Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க இந்திய அரசுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் துணிச்சலுடன் இலங்கை

Featured Replies

obama-india.jpg

மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்க அமெரிக்கா மறுத்தால், சீனாவிடம் போய் உதவி கேட்போம் என்று கடந்தவாரம் ஒரு மிரட்டலை விடுத்திருந்தார் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசாங்கம் போதிய கவனம் எடுத்து, விசாரணைகளை நடத்தாத நிலையில், இலங்கை மீதான அமெரிக்காவின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய பின்னணியில், அமெரிக்காவில் மேலதிகப் பயிற்சிக்காக இலங்கை இராணுவத் தலைமையகத்தால், தெரிவு செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவுக்கு, அமெரிக்கா வீசா வழங்க மறுத்து விட்டது.

 

53வது டிவிசனின் தளபதியாகப் பணியாற்றினார் என்பதற்காகவே, அவரை பயிற்சித் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள அமெரிக்கா மறுத்திருந்தது. இந்தநிலையில் தான், அமெரிக்கா ஒன்றும் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குவதில்லை என்றும், பயிற்சிகளை மட்டும் தான் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டிருந்த கோத்தாபய ராஜபக்ச, அதையும் நிறுத்தினால் கூடக் கவலைப்படப் போவதில்லை என்ற தொனியில் கருத்து வெளியிட்டுள்ளார். அதாவது, இலங்கை இராணுவத்தினருக்கு அளித்து வரும் பயிற்சிகளை அமெரிக்கா நிறுத்தினால், அதற்காக சீனாவின் உதவியை நாடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனை அமெரிக்காவுக்கு விடுத்த எச்சரிக்கை என்று கருதினாலும், ஆழமாகப் பார்க்கப் போனால், இதற்குள் இந்தியாவுக்கு ஒரு செய்தி சொல்லப்பட்டுள்ளதை விளங்கிக் கொள்ள முடியும். எனக் குறிப்பிடும் அவர்,

தனது விரிவான ஆய்வில்,

 

பாதுகாப்பு ஒத்துழைப்பு விவகாரங்கள் என்று வரும் போது, அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில், சீனாவைத் தான் இலங்கை வைத்துள்ளது, இந்தியாவை அல்ல என்பதே அந்தச் செய்தி.

சில மாதங்களுக்கு முன்னர், இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு எதிராக தமிழ்நாட்டில் பெரியளவில் எதிர்ப்புக் கிளம்பியது நினைவிருக்கலாம்.

 

தாம்பரம் விமானப்படைத் தளத்தில், பயிற்சி பெற்ற இலங்கை விமானப்படையினர் 9 பேர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் எதிர்ப்பு மற்றும் தமிழக அரசியல்கட்சிகளின் போராட்டங்களை அடுத்து. அங்கிருந்த வெளியேற்றப்பட்டனர். இதுபோல குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி நிலையத்தில் கருத்தரங்கிற்காகச் சென்ற மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் எதிர்ப்புகளால் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதே சூட்டோடு சூடாக, இந்தியாவில் எங்குமே இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிக்கப்படக் கூடாது என்று அரசியல்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதங்கள் எழுதினார். கருணாநிதி அறிக்கைகளை வெளியிட்டார். ஏனைய அரசியல் கட்சிகளும், அறிக்கைப் போர்களை நடத்தின. வீதிமறியல், ரயில் மறியல், கொடும்பாவி எரிப்பு என்று போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், கடைசியில், அந்த விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது.

 

இப்போது யாருமே அதுபற்றிப் பெரிதாகப் பேசுவதில்லை. இதற்கு என்ன காரணம் என்றால், இந்திய மத்திய அரசு இலங்கைப் படையினருக்கான பயிற்சிகளை நிறுத்தப் போவதில்லை என்றும், தமிழ்நாட்டில் வேண்டுமானால் அவற்றை நடத்தாமல் விடலாம், ஆனால், இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவது உறுதி என்றும் தெளிவாகக் கூறிவிட்டது. இதற்கு ஒரு காரணத்தையும், இந்திய மத்திய அரசு கூறியிருந்தது.

அதாவது, இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சி அளித்தால், அவர்களால் தமிழ் மக்களுக்கு ஆபத்து ஏற்படாது என்றும், இந்தியா பயிற்சியளிக்க மறுத்து, சீனாவோ, பாகிஸ்தானோ அவர்களுக்கு பயிற்சி அளித்தால், தமிழர்களுக்கு ஆபத்தானதாகி விடும் என்றும் கூறப்பட்டது. இந்தியா, போர்ப்பயிற்சிகளுடன் மனிதாபிமானத்தையும் சேர்த்தே ஊட்டுவதால், இலங்கைப் படையினர் நன்நடத்தையுடன் நடந்து கொள்வர் என்று தமிழ்நாட்டின் பிரபல நாளேடுகள் கூட ஆசிரியர் தலையங்கங்களை எழுதின.

 

இந்தியாவில் ஆண்டுக்கு 800இற்கும் அதிகமான இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சிகள், 2000ம் ஆண்டுகளிலேயே தொடங்கி விட்டன. அதற்கு முன்னரும் இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சி அளித்தது. ஆனால், அது குறிப்பிட்டளவு அதிகாரிகளுக்கான பயிற்சியாகவே இருந்தது. பயிற்சித் திட்டம் விரிவாக்கப்பட்ட பின்னர், கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளில் மட்டும் குறைந்தது 5000இற்கும் குறையாத இலங்கைப் படையினர் இந்தியாவில் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.

ஆனாலும், இலங்கை அரசாங்கம், இராணுவ உதவிகளுக்காக இந்தியாவை முழுமையாக நம்பியிருக்கத் தயாரில்லை என்பதே உண்மை. ஆண்டுதோறும் 800 படையினரை பயிற்சிக்காக இந்தியாவுக்கு அனுப்பி வந்தாலும் கூட, சீனாவுடன் அதனை ஒரே தராசில் வைத்துப் பார்க்க இலங்கை தயாராக இல்லை. “அமெரிக்கா இராணுவப் பயிற்சிகளை அளிக்க மறுத்தால், பக்கத்து நாடான இந்தியா உள்ளது.

 

ஆண்டுக்கு 800 படையினரை பயிற்றுவிக்கும் இந்தியா இன்னும் கூடுதலாகச் சிலருக்குப் பயிற்சி அளிக்காதா?” என்று பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தால் இந்தியாவின் மனம் நெகிழ்ந்து போயிருக்கும். ஆனால், அவர் அப்படிக் கூறவில்லை. அமெரிக்கா போனால் போகட்டும், எங்களுக்குச் சீனா உள்ளது, அவர்களிடம் போய் உதவி கேட்போம் என்று தான் கூறியுள்ளார்.

சீனாவுடன் ஒப்பிடும்போது, இரண்டாம் நிலையில் தான் இந்தியாவை அவர் வைத்துள்ளார் என்பதற்கு, இதை ஒரு எடுத்துக் காட்டாக கொள்ளலாம். இந்தியா பயிற்சி வழங்க மறுத்தால் தான், சீனாவிடம் இலங்கை ஓடிப் போய் விடும் என்று இந்தியா நம்பிக் கொண்டிருந்தது. ஆனால் இலங்கையோ, அமெரிக்காவுக்கு நிகரான உயர் பயிற்சிக்குரிய நாடாக இந்தியாவைப் பார்க்கவில்லை. இந்தியா பயிற்சி கொடுத்தாலும் நிறுத்தினாலும், சீனாவில் பயிற்சி பெறுவதை தடுக்க முடியாது என்பதை கோத்தாபய ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ளார். அதேவேளை, இந்தியாவைப் பொறுத்தவரையில், இலங்கையைக் கைவிடப் போவது இல்லை.

 

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி தொடர்ந்து இலங்கைப் படையினருக்குப் பயற்சி அளிப்போம் என்று கடந்த புதன்கிழமை கூடக் கூறியுள்ளார். இலங்கையைப் பொறுத்தவரையில், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் பயிற்சி அளிக்காவிட்டாலும் பரவாயில்லை, எங்களுக்குச் சீனா உள்ளது என்ற மிதப்பில் உள்ளது.

 

sonia-manmohan-obama.jpg

இது ஒருவகை மிரட்டல் தான்.

 

 

சீனாவை வைத்து – உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளையே மிரட்டும் அளவுக்குப் போயுள்ளது இலங்கை. இந்த இராஜதந்திரம் இதுவரை பலித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் இலங்கையின் அமைவிடமே. இதனால் தான், “எம்மிடம் எரிபொருள் வளம் இல்லாவிட்டாலும், கேந்திர இடஅமைவு உள்ளது” என்று பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார். இந்த கேந்திர அமைவிடம் தான், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் கண்களில் இலங்கை விரலை விட்டு ஆட்டுகின்ற துணிச்சலைக் கொடுத்துள்ளது. ஆனால், தனியே ஒரு இடத்தின் கேந்திரத் தன்மை மட்டும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும், முதன்மையானதாகப் பார்க்கப்படுவதில்லை என்பதையும் கருத்தில் கொண்டாக வேண்டும்.

 

இபோதமிழ் -ஹரிகரன்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.