Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன்னாதிக்க அரசியலும் கண்களை இழந்த நீதியும்

Featured Replies

சிறீலங்காவில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத ஒரு பிரச்சனையாக இவ் இனப்பிரச்சனை இருந்து வருகின்றது.

காலத்திற்கு காலம் ஆட்சி பீடம் ஏறும் அரசுகளும் இனப்பிரச்சனைக்கான ஒரு தீர்வை பெற்றுத்தருவோம் என்ற பகடையை உருட்டியே அரசியல் சிம்மாசனத்தில் அமர்ந்து பேச்சுவார்த்தைகள், சமாதான ஒப்பந்தங்கள், தெரிவுக்குழுக்கள் என பலவற்றை நிறுவி பல வருடங்களாக உலக நாடுகளையும் பேச்சுக்குச் சென்ற தமிழ் தலைவர்களையும் தமிழக்களையும் ஏமாற்றி வருகின்றமை உலகறிந்த உண்மை.

இதனை உலக நாடுகளும் தமிழர்களும் நன்கு உணர்ந்துள்ளனர். ஆனால் நீண்ட காலமாக தமிழர்களின் குருதி படிந்துள்ள இனப்பிரச்சனை தீர்க்கப்படாமல் காலங்கள் வீணடிக்கப்பட்டு, வளர்ந்து வரும் இளைய சமுதாயங்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டு, சமுதாயத்தில் இனரீதியான ஒரு ஒதுக்கலில் வாழவேண்டிய கட்டாயமும் ஒரு உயிரினத்திற்கு இருக்கவேண்டிய அடிப்படை சுதந்திரம் கூட பறிக்கப்பட்ட நிலையிலேயே இன்றும் தமிழ் இனம் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

ஆனால் ஆட்சியிலுள்ள அரசாங்கம் தம் இனமக்களுக்கும் தமக்கும் தேவையான விடயங்களை தங்களிற்கு, இருக்கின்ற ஆதிக்க பலத்தினைக் கொண்டு பாராளுமன்றங்கள் மற்றும் நீதிமன்றங்கள் மூலம் நிறைவேற்றி வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக ஆட்சியிலுள்ள தன்னாதிக்க அரசினால் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு விடயங்கள் ஊடாக நாட்டின் மக்கள் சமஉரிமைகளை பெறமுடியாத மக்களின் அபிலாசைகள் புறந்தள்ளப்படும் ஒரு சர்வதிகார அரசியல் தெட்டத்தெளிவாக புலப்படுகிறது.

அந்த வகையில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடம் நிறைவேற்றப்பட்ட திவிநெகும, மற்றும் பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை ஆகிய விடங்கள் ஊடாக ஒரு சிலவிடயங்கள் தெளிவாகின்றன.

அதாவது திவிநெகும சட்டம் தொடர்பாக கூட்டமைப்பு தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு மாறாக செயற்பட்டதுடன், பிரதம நீதியரசருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பதின்நான்கு குற்றச்சாட்டுக்கள் உரிய முறையில் விசாரனை செய்யப்படாததுடன், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கள் எல்லாம் உதாசீனப்படுத்தப்பட்டு பாராளுமன்றில் தனக்கு இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு நிறைவேற்றிவிட்டது.

இவ் இரண்டு விடயங்களுக்கு எதிராக மக்களும், அத்துறைசார்ந்தவர்களும், அரசியல் கட்சிகள் மற்றும் உலக நாடுகள் என்று எத்தனையோ தரப்பினர்கள் போராட்டங்கள் மூலமும் கண்டனங்கள் மூலமும் தமது எதிர்ப்புகளை தெரிவித்திருந்த போதும் அவையாவும் எங்கல் தன்னாதிக்க அரசின் கதுகளில் செவிடன் காதில் ஊதிய சங்காய் மௌனித்து விட்டது.

தற்போது நாட்டில் திவிநெகும திட்டமும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் புதிய பிரதம நீதியரசர் ஒருவர் உடனடியாக நியமிக்கப்பட்டு அவரும் தனது கடமைகளைப் பெறுப்பேற்று ஊடங்களுக்கு கருத்தும் தெரிவித்துவிட்டார். குறுகிய காலத்தில் சிங்கள ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட இவ் இருவிடயங்களையும் அமுலாக்குவதற்கு ஆட்சிலுள்ள அரசாங்கத்திற்கு நெடுங்காலம் எடுக்கவில்லை.

ஆனால் சுமார் அறுபது வருடங்களுக்கு மேலாக இலங்கையில் இனப்பிரச்சனை என்ற ஒன்று தீர்க்கப்படாமல் இருக்கின்றது அதனை தீர்ப்பதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

சிறீலங்காவில் எந்த காரணத்திற்காக ஒரு விடுதலைப் போராட்டம் உருவாக்கப்பட்டதோ அந்த விடங்களைத் தீர்ப்பதற்கு ஆட்சியிலுள்ள மகிந்த அரசு நினைக்குமேயானால் ஓரிரு நாளிலே தீர்வை வழங்கிவிடலாம். ஆனால் அதனைச் செய்வதற்கு தயாராக மகிந்த அரசும் அதனோடு இருக்கின்ற இனவாத சக்திகளும் விரும்பாது.

இதற்கு சான்றாக சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நைஜீரியாவின் தலைநகர் லாகோசில் இருந்து வெளியாகும்"அஜோ ஒகுலஜா' இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றில்,

"ஆட்சியிலுள்ள அரசு தனது மூலோபாயத்தின் படியே தொடர்ந்து நடக்குமேயானால், இன்னும் சில ஆண்டுகளில் இன்னொரு போராளிக்குழு உருவாகும் என எச்சரிக்கை விடுத்ததுடன்.

மஹிந்த ஒருவரே எனது அமைச்சரவையில் சிறுபான்மையினருடனான பேச்சுகளுக்கு எதிராக இருந்தார். அவரது தேவை அவர்களைக் கொல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது” என்ற உண்மையினை போட்டுடைத்திருக்கின்றார்.

எனவே இவருடைய கருத்திலிருந்து ஒன்றை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம், அதாவது அமைச்சராக இருந்த போதே மகிந்த ராஜபக்ச எதிர்த்தவர் என்றால் இப்போது அவர் அதி மேதகு ஐனாதிபதியாக இருக்கும் போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து யோசிப்பாரா? என்ற சந்தேகம் எழுவது தவிர்க்கமுடியாதுள்ளது.

யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகளுக்கு இன்னும் இருப்பது வேறுமனே நான்கு மாதங்களே. ஆனால் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அடிப்படை ஜனநாயக உரிமையினைக் கூட இப்போது ஆட்சியிலுள்ள அரசு வழங்குவதற்கு தயாராக இல்லை.

அத்துடன் சிறீலங்காவில் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் காரணமின்றிக் கைது செய்யப்படுபகின்றனர்.

கைது செய்து விட்டு இவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவினார்கள், வெடிபொருட்கள் வைத்திருந்தார்கள் என்று கூறி குற்றப்பத்திரம் எழுதுகின்றனர்.

இதற்கு தகுந்த உதாரணங்களாக பல்கலைக்கழக மாணவர்கள் கைதும் கிளிநொச்சியில்  பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களும் அதனோடு இணைந்த கைதுகளையும் அமைகின்றன.

ஆட்சியிலுள்ள அரசு தமிழ் மக்களுக்கு எந்தவிதமான உரிமைகளையும் வழங்குவதற்கு முன்வராது என்பதை இந்த நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

திவிநெகும, பிரதம நீதியரசர் விவகாரங்கள் தொடர்பாக விரைவாக தீர்வை வழங்கிய அரசாங்கம் இனப்பிரச்சனைக்கான தீர்வினை வழங்குமா?  என்றால் நிச்சயமாக வழங்காது என்பதே முடிவு.

அதுமட்டுமின்றி இனப்பிரச்சனைகான தீர்வினை வழங்குமாறு சர்வதேச நாடுகள்அறிக்கை விடுவதில் மட்டும்  காலத்தினை ஓட்டாது,தீர்வுக்கான அழுத்தங்களை சிறீலங்கா அரசுக்கு கொடுக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களுடைய தற்போதைய எதிர்பார்ப்பாகும்.

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=3069045423278686

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.