Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் குடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலுள்ள கடப்பாட்டை நிறைவேற்றும்படி இலங்கை அரசை சர்வதேச சமூகம் நிர்ப்பந்திக்க வேண்டும்'

* வடக்கு, கிழக்கில் அப்பாவிக் குடிமக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று புதன்கிழமை காலை சபையில் விடுத்த விசேட அறிக்கை

கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலான கொடூரமான யுத்தத்தினால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்ப் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானோர் உள்ளூரில் இடம்பெயர்ந்துள்ளார்கள்; கணிசமான எண்ணிக்கையானவர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்கள். டிசம்பர்௨004 கடல்கோளினாலும் வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

யுத்தம் மற்றும் கடல்கோள் ஆகிய இரண்டினாலும் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களை மீளக் குடியமர்த்தவும் புனர்வாழ்வளிக்கவும், அழிந்து போன சொத்துக்களை புனர் நிர்மாணம் செய்யவும், அரசாங்கம் திருப்திகரமான ஒழுங்குகளை மேற்கொள்ளவில்லை. கிடைக்கப் பெற்ற உதவிகளும் நிவாரணங்களும் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற தன்னார்வ அமைப்புக்களும் வழங்கியவையே. இடைக்கால தன்னாட்சி அதிகார சபை ஒன்றை நிறுவுவதன் மூலம், இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தவும் புனர்வாழ்வளிக்கவும் வடக்கு, கிழக்கு பிராந்தியத்தை மீள் நிர்மாணம் செய்யவும் எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. கடல்கோள் நிவாரணக் கட்டமைப்பு (P-Toms) முயற்சியும் சிதைக்கப்பட்டது. இவை எல்லாம் மறுக்கப்பட்ட நிலையில் தமிழ் பேசும் மக்கள் கஷ்டப்படுகின்றனர். கணிசமான தமிழ் பேசும் மக்கள் அகதி முகாம்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தொடர்ந்தும் துன்பங்களுக்கிடையே தங்கியுள்ளனர். இப்பின்னணியிலேயே, மீண்டும் கணிசமான தமிழ் மக்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் சொந்த வீடுகள், கிராமங்களிலிருந்து பாதுகாப்புத் தேடி ஓடுகின்ற நிர்ப்பந்தத்திற்குள்ளாகியு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா இராணுவத்தினர் மீது ஈழவேந்தன் குற்றச்சாட்டு

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சிலர் தன்னைக் கொலை செய்துவிடுவதாகவும் தனது மனைவியை பாலியல் வல்லுறவு செய்துவிடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க. ஈழவேந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் உரிமை மீறல் பிரச்சனையை எழுப்பிய ஈழவேந்தன் கூறியதாவது:

வட மாகாணத்தில் தீச்சுனன்வெளி பகுதியில் இராணுவ சோதனைச் சாவடியில் நான் தடுக்கப்பட்டேன். என்னிடம் அநாகரீகமான முறையில் சோதனைச் சாவடியில் இருந்த இராணுவத்தினர் நடந்து கொண்டனர்.

நாடாளுமன்ற அமளிகளுக்கு நானே காரணம் என்றும் என்னை விடுதலைப் புலி என்றும் அவர்கள் கூறினர். நாட்டினது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்னைக் கொன்றுவிடுவதாகவும் அச்சுறுத்தினர்.

நாடாளுமன்ற செயலாளரின் கையொப்பமிட்ட அடையாள அட்டையை காண்பித்தபோதும் அவர்கள் அதை அலட்சியம் செய்தனர். எனது மனைவியை பாலியல் வல்லுறவு செய்துவிடுவதாகவும் மிரட்டினர்.

நாடாளுமன்ற உரிமைக் குழு முன்பாக எம்மை மிரட்டிய இராணுவத்தைச் சேர்ந்த அந்த நபரை அடையாளம் காட்ட முடியும் என்றார் ஈழவேந்தன்.

ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச இதற்குப் பதிலளிக்கையில்;, இராணுவத்தினருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஈழவேந்தன் குற்றம்சாட்டுவதாகக் கூறினார்.

இருப்பினும் ஈழவேந்தன் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற உரிமைகள் குழு விசாரணை நடத்தும் என்று சபாநாயகர் லொகு பண்டார தெரிவித்தார்.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவை சேனதிராஜாவின் ஆனந்தவிகடனுக்கு வழங்கிய நேர் காணல்

http://www.tamilnaatham.com/pdf_files/mava..._2006_06_22.pdf

இழப்பதற்கு இனி எதுவும் இல்லை'

"ஒவ்வொரு ஈழத் தமிழர் வீட்டின் வாசலிலும் மரணம் காத்திருக்கிறது. அரசாங்கத்தின் அனுமதியுடன் ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளும் புகுந்து , ஈவிரக்கமின்றிக் கொலை செய்கிறது சிங்கள இராணுவம். அந்தத் துப்பாக்கிகளைப் போலவே, அவற்றை ஏந்தியிருக்கும் மனிதர்களும் உணர்ச்சியற்றவர்களாகவே இருக்கிறார்கள். இல்லாமல் போனால், 7 வயதுக் குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்ய யாருக்காவது மனசு வருமா? இலங்கையில் அமைதி திரும்ப இன்னும் இப்படி எத்தனை குழந்தைகளை நரபலி கேட்கப் போகிறார்களோ?"

சேனாதிராஜா பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் துயரம் ததும்புகிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் அக் கட்சியின் பாராளுமன்ற துணைத் தலைவருமான சேனாதிராஜா தமிழகம் வந்திருந்தார். போர்ச் சூழலின் காரணமாக அகதிகளாக தமிழகம் வரும் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான முன்னேற்பாடுகளுக்காக முகாமிட்டிருந்தவரைச் சந்தித்தோம்...

"மீண்டும் அதிக அளவில் ஈழத் தமிழர்கள் அகதிகளாகப் புலம் பெயரத் தொடங்கி இருக்கிறார்களே?"

"ஐம்பதாண்டு காலப் போராட்டத்துக்கான தீர்வு இன்னமும் எம் மக்களுக்குக் கிடைக்கவில்லை. செழித்து வளர்கிற பூமி எங்களுடையது. விருந்தினர்களாக எங்கள் வீடுகளுக்கு வருபவர்களை வயிறு நிறைய, மனம் நிறைய உபசரித்து அனுப்புவோம். இன்று ஏர் உழுத தடம் மாறி, இராணுவ பூட்ஸ்களின் தடங்களைச் சுமந்தபடி கேட்பாரற்றுக் கிடக்கின்றன எங்கள் வயல்கள். எம் மக்கள் ஒரு வேளைச் சோற்றுக்கும் வழியின்றி தஞ்சம் தேடி அகதிகளாகின்றனர். இதுவரை, 30 ஆயிரம் பேருக்கும் அதிகமான மக்கள் புலம் பெயர்ந்து விட்டதாகத் தெரிகிறது. ஆனால், சில ஆயிரம் பேர் மட்டும் தான் உயிருடன் வந்து சேர்ந்திருக்கிறார்கள். மற்றவர்கள் எங்கே என்று கவலைப்படுவதா? அல்லது, இங்கே வந்து அகதிகள் என்கிற பெயரில் அநாதைகளாகிற மக்களுக்காக அக்கறை கொள்வதா? மக்களைக் கொன்று ஒரே குழியில் போட்டுப் புதைக்கிற புதைகுழிகளைப் பற்றி இனி செய்திகள் நிறைய வரலாம். செம்மணி புதைகுழியைப் போல இப்போது ்கோப்பாய் புதைகுழியில் அழுகிய நிலையில் பல பிணங்களை எடுத்திருக்கிறார்கள். அவை வெகு சமீபமாகக் கொன்று குவிக்கப்பட்ட மக்களின் உடல்களாகத் தான் இருக்கும். கடந்த வாரம் கூட மன்னார் மாவட்டம் வங்காலை என்னும் இடத்தில், ஒரு குடும்பத்தையே ஒட்டு மொத்தமாகக் கொலை செய்திருக்கிறார்கள். கணவன், மனைவியுடன் அவர்களின் 7 வயது மகனையும், 9 வயது மகளையும் கொன்று போட்டிருக்கின்றனர். பிள்ளைகளின் எதிரிலேயே அந்தத் தாய் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு , துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இப்படி இரத்தம் உறைய வைக்கும் இத்தகைய செய்திகளை இன்னும் எவ்வளவு கேட்க வேண்டி இருக்குமோ?"

"சிங்கவர் - தமிழர் இணைந்து கூட்டாட்சி அமைக்கிற வாய்ப்பே இனி இல்லையா?"

"இலங்கைத் தமிழர்களிடம் இனி இழப்பதற்கு எதுவும் இல்லை. ஐந்து வீடுகளைக் கூடப் பாண்டவர்களுக்குத் தர முடியாது என்று சொன்ன கௌரவர்களைப் போல, இலங்கைத் தமிழ் மக்களை வஞ்சித்துள்ளது இலங்கை அரசு. இரு தரப்புக்குமான நல்ல முடிவுகளை இனி அது எடுக்கும் என்கிற நம்பிக்கையே எங்களுக்கு இல்லை. இனிமேல், தனி நாடுதான் எங்களுக்கான ஒரே தீர்வு. பிரிட்டிஷ்காரர்களிடமிருந்த

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.