Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதம நீதியரசரைக் குற்றவாளியாக்கி தண்டிக்கும் அதிகாரம் ஏதும் தெரிவுக்குழுவுக்கு இல்லை; மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அதிரடித் தீர்ப்பு

Featured Replies

பிரதம நீதியரசரைக் குற்றவாளியாக்கி தண்டிக்கும் அதிகாரம் ஏதும் தெரிவுக்குழுவுக்கு இல்லை; மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அதிரடித் தீர்ப்பு
download%20(1).jpg

 

பிரதம நீதியரசரைக் குற்றவாளி என அறிவித்து அவரைத் தண்டிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு இல்லை என்ற உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானத்தை நேற்று அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதம நீதியரசரின் "ரிட்' மனுவை எதிர்வரும் 15ஆம் திகதிவரை ஒத்திவைத்தது. 
 
தமக்கு எதிரான குற்றப்பிரேரணையை விசாரணை செய்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை அமுலாக்கத்திற்கு இடைக்காலத் தடையுத்தரவைக் கோரி பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த "ரிட்' மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
ஸ்ரீஸ்கந்தராஜா, அனில் குணரத்ன, டபிள்யூ.சலாம் ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது.
 
இதன்போது நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் 78 (ஏ) பிரிவுக்கமைய நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு சட்டபூர்வமானதா என மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் உயர்நீதிமன்றத்திடம் கோரப்பட்டிருந்த விளக்கத்திற்கு உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த சட்டவியாக்கியானத்தையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.
 
அதில், நாடாளுமன்ற நிலையியற் கட்டளையை சட்டமாக ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, அந்த நிலையியற் கட்டளையின் 78 (ஏ) பிரிவுக்கமைய நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு சட்ட அதிகாரம் கொண்டதல்ல என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 
அத்துடன், உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானத்தில் உயர்நீதிமன்றம் அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றம் நீதியரசருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை சட்ட அதிகாரம் கொண்ட நிறுவனமே விசாரிக்கவேண்டும். இல்லையேல், அது நீதியரசரின் உரிமை மற்றும் நீதிமன்ற கட்டமைப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்தது. 
 
இந்த அடிப்படையில் பிரதம நீதியரசரொருவரைக்  குற்றவாளியாக அறிவித்து அவரைத்  தண்டிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கில்லை என்பது தற்போது சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
"ஒரு நீதியரசரின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தவறான நடத்தை அல்லது தகுதியின்மை சம்பந்தமாகவும் அது தொடர்பான சகல விடயங்கள் தொடர்பாகவும் விசாரிப்பதற்கு ஒரு மன்றினை நிறுவுதல், குற்றச்சாட்டுக்களை நிரூபித்தல், நிரூபண முறை, நிரூபணம் செய்வதற்கான பொறுப்பு, நிரூபணத்தின் தரம் முதலியவை அரசியல் சாசனத்தின் 107(3)ஆம் சரத்திற்கமைய சட்டத்தினால் ஏற்பாடு செய்வது கட்டாயமான தேவை'' என்ற அரசியல் சாசன வியாக்கியானத்தை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் காமினி அமரதுங்க, க.ஸ்ரீபவன், பிரியசாத் டெப் ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம், முன்னதாக வழங்கியிருந்தது. இதனையே மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அறிவித்து உறுதிப்படுத்தியது. 
 
சபாநாயகரின் அறிவிப்பு
 
எனவே, உயர்நீதிமன்றத்தின் மேற்படி சட்டவியாக்கியானத்துக்கு எதிர்வரும் 8ஆம் திகதி சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றில் பதிலளிப்பார் என்றும், நாடாளுமன்ற அனுமதியின்றி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராக எம்.பிக்கள் இருவருக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அறிவிப்பார் என்றும் அறியமுடிகின்றது.
 
அதேவேளை, தெரிவுக்குழு விசாரணை அறிக்கைக்கு இடைக்கால தடையுத்தரவு கோரி பிரதம நீதியரசர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
முன்னர், கடந்த மாதம் 21ஆம் திகதி மேற்படி "றிட்' மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்த சபாநாயகர், நாடாளுமன்றச் செயலாளர் நாயகம், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த 11 உறுப்பினர்கள் ஆகியோரை ஜனவரி மாதம் 3ஆம் திகதி (நேற்று) நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அறிவித்தல் விடுத்தது. 
 
எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அறிவிப்பை அரச தரப்பினரும், பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. உறுப்பினர்களும்  நிராகரித்தனர். நாடாளுமன்றை வெளி நிறுவனங்களால் சவாலுக்குட்படுத்த முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
 
ஆனால், தெரிவுக்குழுவில் இடம்பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகியவற்றின் உறுப்பினர்கள் நீதிமன்றின் அறிவிப்பை ஏற்று மன்றில் ஆஜராகினர்.
 
ஜே.வி.பியின் சார்பில் தெரிவுக்குழுவில் இடம்பெற்ற விஜித்த ஹேரத் எம்.பியும்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதில் இடம்பெற்ற சம்பந்தன் எம்.பிக்குப் பதிலாக அவரது சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜரானார். சம்பந்தன் எம்.பி. வைத்திய சிகிச்øசபெற்று வருகின்றமை தெரிந்ததே.
 
அரசியல் பிரமுகர்கள் படையெடுப்பு
அதேவேளை, பிரதம நீதியரசர் தாக்கல் செய்து மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அரசியல் பிரமுகர்கள் பலர் அங்கு சென்றிருந்தனர்.
 
முஸ்லிம்  தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலி, நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, ஐக்கிய சோஷலிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் கலாநிதி நல்லையா குமரகுருபரன், நவசிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர, ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் ஸ்ரீமால் அப்புஆராச்சி ஆகியோர் நீதிமன்றம் சென்றிருந்தனர்.
 
ஐ.தே.க. எம்.பிக்களும் விஜயம்
மேன்முறையீட்டு நீதிமன்ற அறிவிப்பை ஐ.தே.க. ஏற்காதபோதிலும் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அக்கட்சியின் எம்.பிக்களான கரு ஜயசூரிய, அஜித் பெரேரா, தயாசிறி ஜய÷சகர, பாலித ரங்கே பண்டார ஆகியோர் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தனர். 
 
நாடாளுமன்றத் தெரிவுக்குழு தனக்கு மட்டுமே கட்டுப்படும் கடப்பாட்டைக் கொண்டது எனவும், அதன் செயற்பாடுகளில் எந்தவொரு வெளி நிறுவனமும் தலையீடு செய்யமுடியாது என்றும் சபாநாயகர் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், தெரிவுக்குழு சட்ட வலுவற்றது என அறிவித்து நீதியரசரைக் குற்றவாளியாக அறிவிக்கும் ஆணை அதற்கில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளமை, சட்டவாக்கத்துக்கும், நீதித்துறைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள அதிகார மோதலை மேலும் வலுவடையச் செய்யும் என நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
சட்டத்தரணிகள் ஆட்÷சபம்
இதேவேளை, நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கனகநாயகம் கனகஈஸ்வரன் உட்பட்ட பல சட்டத்தரணிகள் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அரசியற்சாசனப்படி நியமிக்கப்பட்ட ஒரு மன்று அல்லவென வாதாடி அதற்கு நீண்ட விளக்கங்களையும் முன்வைத்தனர். 
 
""ஒரு நீதியரசரைப் பதவிநீக்கம் செய்வதற்கு அரசியற்சாசனப்படி நியமித்த ஒரு மன்று மட்டும் விசாரித்து ஒரு முடிவை வழங்கலாம். நாடாளுமன்றம் அப்படியான ஒரு மன்றை நிறுவும் சட்டத்தை இதுவரை நிறைவேற்றவில்லø. அப்படியான மன்றை நிறுவி விசாரணை சம்பந்தமான ஒரு சட்டத்தை நிறைவேற்றும்வரை பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை முயற்சி சட்டத்திற்கு ஒவ்வாதது'' எனவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
 
"நாடாளுமன்றத்திற்கு அப்படியான குற்றப்பிரேரணையை விசாரணை செய்யும் அதிகாரம் இல்லை. நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை ஏற்படுத்தி அதற்கான ஒரு மன்றை நிறுவி நாடாளுமன்றத்துக்கு வெளியே இருக்கக்கூடிய அப்படியான ஒரு மன்றால் விசாரணை நடத்தப்பட்டிருக்கவேண்டும்'' என்ற வாதமும் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

http://onlineuthayan.com/News_More.php?id=679391743904321953#

சபாநாயகரின் அறிவிப்பு

 
எனவே, உயர்நீதிமன்றத்தின் மேற்படி சட்டவியாக்கியானத்துக்கு எதிர்வரும் 8ஆம் திகதி சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றில் பதிலளிப்பார் என்றும், நாடாளுமன்ற அனுமதியின்றி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராக எம்.பிக்கள் இருவருக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அறிவிப்பார் என்றும் அறியமுடிகின்றது.

 

 இந்த நடவடிக்கையை முன்னெடுத்தால், மேலும் சர்வதேசத்தின் வெறுப்பை சிங்களம் சம்பாதிக்கும்  :lol:

05012013-md-hr-2%20copy.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.