Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனோ கணேசனைப் புகழ்ந்த தினகரனின் ஆசிரியரை, விரட்டினார் புலிகேசி மகிந்தர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனோ கணேசனைப் புகழ்ந்த தினகரனின் ஆசிரியரை, விரட்டினார் புலிகேசி மகிந்தர்
ஜன 30, 2013
         
கொழும்பிலிருந்து வெளிவரும் அரச ஆதரவுப் பத்திரிகையான தினகரன் வாரமஞ்சரியில் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனைப் புகழ்ந்து ஆசிரியர் தலையங்கம் எழுதியமைக்காக அந்தப் பத்திரிகை ஆசிரியரை சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பணியிலிருந்து விரட்டியுள்ளார்.

மனோ கணேசனின் நண்பராக இருக்கும் குறித்த பத்திரிகை ஆசிரியர் தினகரன் வார மஞ்சரியின் ஆசிரியராக பணியாற்றுகிறார். கடந்த 13 ஆம் திகதி குறித்த பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில் மனோ கணேசனைப் புகழ்ந்து அவர் எழுதிவிட்டார் என்றே அவரை சிறீலங்காவின் ஜனாதிபதி தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாக தினகரன் பத்திரிகை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விடயம் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று தெரிவித்துள்ள மனோ கணேசன் அது குறித்து தனது கவலைகளையும் வெளிப்படுத்தியுள்ளார். குறித்த பத்திரிகை ஆசிரியர் அந்த ஆசிரியர் தலையங்கத்தில் தன்னைப் புகழவில்லையென்றும் புகழ்வது போல இகழ்ந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனோ கணேசன் தனது முகவலைக் குறிப்பிலும் (பேஸ் புக்கில்) கருத்து வெளியிட்டுள்ளார். அவரது குறிப்பில் அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

“தினகரன் அரச நிறுவனமான ஏரிக்கரை (லேக் ஹவுஸ்) நடத்தும் தமிழ் பத்திரிகை. இந்த பத்திரிகையை நான் கிரமமாக படிப்பது இல்லை. கடந்த காலங்களில் இந்தப் பத்திரிகையில் என்னையும், நமது கட்சியையும் பற்றி தொடர்ச்சியாக மிகவும் கடுமையாக வரம்புமீறி விமர்சித்து எழுதி வந்துள்ளார்கள். இந்த ஆசிரியர் நான் அறிந்த நண்பர்தான்.  சரி, அரசு நடத்தும், அரசு ஆதரவு பத்திரிக்கை என்பதால் இப்படித்தான் எழுதுவார்கள், என்பதால் நான் இவற்றை கண்டு கொள்வது இல்லை.

மேலும் திட்டமிட்ட இகழ்ச்சியும், திட்டமிட்ட புகழ்ச்சியும் “கடந்து வந்துவிட்ட பழைய விடயங்கள்” என்ற தெளிவு கொண்ட முதிர்ச்சி எனக்கு இருப்பதாக நம்புகிறேன். இந்தமுறை, “இது என்னடா, அப்படி என்னை புகழ்ந்து என்ன எழுதிவிட்டார்கள்"  என அந்த தலையங்கத்தை தேடி எடுக்கும்படி நமது  கட்சி ஊடக செயலாளர் பாஸ்காராவுக்கு சொன்னேன். அவரும் தேடி பிடித்து எனக்கு வாசித்து காட்ட கேட்டு பார்த்தேன்.  உண்மையில் அந்த தலையங்கத்தில் என்னை புகழவில்லை. அது ஒரு விதமான  மயக்கும் வஞ்சக புகழ்ச்சி.

தலையங்கம் முழுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பை மிக கடுமையாக விமர்சனம் செய்து எழுதியுள்ளார்கள். எனது நண்பர் சிறிதரன் எம்.பியை மிகவும் கொடுமையாக விமர்சித்துள்ளார்கள். இதை எல்லாம் எழுதிவிட்டு கடைசியில் ஓரிரு வரிகளில் என்னை வஞ்சகமாக புகழ்ந்து எழுதிவிட்டு, கடைசியில், “இவர் போன்றவர்கள் அரசாங்கத்தில் இருக்க வேண்டும்" எனவும் எனக்கு ஆலோசனை கூறி முடித்துள்ளார்கள்.

இந்த தலையங்கத்தில் என்ன தர்க்க நியாயங்கள் உள்ளனவோ கடவுளுக்குதான் வெளிச்சம். என்னை எங்கே புகழ்ந்துள்ளார்கள் என்று எனக்கு புரியவில்லை.  

இந்த தினகரன் பத்திரிகை ஆசிரியரை பல நாட்களுக்கு முன்னர் ஒருநாள் நான் சந்தித்தபோது “நியாயத்துக்கு என்னை இகழவும் வேண்டாம், என்னை வஞ்சகமாக புகழவும் வேண்டாம், ஆளை விடப்பா சாமி. உங்கள் அரசாங்கத்தையும், அரசாங்கத்துக்கு உள்ளே வரும் நபர்களையும் கடவுள், அவதாரம் என்றெல்லாம் எது வேண்டுமானாலும் எழுதி புகழ்ந்து  கொள்ளுங்கள்"   என்று நான் சொல்லியும் உள்ளேன்.

கூட்டமைப்பை புகழ்ந்துவிட்டு என்னை இகழ்வதோ, என்னை புகழ்ந்துவிட்டு, கூட்டமைப்பை இகழ்வதோ இங்கே எடுபடாது. இதனால் எல்லாம் நாம் முரண்பட்டுகொள்ள மாட்டோம். இந்த அரசாங்கத்தை எதிர்த்து அம்பலப்படுத்துவதில் நாம் ஒற்றுமையாக இருக்கின்றோம். ஆனால், கடைசியில் விதி யாரை விட்டது, பாருங்கள்.

இந்த தினகரன் ஆசிரிய நண்பர், கூட்டமைப்பை கடுமையாக விமர்சித்துள்ளதை விட்டுவிட்டு, அவர்  என்னை புகழ்ந்து எழுதிய இரண்டு வரிகளை மாத்திரம் மொழிபெயர்த்து எடுத்து சென்று நாட்டு அதிபரிடம் (ஜனாதிபதி மகிந்தவிடம்) அரசாங்கத்தில் இருக்கும் சிலர் போட்டு கொடுத்துவிட்டார்கள். (இப்படித்தான் எனக்கு செய்து வந்துள்ளது).

“ஆஹா, நம்மை கடுமையாக விமர்சிக்கும், எதிர்க்கும் மனோ கணேசனை பற்றி எப்படி இரண்டு வரி புகழ்ந்து எழுத முடியும்?” என அதிபர் (மகிந்த) சீற, அழைத்து விசாரித்து தற்போது, ஆசிரிய நண்பரின் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

என்னை மிகவும் கிரமமாக ஒவ்வொரு வாரமும் கடுமையாக விமர்சித்து இவர் பிரசுரித்த செய்திகளையும், தலையங்கங்களையும் மொழிபெயர்த்து யாராவது அதிபருக்கு எடுத்து சொல்லி இவரது பணி  நீக்கத்தை நீக்கலாம்.  இது நம்ம ஆலோசனை.   என்று மனோ கணேசன் தனது முகவலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினகரன் பத்திரிகை முற்று முழுதாக அரச பத்திரிகை என்பதும் காலம் காலமாக வழிவழியாகப் பதவிக்கு வரும் அரசாங்கங்களை வாழ்த்தி எதிர்க்கட்சிகளைத் தூற்றுவதே இதன் செய்திகள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்தப் பத்திரிகையில் எவராவது புதிய நியமனத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அமைச்சர்களின் செல்வாக்கு அவசியம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.sankathi24.com/news/26407/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.