Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒப்ரேஷன் கேம் ஓவர்!

Featured Replies

தாக்குதலுக்கான திட்டம் மிக இரகசியமானது. தாக்குதல் இலக்கு, நேரம் என்பனவெல்லாம் ஒன்றுக்கு ஓராயிரம் முறை பரிசீலனையின் பின்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தன.
இரத்தம் சிந்தாத போர் அது

இந்தத் தாக்குதலை எவரும் எதிர்பார்த்திருக்கப் போவதில்லை. சில வேளைகளில் இதன் விளைவுகளை நீண்ட நாள்களுக்குப் பின்னரே எதிராளிகள் உணரக்கூடும். திட்டமிட்டபடி தளத்துக்குள் ஊடுருவல் நிகழ்ந்தாயிற்று.

நினைத்ததை விடவும் அவர்களின் உட்புகுதல் மிக  இலகுவாக நடந்தேறியது. எவையெவையெல்லாம் அழிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதோ, அவையவையெல்லாம் சிதைக்கப்பட்டன. எல்லாமே வழித்துத் துடைத்தாயிற்று.

தளத்துக்கான பங்காளிகள் யார்?, யார்யாரெல்லாம் வந்துபோகிறார்கள்? ஏன் வருகிறார்கள்? அவர்களின் பின்புலம் என்ன? எல்லாத் தகவல்களும் ஒன்றும் விடாமல் கட்டளைப் பீடத்துக்கு அனுப்பப்பட்டன. தளத்தின் கோலமே மாறிப் போனது. ஏதேதோ சம்பந்தமே இல்லாத விடயங்கள் எல்லாம் பொருத்தமற்ற இடங்களில் புகுத்தப்பட்டன.

இனி புதிதாக யாரேனும் அந்தத் தளத்துக்குள் நுழைந்தால் அவ்வளவுதான். அவர்களும் மாட்டுப்பட வேண்டியதுதான் அல்லது உருமறைக்கப்பட்ட தளத்தைப் பார்த்து ஏமாற வேண்டியிருக்கும். வந்தவேலை முடிந்தது. கடைசியாக தங்களின் தாக்குதலுக்கு அடையாளமாக அவர்கள் விட்டுச் சென்ற சொல் "கேம் ஓவர்".

*   *   *

இலங்கை தேசிய பாதுகாப்புக்கான ஊடக தகவல் மையத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளம் இனந்தெரியாத தாக்குதலாளிகளால் முற்றாகச் சிதைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே வடமத்திய மாகாண சபையின் இணையத்தளம் பங்களாதேஷைத் சேர்ந்த கணினிக் களவாணிகளால் முடக்கப்பட்டிருந்தது.

அந்த இணையத்தளத்தை சீர் செய்வதற்கிடையில் வீழ்ந்திருக்கிறது இன்னொரு அடி. அதுவும் நாட்டின் முதுகெலும்பான பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான இணையத் தளம் மீது.

இந்தத் தளம் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடிக் கண்காணிப்பில் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இதில் வெளியிடப்படுகின்ற ஒவ்வொரு சொல்லுக்கும்  கோத்தபாயவின் அனுமதி பெறப்பட வேண்டும். எனவே குறித்த இணையத்தளம் மீதான தாக்குதல் பாதுகாப்புச் செயலருக்கு நேரடியாக விடுக்கப்பட்ட சவால் எனக் கொள்ளலாம்.

ஓர் அமைச்சின் அதுவும் நாட்டின் இறைமையோடு தொடர்புடைய பிரிவின் இணையத்தளம் என்பது அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த ஒன்று. இணையக் கில்லாடிகள் எளிதில் உட்புகாதவாறு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கும்.

ஆனால் அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் தாண்டி, உலகச் சண்டியனுக்கே சவால்விடும் இலங்கையின் பாதுகாப்புச் செயலரின் இணையத்தளத்தின் மீது நடத்தப்பட்ட "ஒப்ரேஷன் கேம் ஓவர்' நடவடிக்கை, உண்மையில் ஆச்சரியகரமான ஒன்றுதான்.

இந்த நடவடிக்கையின் வீரியம் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், குறித்த இணையத்தள முகவரியை சொடுக்கியவுடன் "மன்னிக்கவும், இந்தத் தளத்தின் சீரமைப்புப் பணிகள் நூறு வீதம் முடிவுற்றதும் மீளவும் இயக்கப்படும்" என்ற அறிவிப்பே வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவுமற்று இன்னமும் பல்லிளித்துக் கொண்டிருக்கும் வாசகமே நிலைமையின் அலங்கோலத்தைச் சொல்லாமல் சொல்லி நிற்கிறது.

கிட்டத்தட்ட நான்கு நாள்களுக்கு மேலாகியும் "கேம் ஓவரின்" தாக்கத்தை பாதுகாப்புத் துறைக் குழுவால் நிவர்த்தி செய்யமுடியவில்லை. இன்னமும் நூறு வீத சீரமைப்பை அடைய முடியாமல் முடங்கியே கிடக்கிறது அந்தத் தளம்.

இணையங்கள் மீதான "சைபர்' தாக்குதல்கள் இலங்கைக்கு மட்டும் தலையிடியான விடயமல்ல. ஆனானப்பட்ட அமெரிக்காவே எதிர்பாராக் கணங்களில், எதிர்பாராத முனையில் திறக்கப்படும் இந்த இணையப்போரில் அடிக்கடி புறமுதுகிட வேண்டியிருக்கிறது.

அமெரிக்காவுக்கு எதிரான போர்முனையில் முக்கிய எதிராளிகள் ஜூலியன் அசாஞ்சேயும் அவரது ஆதரவாளர்களும். அதற்கடுத்து ஈரானும், சீனாவும் தத்தம் இணையக் களவாணிகள் (ஹக்கர்ஸ்) மூலம் அமெரிக்காவுக்காவுக்கே அல்வா கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில் இலங்கையின் தேசியப்பாதுகாப்புக்கான ஊடகத்தகவல் மையத்தின் இணையத்துக்குள் ஊடுருவி, அதனை முடக்கி, அதிலிருந்த தகவல்களை உருவிச் செல்வதென்பது தேர்ந்த இணையக் களவாணிகளுக்கு எந்தவொரு கஷ்டமான காரியமாகவும் இருந்திருக்கப் போவதில்லை.

ஆயினும் இப்போது இலங்கைக்கு உள்ள கேள்வி என்னவெனில் இந்த தாக்குதலை நிகழ்த்தியது யார்? என்பது தான். ஏனெனில் மூன்று வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான இணையவழித்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டிருந்தால் கண்ணை மூடிக்கொண்டு புலிகளின் பக்கம் கையை நீட்டியிருக்க முடியும். ஆனால் இப்போது அதற்கு வழியில்லை.

எப்போதுமே இணையங்கள் மீதான ஏதோவொரு உள்நோக்கத்தோடே நடத்தப்படுகின்றன. அரசுகள் திரையிட்டு மறைக்கும் மர்மங்களை கண்டறிதல்,  எதிர்நிலை அரசுகளின் நடவடிக்கைகளை மோப்பம் பிடித்தல், அதிகாரத்தால் ஏற்பட்ட ஏதோவொரு தாக்கத்துக்கு பழிவாங்குதல், தமது பலத்தை நிரூபித்தல் என ஒவ்வொரு இணையசெயலிழப்புச் சமரும் ஒவ்வொரு நோக்கோடே செய்யப்பட்டுள்ளன.

அப்படியானால் இப்போது "கேம் ஓவர்' தாக்குதலை நடத்தியது யார்? ஏன், எங்கிருந்து, எதற்கு நடத்தினார்கள்? என நிறையக் கேள்விகளுக்கு அவசரமாக விடை கண்டுபிடிக்க வேண்டிய நிலை இலங்கை அரசுக்கு உருவாகியுள்ளது.

சர்வதேசத்தில் இயங்கும் புலிகளா? எதிர்க்கட்சிகளா? பொன்சேகா அல்லது ஷிராணி  இருவரில் ஒருவருக்கேனும் ஆதரவான சக்திகளா? இலங்கைக்கு வேண்டாத நாடுகளா? என்று அலசி ஆராய்ந்து அந்தக் கறுப்பு ஆடு எந்த மந்தைக்கூட்டத்தைச் சேர்ந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் இனியும் இது போன்ற தாக்குதல்கள் நிகழக்கூடும்.

வெறும் இணையத்தளம் மீதான தாக்குதல் தானே என்று இதனை அவ்வலவு எளிதில் அலட்சியம் செய்துவிட்டுப் போகவும் முடியாது. ஏனெனில் இணையங்கள் என்பன வெறுமனே தகவல் வெளிப்பாட்டுக்கான சாதனங்கள் மட்டுமல்ல.

இனிவருங்காலங்களில் அவையே ஒரு நாட்டுக்கான உத்தியோகபூர்வ கருத்து வெளிப்பாட்டு மையங்களாக இருக்கப்போகின்றன. அதையும் தாண்டி தகவல் சேகரிப்பு, ஆதரவு திரட்டல், இரகசியங்களைப் பரிமாறல், பிரசாரங்கள் என பல்வேறு தேவைகளும் இணையங்கள் ஊடாகவே மேற்கொள்ளப்படவுள்ளன.

இத்தகைய நிலையில் இணையத்தளங்கள் முடக்கப்பட்டால், அவற்றிலிருந்து இரகசியத்தகவல்கள் கையாடப்பட்டால் அது மோசமான பின்னடைவுகளை அரசுக்கு ஏற்படுத்தக்கூடும். நீங்கள் அணுவாயுதப் போர் பற்றியே அதிகம் அக்கறை கொள்கிறீர்கள்.

ஆனால் உலகில் அதையும் தாண்டி தொழினுட்ப ரீதியான போர் சத்தமின்றி தொடங்கி நீண்ட நாள்களாகிவிட்டன. அணு ஆயுதத்தை விடவும் இந்த யுத்தமே பயங்கரமானது. எதிர்கொள்வதற்கு கடினமானது என்று ஈரானிய அதிபர் அஹமத் நிஜாத் சொன்னதை இங்கு நினைவில் மேலெழுகிறது.

எனவே இப்போது தாக்குதலாளிகளை தேடும் பணி தொடங்கியிருக்கும். ஆனால் இணையக்களவாணிகளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு இலகுவாக இருக்கப்போவதில்லை. புலிகளையே அழித்துவிட்டதாக பெருமையடித்துக் கொள்ளும் அரசு, இறுதிப்போரின் போது, தன்னுடன் கைகோர்த்த நாடுகளையெல்லாம் மீண்டும் கூட்டுச் சேர்த்தால் கூட இந்த இணையச் சமரில் வெல்லமுடியாதிருக்கும்.

இணையக்களவாணிகளாக தாக்குதலை நிறுத்தாத வரைக்கும், எவ்வளவுதான் பாதுகாப்பு வளையங்களை உருவாக்கினாலும், முடிவு கேம் ஓவர் தான்.

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=4157945222184938

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.