provision made.


Celui qui engage la bataille, après avoir arrêté son plan sur tous les moyens de combattre l'ennemi et avoir bien choisi ses positions, n'a pas besoin de secours autre que sa propre valeur.

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும். 498

பகைவன் சிறுபடையுடையவனாயினும் தக்க இடத்தில் பொருந்தியிருந்தால் பெரும்படையுடைய அரசன் தன் முயற்சியில்தோல்வியடைவான் .

எனது கருத்து :

இந்தக் குறள் இந்தக்காலத்திலை எடுபடாது . எப்பிடியெண்டால் நாங்கள் சிங்களத்தோடை ஒப்பீட்டளவிலை சிறிய படைதான் . ஏன் வெல்லாமல் போனம் ?? ஏனெண்டால் இண்டைக்கு உலகம் எண்டது கிராமமாய் போச்சுது .

If lord of army vast the safe retreat assail
Of him whose host is small, his mightiest efforts fail.


Celui qui a une puissante armée, s'il va combattre chez lui un roi, qui n'a qu'une faible armée, perd sa réputation, grâce à celui-ci.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. 499

அரணின் வலிமையும் ஆற்றலும் இல்லாதவராயினும் அம்மாந்தரை அவர்கள் வாழுகின்ற இடத்தில் சென்று தாக்குதல் இயலாது .

எனது கருத்து:


சிவசத்தியமாய் ஐயன் என்ன சொல்ல வாறியள் ??? போரியலிலை அரிச்சுவடியே சிங்கத்தின்ரை குகைக்குள்ளை போய் ஹாய் மச்சான் எண்டு கேக்கிறதுதானே போர் ?? நிண்ட இடத்திலை நிண்டு கொண்டு எப்பிடி ஐயன் போர் செய்யிறது ??

Though fort be none, and store of wealth they lack, 'Tis hard a people's homesteads to attack!

Il est difficile d'attaquer chez elles, des troupes ennemies, même si elles n'ont pas la force de résister et une fortresse indestructible.

 

  • தொடங்கியவர்

கால்ஆழ் களரில் நரிஆடும் ; கண்ணஞ்சா
வேல்ஆள் முகத்த களிறு. 500

வேல் வீரர்களைக் கண்டு அஞ்சமால் எதிர் நின்று தாக்கியழித்த யானையாயினும், கால் அழுந்தி விடும் சேற்று நிலத்தில் அது சிக்கிக்கொண்டால் அதனை நரியும் கொன்று விடும் .

எனது கருத்து :

யானை ஏலாமல் படுத்திருந்தால் சுண்டெலியும் யானைக்கு கிட்டப் போய் ரெண்டு கடி கடிச்சு , ஹவ் யூ மச்சான் எண்டு கேக்குமாம் .

The jackal slays, in miry paths of foot-betraying fen, The elephant of fearless eye and tusks transfixing armed men.

L'éléphant fougueux qui n'obéit pas à son connac et fait intrépidement face à une multitude armée de javelles, est à la merci d'un chacal, s'il s'enfonce dans un terrain bourbeux.

  • தொடங்கியவர்

பொருட்பால் - அரசியல் - தெரிந்து தெளிதல் ( Selection and Confidence , S’éclairer après expérimentation. 501 -510)

 

அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும். 501

ஒருவனை அறம் , பொருள் , இன்பம் , உயிர் பொருட்டால் அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையிலும் ஆராய்ந்து தக்கவனாயின் அவனை நம்புதல் வேண்டும் .

எனது கருத்து:

இந்தக்குறளை படிக்கேக்கை எனக்கு ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகுது . அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் இந்த நாலையும் வெண்ட ஒரு படையணி எங்களிட்டை இருந்தது . உலகத்தையே திரும்பி பாக்க வைச்சம் . ஏன் நாங்கள் தோத்துபோனம் ??? எனக்கு இண்டுமட்டும் விளங்கேலை !!!!!!!!

How treats he virtue, wealth and pleasure? How, when life's at stake,
Comports himself? This four-fold test of man will full assurance make.


Que celui qui a satisfait aux quatre épreuves suivantes: l'amour de la vertu, l'or. la luxure et la crainte pour la vie, soit choisi (par le Roi).

 

 

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாண்உடையான் சுட்டே தெளிவு. 502

நல்ல குடியில் பிறந்து , குற்றங்களில் இருந்து நீங்கிப் பழிச்செயலைச் செய்ய அஞ்சி நாணுகின்றவனையே நம்பி வேலையைக் கொடுக்கலாம் .

எனது கருத்து:

இந்தக்காலத்திலை இப்பிடி ஒருத்தரையும் நான் காணேலை . பதவிக்கு தெரிவு செய்யிறதே நல்ல முசுப்பாத்தியாய் போச்சு . பந்தம் பிடிக்கிறவையும் சிங்சக் அடிக்கிறவையும் தான் இண்டைக்கு பதவியளிலை இருக்கினம் கண்டியளோ .

Of noble race, of faultless worth, of generous pride
That shrinks from shame or stain; in him may king confide.


Que le choix s'arrête sur celui qui sst de bonne naissance, dégagé de vices, plein de retenue et qui craint le déshonneur.

 

 

  • தொடங்கியவர்

அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
இண்மை அரிதே வெளிறு. 503

அறிவுக்குரிய நூல்கள் பலவற்றைப் படித்துக் குற்றங்கள் இல்லாமல் இருப்பவரிடத்திலும் ஆராய்ந்து பார்த்தால் சில அறியாமைகள் இருக்கும்

எனது கருத்து:

இதை இப்படியும் சொல்லலாம் " படிச்ச கோமாளியள் " எண்டு . சிலபேரைபாத்தியள் எண்டால் பெரியபட்டங்களெல்லாம் பின்னாலை கொழுவி , எந்தநேரமும் தங்களைபற்றி கதைக்காட்டிக்கு அவைக்கு திண்ட சாப்பாடு செமிக்காது . ஆனால் அவையின்ரை நடவடிக்கையளை வடிவாய் பாத்தியள் எண்டால் , எலிமெண்டறி பிள்ளையள் அளவுக்கு படு கேவலமாய் இருக்கும் .

Though deeply learned, unflecked by fault, 'tis rare to see,
When closely scanned, a man from all unwisdom free.


Même parmi ceux qui ont une rare instruction, et qui sont dégagés de tous les défauts, (ci dessus spécifiés), il est rare de ne pas trouver de sots, si l'on se livre à un examen minutieux.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். 504

ஒருவருடைய குணம் குற்றம் ஆகிய இரண்டையும் ஆராய்ந்து , அவற்றுள் மிக்கது எதுவோ அதனால் அவரை நல்லவர் என்றோ தீயவர் என்றோ கொள்ள வேண்டும்.

எனது கருத்து:

இப்படியான ஆக்கள் இந்தக்காலத்திலை இல்லை எண்டே சொல்லலாம் கண்டியளோ . ஒருத்தன் கொஞ்சத் நல்லாய் பிரதிபலிக்கமாய் இருக்கிறது எங்கடையாக்களுக்கு ஒத்து வராது பாருங்கோ . ஒருத்தன் கொஞ்சம் சறுக்கினால் காணும் அவன்ரை நல்ல பக்கத்தை விட்டுட்டு இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி அவனை ஒருவழி பண்ணி போடுவங்கள் எங்கடையாக்கள் . இதாலை நல்லவன் நல்லது செய்ய யோசிப்பான் . அதாலை இந்தக் குறள் இப்ப உள்ள நிலமையிலை சரிப்பட்டவராது எண்டுதான் நான் நினைக்கிறன் .

Weigh well the good of each, his failings closely scan,
As these or those prevail, so estimate the man.


Peser les qualités et les défauts d'un homme Choisir d'après ce qui l'emporte.

 

  • தொடங்கியவர்

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். 505

ஒருவருடைய பெருமையை அறிவதற்கும் சிறுமையை அறிவதற்கும் அவர் செய்யும் செயலே தக்க உரைகல்லாகும்.

எனது கருத்து:

இதிலை ஐயன் சொல்லவாறதிலை எனக்கு உடன்பாடில்லை பாருங்கோ . ஒருத்தன் நல்லவனோ கெட்டவனோ எண்டு அறியிறது சந்தர்ப்பமும் சூழ்நிலையும் , அவனை மற்றவை பாக்கிற கண்ணோட்டத்தை பொறுத்தே ஒழிய ,தனிய செயலை மட்டும் தான் இல்லை பாருங்கோ . தனிய செயலை மட்டும் தான் பாக்கிறதெண்டால் சேணங் கட்டின குதிரையாய் தான் இருக்கேலும் .

Of greatness and of meanness too,
The deeds of each are touchstone true.


Ce sont les propres actes d'un homme qui sont la pierre de touche de sa bonne et de sa mauvaise réputation.

அற்றாரைத் தேறுதல் ஓம்புக; மற்றுஅவர்
பற்றுஇலர் நாணார் பழி.506

சுற்றம் இல்லாதவரை அரசன் நம்பித் தெளியக்கூடாது. அவர் உலகில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு அஞ்சமாட்டார் .

எனது கருத்து:

இந்தக் குறளை பாக்கிற நேரம் எனக்கு தமிழகத்திலை இப்ப இருக்கிற அரசியல் நிலமையள்தான் ஞாபகம் வருகிது . ஒரு கட்சியிலை இந்தக் குறளுக்கு கருத்துரை எழுதின முக , தலைவர் . மற்றப்பக்கம் உறவுகள் சுற்றங்கள் அற்ற ஜெ தலைவி . இதிலை யாருடைய செயல்களால் தமிழகம் நிமிர்ந்தது ???? ஒருசெயலை செய்வதற்கு எப்பவுமே சுற்றம் உறவுகள் தடையாகத் தான் இருக்கும் எண்டு நினைக்கிறன் . அதோடை பழிக்கு அஞ்சினால் எப்படி ஒரு செயலை செய்யிறது ????

Beware of trusting men who have no kith of kin;
No bonds restrain such men, no shame deters from sin.


Renoncer à choisir ceux qui n'ont pas de parents: ils n'ont aucune attache avec le monde, donc ils ne craignent pas le déshonneur.

 

  • தொடங்கியவர்

காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.507

அன்புடமை ஒன்றையே பற்றுக் கோடாக கொண்டு அறியவேண்டுவனவற்றை அறியாதாரை நம்புதல் அரசனுக்குத் துன்பத்தையே விளைவிக்கும் .

எனது கருத்து:

இதுக்கு என்னத்தைச் சொல்ல .........  ஒரு பதவியை எடுக்கிறதுக்கு எவை திறமை அடிப்படையிலை வருகினம் ??? எல்லாம் காசுகளை பின்னாலை தள்ளியும் , றெக்கமண்டேசனுகளாலையும் தானே வருகினம் பாருங்கோ . அப்பிடி பதவிக்கு வாறவையளாலை பதவிக்கு பெருமை இல்லை கண்டியளோ , அவமானம் தான் மிச்சம் .

By fond affection led who trusts in men of unwise soul,Yields all his being up to folly's blind control.

Choisir ceux qui ne savent pas ce qu'il faut savoir, uniquement à cause de l'affection qu'il a pour eux, conduit ( le Roi ) à faire toutes les sottises

தேராண் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். 508

தான் அறியாத ஒருவனை ஆராய்ந்து பாராமல் நம்பிய அரசனுக்கு அத்தெளிவு பின்வரும் தலைமுறையிலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்

எனது கருத்து:

இது எல்லாம் இப்ப சரிவராது ஐயன் . கேடுகெட் ட காசும் காலமும் சேர்ந்தால் ஒரு கோமாளியை கூட பதவியிலை வைக்கலாம் . உங்கடை காலத்திலை சனங்கள் நல்லதுகளாய் இருக்கலாம் ஆனால் இப்ப அப்பிடியில்லை . சனங்கள் இப்படியான கோமாளியளின்ரை துன்பங்களுக்கு பழகிப் போயிட்டுதுகள்

Who trusts an untried stranger, brings disgrace,Remediless, on all his race.

Le choix de quelqu'un qui est étranger à soi sous tous les rapports, crée même à la postérité des maux irréparables.

  • தொடங்கியவர்

தேறற்க யாரையும் ; தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். 509

அரசன் எவரையும் ஆராய்ந்து பாராமல் தெளிதல் கூடாது .ஆராய்ந்து தெளிந்த பின்னர் அவர்பால் ஒப்படைக்கும் பணிகளை நம்பித் தெளிதல் வேண்டும் .

எனது கருத்து:

எப்பவும் வெளுத்ததெல்லாம் பால் எண்டு இருக்காமல் நாலுவளத்தாலையும் யோசிச்சு ஒருத்தரை வேலைக்கு எடுக்கவேணும் எண்டும் , பேந்து அவையிலை ஐமிச்சப்படக்கூடாது எண்டும் சொல்லுறியள் . நல்லவிசையம்தான் . ஆனால் ஐயன் இப்ப நம்பினவனுகே ஆப்படிக்கிற காலம் கண்டியளோ . என்னதான் இருந்தாலும் ஒரு கண் எப்பவும் முழிப்பாய் இருக்கவேணும் பாருங்கோ .

Trust no man whom you have not fully tried,
When tested, in his prudence proved confide


Né jamais choisir avant d'avoir éprouvé. Ne choisir que celui qui a satisfait à l'épreuve.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். 510

ஒருவனை ஆராயாமல் நம்புதலும் , ஆராய்ந்து நம்பிக்கை வைத்தவனிடம் சந்தேகப்படுதலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் .

எனது கருத்து:

என்னைபொறுத்தவரையிலை ஒருத்தரை என்னதான் ஆராஞ்சு பதவிக்கு எடுத்தாலும் , அவருக்குமேலை அவருக்குத் தெரியாமல் ஒருகண் இருக்கத்தான் வேணும் பாருங்கோ . இல்லாட்டில் நாங்கள் இருக்கமாட்டம்.


Trust where you have not tried, doubt of a friend to feel,
Once trusted, wounds inflict that nought can heal.


Choisir sans épreuve préalable et suspecter celui qui a été choisi, après épreuve : tous les deux conduisent à des malheurs irréparables.



 

  • தொடங்கியவர்

பொருட்பால் - அரசியல் - தெரிந்துவினையாடல் ( Selection and Employment Selection d’employes 511-520)

 

 

employee-screening-and-selection-68.jpg

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். 511

ஒரு செயலால் வருகின்ற நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து , நல்லதைச் செய்யும் தன்மை உடையவனையே அந்தச் செயலுக்குப் பயன்படுத்த வேண்டும் .

எனது கருத்து :

இந்தக்காலத்திலை ஒருத்தரிட்டையும் நூறுவீதம் நம்பி அலுவலைக் குடுக்கேலாது கண்டியளோ . எப்ப எங்கை அலுவலைக் குடுத்த உங்களுக்கே ஆப்படிப்பங்கள் எண்டு தெரியாது . எப்பவும் ஒரு மூண்டவது கண் அலுவலைக் குடுத்தவையிட்டை வைக்கவேணும் எண்டிறது இந்தக்காலம் ஐயன் . இதை நாங்கள் எங்கடை தேசியவிடுதலைப் போராட்டத்திலை கண்டு தெளிஞ்சிட்டம் .

Who good and evil scanning, ever makes the good his joy;
Such man of virtuous mood should king employ.


N'employer à son service que celui qui (dans un cas déterminé) a pesé le pour et le contre et qui a eu le bon esprit de s'arrêter au moyen susceptible d'assurer !e succès.

 

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் , தொடருங்கள் .

  • தொடங்கியவர்

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.512

பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து , அவற்றால் வளத்தை ஏற்ப்படுத்தி , மேற்கொண்டு இடையூறுகளை நீக்க வல்லவனே செயலைச் செய்வானாக.

எனது கருத்து :

ஊரிலை பெரிசுகள் சொல்லுவினம் , " முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையிலை தெரியுமெண்டு " . ஒருதன் எப்பிடி வேலை செய்யவேணுமெண்டால் , வருவாயை பெருக்குறதோடை இல்லாமல் அதிலை வாற பிரச்சனையளையும் வெட்டியாடிற தில் உள்ளவனாய் இருக்கவேணும் . இப்ப வேலைக்குவாறவை தாங்கள் படிச்ச படிப்புகளை கிளிப்பிள்ளைமாதிரி சொல்லி , அனுபவப்பட்டவங்கள் சொல்லுறதை கேக்கிற நிலமையள் இந்தக்காலத்திலை குறைஞ்சு போச்சு பாருங்கோ .

Who swells the revenues, spreads plenty o'er the land,
Seeks out what hinders progress, his the workman's hand


Que celui qui a la capacité d'élargir les moyens des revenus, d'augmenter ainsi la prospérité (du Royaume), de découvrir et d'annihiler les obstacles qui l'empêchent serve (le Roi).

 

  • தொடங்கியவர்

அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்
நன்குஉடையான் கட்டே தெளிவு.513

அன்பு , அறிவு , ஐயம் இல்லாமல் தெளியும் தெளிவு , அவா இல்லாமை ஆகிய இந்நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனை , செயல்களை ஆற்றுமாறு தெளியலாம் .

எனது கருத்து :

ஐயன் நல்ல விசயத்தைத் தான் சொல்லியிருக்கிறியள் . ஆனால் பாருங்கோ , இந்த பதவி நாற்காலி எண்டது எந்த ஒரு நல்லவனையும் ஒரு ஆட்டு ஆட்டித்தான் விடும் . எல்லாரும் பதவிக்கு வரும் வரைக்கும்தான் பம்முவினம் பேந்து அவையின்ரை கால் நிலத்திலை இருக்காது . மிதப்பாய்த்தான் திரிவினம் . எத்தினை அரசியல்வாதியளையும் , பெரிய பதவியளிலை இருக்கிறவையையும் நாங்களும் நாளந்தம் பாக்கிறம்தானே !!

A loyal love with wisdom, clearness, mind from avarice free;
Who hath these four good gifts should ever trusted be.


Il est intelligent de ne choisir à son service que celui qui possède d'une manière parfaite les quatre qualités que voici: l'affection, l'intelligence, la décision et l'absence de cupidité.

  • தொடங்கியவர்

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறுஆகும் மாந்தர் பலர். 514

எல்லா வகையாலும் தெளிந்த பிறகும் அவ் வினையின் இயல்பால் வேறுபடும் மாந்தர் உலகில் பலராவர் .

எனது கருத்து :

ஆரோ உங்களுக்கும் ஆப்படிச்சு போட்டான் போலை கிடக்கு . இப்பிடி நொந்துபோய் சொல்லுறியளே ஐயன் ?? உங்கடை காலத்திலையும் இப்பிடியான ஆக்கள் இருந்திருக்கிறாங்கள் எண்டதை ஒத்துக் கொள்
ழு
றியள் தானே ஐயன் ??

Even when tests of every kind are multiplied,
Full many a man proves otherwise, by action tried!


Nombreux sont ceux qui. après avoir satisfait à toutes les épreuves, après avoir été chosis pour servir, changent de caractère dans l'exercice de leurs fonctions.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தான்என்று ஏவற்பாற்று அன்று. 515

செய்யும் செயலை நன்கு அறிந்து இடையூறுகளைத் தாங்கிச் செய்பவனைத் தவிர இவன் அன்பிற் சிறந்தவன் என்று யாரும் வேலை தரக்கூடாது.

எனது கருத்து :

உங்கடை கருத்திலை நான் உடன்பட்டாலும் , கூலிக்கு மாரடிக்கிறவையிட்டை எப்பிடி நாங்கள் உண்மையான விசுவாசத்தை எதிர்பார்க்கேலும் ???

No specious fav'rite should the king's commission bear,
But he that knows, and work performs with patient care.


Ne peut être employé que celui qui connaît les devoirs de sa charge et s'efforce de s'en acquitter avec patience et non celui qui a seulement de l'affection (pour l'employeur).

 

  • தொடங்கியவர்

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல். 516

செய்பவனைப் பற்றி நன்கு ஆராய்ந்து செய்யும் செயலையும் ஆராய்ந்து தக்க காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து அவனிடம் ஒப்புவிக் வேண்டும்.

எனது கருத்து :

இதைத்தான் "பெரிசுகள்சொல்லுறவை காலம் , இடம் , பொருள் , ஏவல் பாத்து ஒரு அலுவலை செய்யவேணும்" எண்டு . ஆனால் இப்பிடியெல்லாம் யோசிச்சு வலு கிளியறாய் கிட்டமுட்ட 2 சந்ததியிளை துலைச்ச எங்கடை போராட்டம் ஏன் ஐயன் தோத்தது ???

Let king first ask, 'Who shall the deed perform?' and 'What the deed?'
Of hour befitting both assured, let every work proceed.


D'abord examiner la capacité de l'homme et la nature du service, puis choisir le moment propice à l'employer; enfin charger l'homme ainsi éprouvé, du service.

 

  • தொடங்கியவர்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல். 517

' இந்தத் தொழிலை இக்காரணங்களால் இவன் முடிப்பான் ' என்று ஆராய்ந்த பிறகு அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் .

எனது கருத்து :

என்னதான் ஒருத்தர் ஆள் பொருள் படையணியளோடை ஒரு வேலையிலை இறங்கினாலும் அந்தவேலை நடைமுறை யதார்த்தோடை ஒத்து ஓடுதா எண்டும் பாக்கவேணும் . அப்பிடி ஒத்து ஓடாத எந்த வேலையும் உருப்பட்டதாய் சரித்திரம் இல்லை .

'This man, this work shall thus work out,' let thoughtful king command;
Then leave the matter wholly in his servant's hand;


Se convaincre d'abord qu'un tel a l'aptitude de remplir telle charge, par tel moyen approprié ; lui confier ensuite la responsabilité de la charge.

 

  • தொடங்கியவர்

வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை
அதற்குஉரியன் ஆகச் செயல். 518

இவன் இந்த வேலைக்குத் தகுந்தவன் என்று ஆராய்ந்து கண்டபிறகே அவனை அத்தொழிலுக்கு உரியவனகச் செய்யவேண்டும் .

எனது கருத்து :

இது எங்கை ஐயன் நடக்குது ?? கன இடங்களிலை பொம்மையள்தான் பதவியிலை இருக்கு . ஒருத்தரும் தன்ரை பதவியின்ரை அதிகாரத்தை செய்யுறதுக்கு அரசியலும் காசுமல்லோ குறுக்காலை நிக்கிது !!!!

As each man's special aptitude is known,
Bid each man make that special work his own.


Jugez-vous, après examen, qu'un tel a les aptitudes à remplir telle charge, n'hésitez pas à le promouvoir à cet emploi.

  • தொடங்கியவர்

வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக
நினைப்பானை நீங்கும் திரு. 519

எப்போதும் தன் தொழில் முயற்சி உடையவரது நட்பினைப் பாராட்டாமல் வேறாக நினைப்பவனிடமிருந்து செல்வம் நீங்கும் .

எனது கருத்து :

இதுதானே எல்லா இடத்திலையும் நடக்குது !!! இதை நாங்கள் " நண்டு குணம் " எண்டும் சொல்லுவம் . ஒருத்தன் தன்ரை வேலையை சரியா செய்தால் , ஒண்டில் அவனை " துரோகி " எண்டு சொல்லுவம் அல்லது " ஒட்டுக்குழு " எண்டும் சொல்லுவம் .

Fortune deserts the king who ill can bear,
Informal friendly ways of men his tolls who share.


La Fille de Dieu (déesse de la Fortune) se sépare du Roi qui suspecte la conduite irréprochable de celui qui s'efforce de bien faire son service.

  • தொடங்கியவர்

நாடோறும் நாடுக மன்னன் ; வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு. 520

தொழில் செய்கின்றவன் தன் கடமையைச் சரிவரச் செய்வானாயின் உலகம் கெடாது .ஆதலால் மன்னன் நாள்தோறும் அத்தகையவனைக் கவனித்து வரவேண்டும் .

எனது கருத்து :

அதாவது " அரசன் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழி " எண்டு சொல்லிறியள் . ஆனால் பாருங்கோ பதவியிலை இருக்கிறவை பிழையளை விட்டுக்கொண்டு , கீழை இருக்கிறவை ஒழுங்குமுறையாய் இருக்கவேணும் எண்டு நினைக்கிறதுதான் இப்ப உள்ள நடைமுறை பாருங்கோ .

Let king search out his servants' deeds each day;
When these do right, the world goes rightly on its way.


Si le fonctionnaire ne dévie pas de ses devoirs, le monde ne déviera pas de sa marche normale. Que le Roi surveille tous les jours et étroitement le fonctionnaire!


 

  • தொடங்கியவர்

பொருட்பால் - அரசியல் - சுற்றம் தழால் , Cherishing one's Kindred , S'attacher aux parents ,520 -530)

 

 

jeune-pousse.jpg

 

பற்றுஅற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. 521

ஒருவர் செல்வத்தை இழந்து வறியவனாய் வாழும் போதும் தமக்கும் அவனுக்கும் உள்ள உறவுகளைக் கொண்டாடும் இயல்புகள் சுற்றத்தாரிடமே உள்ளன .

எனது கருத்து :

இண்டையான் திகதியிலை இருக்கிற சுற்றங்கள் எல்லாம் ஒருத்தனின்ரை பறியிலை எவ்வளவு இருக்கு எண்டு பாத்து பழகிற ஆக்கள் . ஏன் பெத்த அம்மாவே காசு உள்ள மகனிட்டை ஒருமாதிரியும் , காசு இல்லாத மகனிட்டை ஒரு மாதிரியும் பழகிற கலிகாலம் . இதிலை நாங்கள் கஸ்ரப்பட்ட நேரம் எங்கடை சொந்தங்கள் எங்களைப் பத்தி நல்லாய் கதைப்பினம் எண்டு எதிர்பார்க்கிறது பிழையானவேலை கண்டியளோ .

When wealth is fled, old kindness still to show,
Is kindly grace that only kinsmen know.


Témoigner l'ancien attachement, à celui qui est abandonné par la fortune ne se rencontre que chez les parents.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

விருப்புஆறாச் சுற்றம் இயையின் அருப்புஆறா
ஆக்கம் பலவும் தரும். 522

அன்பு அழியாத நல்ல சுற்றம் ஒருவனுக்கு வாய்க்குமாயின் அஃது அவனுக்கு குறைவில்லாத செல்வங்கள் பலவற்றையும் தரும்.

எனது கருத்து :

இப்பிடியான சீவியம் முந்தி ஒருகாலத்திலை இருந்தது உண்மைதான் . ஆனால் இப்ப ஒருத்தன் கொஞ்சம் சறுக்கினாலும் ஆப்படிக்கத்தான் சனங்கள் ஒருத்தனை சுத்தி இருக்கினம் பாருங்கோ .

The gift of kin's unfailing love bestows
Much gain of good, like flower that fadeless blows


Avoir une parenté dont l'affection n'est pas brisée, donne de nombreux biens de plus en plus productifs.

  • தொடங்கியவர்

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடுஇன்றி நீர்நிறைந் துஅற்று. 523

சுற்றத்தாருடன் மனம் கலந்து பழகாதவனுடைய வாழ்வு குளப்பரப்பு கரையில்லாமல் நீர் நிறைந்தாற்போல வீணே அழியும்.

எனது கருத்து :

சொந்தபந்தங்களோடை வேணும் விளையும் எண்டு பழகாதவனின்ரை சீவியம் , கரையில்லாத குளத்திலை தண்ணி இருக்கிறமாதிரி வேஸ்ற் எண்டு சொல்லுறியள் . நல்ல விசையம் , ஆனால் ஒரு பக்கம் மட்டும் அப்பிடி நடந்து என்ன பிரையோசனம் ?? கேணைப்பயல் எண்டு நினைக்கமாட்டினமோ ஐயன் ??

His joy of life who mingles not with kinsmen gathered round,
Is lake where streams pour in, with no encircling bound.


La vie de celui qui ne chérit pas sincèrement ses parents, ressemble à un étang sans berges qui se remplit (d'eau.)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.