Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறிவேப்பிலை விலை உயர்வு: கவலைப்படுகிறார் கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை:"அ.தி.மு.க., ஆட்சியில், கறிவேப்பிலை இரு மடங்கு உயர்ந்துள்ளது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:பொங்கல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. விலைவாசி எப்படி குறைந்துள்ளது தெரியுமா? முதல் ரகம் பச்சரிசி ஒரு கிலோ, 2012ல், 32 ரூபாய்; தற்போது, 40 ரூபாய். இரண்டாம் ரக பச்சரிசி, ஒரு கிலோ, 22 ரூபாய்; தற்போது, 30 ரூபாய். பொங்கல் தயாரிக்க தேவையான வெல்லம் ஒரு கிலோ, 2012ல், 35 ரூபாய்; தற்போது 42 ரூபாய்.ஆட்டுக்கறி, 2012ல் ஒரு கிலோ, 320 ரூபாய்; தற்போது, 450 ரூபாய். நாட்டுக் கோழி, 2012ல் ஒரு கிலோ, 220 ரூபாய்; தற்போது, 320 ரூபாய். இரண்டு மாதங்களில், கறிவேப்பிலையின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.

இது தான் அ.தி.மு.க., ஆட்சியின் விலைவாசி நிலைமை. வாங்கும் சக்தி குறைவாகவே உள்ள ஏழை, எளிய நடுத்தர மக்களை, விலைவாசி உயர்வு வேதனையின் உச்சிக்கே தள்ளிக் கொண்டிருக்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரயில் கட்டண உயர்வுக்கு கண்டனம் நான் தெரிவிக்கவில்லை: கருணாநிதி:

அவரது பேட்டி:ரயில் கட்டணம் உயர்த்தியதற்கு, முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பஸ் கட்டணத்தை, அதிக அளவிற்கு, இந்த அரசு உயர்த்தியுள்ளது. அதைத் திரும்பப் பெறட்டும்; அதற்குப் பின், மத்திய அரசு, உயர்த்தியதைப் பற்றி இவர்கள் பேசட்டும்.காஸ், டீசல், ரயில் கட்டண உயர்வு என்றெல்லாம், நடுத்தர மக்களைப் பாதிக்கிற செயலில், ஈடுபடுவதை கண்டித்து, அறிக்கை கொடுக்கிறோம்; கண்டித்து, கடிதம் எழுதுகிறோம்; திரும்பப் பெறச் சொல்லி கேட்கிறோம்.காவிரி பிரச்னை பற்றி, கர்நாடக அரசின் சார்பில், அவர்களுடைய நிலைமையை விளக்கியுள்ளனர். அவர்களிடமும் தண்ணீர் இல்லை என, சொல்கின்றனர். அது உண்மையா என்பதை கண்டுபிடிக்க வேண்டிய வேலை, மத்திய அரசுக்கு இருக்கிறது. அவர்கள் அதை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரயில் கட்டண உயர்வுக்கு, நான் கண்டனம் தெரிவிக்கவில்லை; நீங்களாக கண்டனம் என்று சொல்கிறீர்கள்; கண்டனம் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. தமிழக அரசு பஸ் கட்டணம் உயர்த்தலாம்; மத்திய அரசு மட்டும் ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாதா?காங்., தலைவர் ஞானதேசிகன் சொல்லியிருப்பதைப் போல, தமிழக பஸ் கட்டணத்தை விட, ரயில் கட்டணம் குறைவு தான். நடுத்தர மக்கள் ரயிலைத் தான் பயன்படுத்துகின்றனர். அந்தக் கட்டணத்தை உயர்த்துவதை சரி என, நான் சொல்லவில்லை. ஏழை மக்களைப் பாதிக்கக் கூடிய, எந்த கட்டண உயர்வையும், தி.மு.க., ஆதரிக்காது என்று தான், சொல்லியிருக்கிறேன்.இவ்வாறு கருணாநிதி பேட்டியளித்தார்.

Dinamalar

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசு மட்டும் ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாதா

காங்., தலைவர் ஞானதேசிகன் சொல்லியிருப்பதைப் போல,

தமிழக பஸ் கட்டணத்தை விட, ரயில் கட்டணம் குறைவு தான்.

நடுத்தர மக்கள் ரயிலைத் தான் பயன்படுத்துகின்றனர்.

அந்தக் கட்டணத்தை உயர்த்துவதை சரி என, நான் சொல்லவில்லை. ஏழை மக்களைப் பாதிக்கக் கூடிய, எந்த கட்டண உயர்வையும், தி.மு.க., ஆதரிக்காது என்று தான், சொல்லியிருக்கிறேன்.இவ்வாறு கருணாநிதி பேட்டியளித்தார்.

 

மண்டை க்சாயாம் அந்த நாளில் இருந்து சுத்தி சுத்தி எழுதுவது எனக்கு தெரியும் .. இவரின்ட இந்த மாறி பேச்சை கேட்டு பல பேர் மெண்டல் ஆஸ்பத்திரி போயிட்டான்.. பெட்டர் நீங்க படிக்காமல் இருப்பது நல்லது.. படித்தவர்கள் உங்களுக்கு ஏதாவது தெரிந்தா சொல்லுங்க பிளீஸ்.. :rolleyes: :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.