Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றங்கள் தயார்

Featured Replies

மார்ச் மாதத்தை நோக்கிய எதிர்பார்ப்புக்கள் ஆரம்பித்திருக்கின்றன. ஐ.நாவில் தொடங்கவுள்ள கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் வலுவாக மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்புகளும்,கோரிக்கைகளும் பல தளங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையும் அதனைக் கருத்தில் கொண்டு ராஜதந்திர நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றது.

 

 

முதற்கட்டமாக இந்தியா இலக்குவைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த வார இறுதிப் பகுதியில் இந்தியா சென்ற இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்  இந்தியா அமைதியாக இருந்து கொண்டால் மட்டும் போதும் என்று கூறிவந்திருக்கின்றார். சர்வதேசத்தை கவனிக்கத் தங்களுக்குத் தெரியும் எனவும் சொல்லியிருக்கின்றார்.


இந்த நிலையில் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டது போல இம்முறை இலங்கைக்கு சர்வதேச சமூகத்தால் கொடுக்கப்பட இருக்கும் அழுத்தம் இலகுவானதாக இருக்குமா? அந்த அழுத்ததை அவர் குறிப்பிடுவதுபோல் இலகுவாக சமாளிக்க முடியுமா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. ஏனெனில் இலங்கை இந்த முறை சமாளிக்க வேண்டிய நிலையில் பல பிரச்சினைகளின் பட்டியலை வைத்திருக்கின்றது.

 

 

பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை

கடந்த வருடம் நடைபெற்ற ஐ.நாவின் பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட எந்தத் தீர்மானத்தையும் இலங்கை கருத்திலெடுத்து நடைமுறைப்படுத்தவில்லை.

 

அமெரிக்காவின் பணிப்பில் இலங்கை அரசே ஆராய்ந்து முன்மொழிந்த நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையையாவது நடைமுறைப்படுத்தும்படி அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நாவின் அங்கத்துவ நாடுகள் கேட்டிருந்தன. அதற்கு அப்போது தலையாட்டிய அரசு இதுவரை நல்லிணக்கத்துக்கான எந்த சமிக்ஞையையும் காட்டவில்லை.


மாறாக இலங்கையில் வாழும் இனங்களிடையே முறுகல் நிலையை தோற்றுவிக்கும் முகமாகவே செயற்பட்டு வந்திருக்கின்றது. இது தொடர்பில் உன்னிப்பான கவனிப்பை சர்வதேச சமூகம் கடந்த ஆண்டிலிருந்தேசெலுத்தி வந்திருந்தது.

 

 

காட்டாட்சி களைகட்டியது

பயங்கரவாத நடவடிக்கைகளில் இருந்து இலங்கைக்கு அமைதி கிடைத்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, ஜனநாயக நடைமுறைகள் பின்பற்றப்படாத ஆட்சி முறையொன்று நிலவி வருவதை பலரும் அவதானித்திருக்கின்றனர். அறிக்கை விடுத்திருக்கின்றனர். எச்சரித்திருக்கின்றனர். ஆயினும் தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஊடக அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டது. வடக்கில் எந்த ஊடகமும் அரசின் கவனிப்பைத் தவறி இயங்க முடியாத நிலை காணப்படுகின்றது. தெற்கில் கூட அரசை விமர்சிக்கும் ஊடகங்களும், அதன் பணியாளர்களும் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. உதயன், சண்டே லீடர் ஆசிரியர்கள் மிரட்டப்பட்டார்கள். தாக்கப்பட்டார்கள். பத்திரிகைகள் எரியூட்டப்பட்டன.

 

 

 

ஜனநாயகம் மரணித்துக் கொண்டிருக்கின்றது

வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் ஜனநாயக வழிமுறைகளில் போராடக் கூட முடியாத காட்டாட்சி அனுபவத்தை மிக அண்மைக்காலமாக அனுபவித்து வருகின்றனர். நில அபகரிப்புக்கு எதிராகவும், கடத்தல் காணாமல் போதல்களுக்கு எதிராகவும் போராடத் தொடங்கிய சந்தர்ப்பங்களில் எல்லாம் தாக்குதலுக்குள்ளானார்கள்.

 

ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் புலனாய்வாளர்களால் விசாரிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டனர்.

அது மட்டுமன்றி போராட்டங்களில் ஈடுபட்டவர்களும், அரசின் மனித உரிமை மீறல் சம்பவங்களை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துரைத்தவர்களும் அச்சுறுத்தப்பட்டனர்.


தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சிறீதரன் உள்ளிட்டவர்களும் மற்றும் மன்னார் மறை மாவட்ட ஆயர் வண.இராயப்பு ஜோசப், மன்னார் மாவட்ட நீதிபதி உள்ளிட்டோர் இவ்வாறான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டவர்களில் சிலர்.

 

 

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடிவில்லை

கடந்த வருடத்தில் மாவீரர் தினத்தோடு கைதாகிய யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரச்சினையும் சர்வதேசமயப்படுத்தப்பட்ட ஒன்று. இலங்கையைக் கவனித்து வரும் பெரும்பாலான நாடுகள் அதற்கு கண்டனத்தை வெளியிட்டிருந்தன.

 

கைது செய்யப்பட்டமைக்கான சரியான காரணத்தைக் கூறாத அரசும், படைகளும், இந்தக் கைது விடயத்தில் எந்த விதமான ஜனநாயக வழிமுறைகளையும் பின்பற்றவில்லை. அத்தோடு இலங்கையில் ஜனநாயகம் அற்ற ஆட்சி நிலவுகின்றது என்பதை பலரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பை அந்தப் போராட்டமும், அதன் பின்னரான இலங்கை அரசின் நடவடிக்கைகளும் அமைந்திருந்தன.


கைதாகி இரண்டு மாதங்கள் நெருங்குகின்ற நிலையில் அவர்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான முடிவுகள் எதுவும் எட்டப்படாமல் இருக்கின்றது. மாணவர் கைதுடன் வடக்கில் மேலும் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் நிலைகுறித்தும் ஒழுங்கான தீர்வுகள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

 

 

ஜனநாயகம் தின்றுவிட்ட நீதித்துறை

ஜனநாயகம் எல்லை மீறும் சந்தர்ப்பங்களில் அதனைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் நீதித்துறை இலங்கையில் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஆட்சியிலிருக்கும் அரசு முன்வைத்த கோரிக்கை ஒன்றை நீதிமன்ற தீர்ப்பொன்றினூடாக நிராகரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரதம நீதியரசரின் பதவியையே பறித்தது அரசு.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்க பதவி விலக்கப்பட்ட முறை தவறானது என அமெரிக்கா கூட எச்சரித்திருந்தமை இந்தவிடயத்தில் குறிப்பிடத்தக்கது.    அவரின் பதவி பறிப்பைத் தொடர்ந்து அரசுக்குச் சார்பான ஒருவர் பிரதம நீதியரசராக்கப்பட்ட விடயமும், இலங்கையின் நீதித்துறை சரிந்து வரும் நிலையும் சர்வதேச கவனிப்பை பெற்றுவருகின்றன.

 

 

புது அமைப்பும், புது கோஷங்களும்

இவை அனைத்தையும் விட இலங்கையின் மூன்றாவது சிறுபான்மையினராகிய முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கின்றது. அரசு சார்ந்த பௌத்த துறவிகளும், அமைச்சர்களும் வெளிப்படையாகவே சிறுபான்மையினத்தவரின் மனங்கள் புண்படக் கூடிய வகையில் செயற்படுகின்றனர். சிறுபான்மையினத்தவருக்கான அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படும் நிலை தொடர்கின்றது.

 

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தை தொடர்ந்து இப்போது பொது பல சேனா அமைப்பு இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை உருவாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

 

இவ்வாறான இனவாத அமைப்புக்களின் ஆபத்து குறித்து தெரிந்திருந்தும் அரசு எந்த வித சட்ட நடவடிக்கைகளையும் குறித்த அமைப்பினர் மீது எடுக்கவில்லை. இவ்வாறு அரசு தொடர்ந்தும் மௌனம் சாதிப்பது இனவாத அமைப்புக்கள் அரசின் நெறிப்படுத்தலில் இயங்குகின்றவை என்ற சந்தேகத்தை பரவலாக ஏற்படுத்தியிருக்கின்றது.


 

முடியாத முடிவாக...

மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐ.நா. சபையின் கூட்டத்தொடரை வெற்றிகரமாக எதிர்கொள்ள இவ்வளவு விடயங்களையும் சமாளிக்க வேண்டிய நிலையுள்ளது. மீதமாக இருக்கின்ற ஒரு மாத கால இடைவெளியில் விட்ட தவறுகள் அனைத்தையும் திருத்திக் கொள்ள முடியாது.


அதற்கு அரசு முயற்சிக்கவும் மாட்டாது. ஐ.நா. கேட்கப்போகும் அனைத்துக் கேள்விகளுக்குமான பதிலாகவே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இராணுவ நீதிமன்றம் மேற்கொண்ட விசாரணைகளின் தீர்ப்பு வெளிவந்திருக்கின்றது.

 

அதில் கூறப்பட்டவைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அவகாசத்தைக் கோரக் கூடிய சாத்தியங்களே அதிகமாக தென்படுகின்றன. அதற்கு இந்தியாவின் ஆசீர்வாதமும் கிடைக்கப் பெற்றுவிட்டது என்றே  எண்ணத் தோன்றுகிறது.

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=4669045528531441

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.