Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா மீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோல்வி – ஜெனிவா வாய்ப்பையும் தவறவிடுமா இந்தியா?

Featured Replies

சிறிலங்கா மீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோல்வி – ஜெனிவா வாய்ப்பையும் தவறவிடுமா இந்தியா?
 

65வது சுதந்திர தினத்தில் உரையாற்றிய அதிபர் மகிந்த ராஜபக்ச, தமிழர்களுக்கு சுயாட்சி உரிமை கிடையாது என அறிவித்திருந்தார். இதன் மூலம் இந்தியாவுடனான சிறிலங்காவின் வரலாற்று ரீதியான உடன்பாட்டை இது மீறுகின்றது. இந்தியாவை சிறிலங்கா ஏமாற்றிவருகிறது.

 

இவ்வாறு Firstpost.com இணையத்தளத்தில் G Pramod Kumar எழுதியுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை பதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

 

இந்தியாவானது சிறிலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அனைத்துலக சமூகம் மேற்கொள்ளும் அழுத்தத்தை தடுத்தல் மற்றும் சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் புறக்கணித்தல் போன்றவற்றில் பூகோள அரசியல் பலவீனம் காரணமாக சிறிலங்கா அரசாங்கத்திற்குச் சார்பாகச் செயற்பட்டால் வரும் மார்ச்சில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடரில் இந்தியாவுக்கு கிடைக்கப் பெறும் மிகப் பெரிய நல்வாய்ப்பொன்றை தவறவிடலாம்.

 

கடந்த ஆண்டில் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவிற்கு எதிராக அமெரிக்கா தலைமையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்ட பின்னரும் கூட, சிறிலங்காவானது அனைத்துலக சமூகத்தின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை.

 

இவ்வாண்டில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், 2009ல் சிறிலங்கா இழைத்த போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அந்நாட்டின் நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை சிறிலங்கா அரசாங்கம் அமுல்படுத்தத் தவறியமை தொடர்பாக மீண்டும் வலியுறுத்தப்படும்.

 

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கடந்த ஆண்டு கூட்டத் தொடரில் சிறிலங்காவை எதிர்த்து முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து அமெரிக்காவும் வேறு 23 உறுப்பு நாடுகளும் வாக்களித்தன. இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கமானது தனது சொந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றும் என இந்த நாடுகளும், அமெரிக்காவும் நம்புகின்றன” என அண்மையில் சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலகத்தின் பிரதி உதவிச் செயலர் ஜேம்ஸ் மூர் தெரிவித்திருந்தார்.

 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தம் நிறைவுற்ற பின்னர், இந்தப் போரின் இறுதியில் கொல்லப்பட்ட 40,000 தமிழ் மக்கள் மற்றும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவானது தனது இறுதி அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு குறிப்பிட்ட போதிலும், சிறிலங்கா அரசாங்கம் இந்தப் பரிந்துரைகளை நிறைவேற்றாது காலத்தை இழுத்தடித்து வருகிறது.

 

கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு இரு ஆண்டுகுள் ஆகின்ற நிலையில் கூட இன்னமும் இவை நடைமுறைக்படுத்தப்படவில்லை. அமெரிக்காவும் இதன் கூட்டணி நாடுகளும் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்த போது, இந்தியாவும் கடந்த ஆண்டில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு முன்னர் சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்குவதா அல்லது இல்லையா எனத் தீர்மானம் எடுப்பதில் குழப்பத்திலிருந்தது. பின்னர் இறுதியில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருந்தது.

 

இந்தியா இத்தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பதற்கு முன்னரும் பின்னரும், சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச்சாட்டுக்களைத் தட்டிக்கேட்கத் தவறியுள்ளது என்பதே உண்மையாகும். சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்து நிற்பதில் இந்தியா தனது பூகோள அரசியல் பலவீனத்தை முதன்மைப்படுத்துகிறது.

 

சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் சிறிலங்காவுடன் பூகோள அரசியல் உறவைப் பலப்படுத்தி வரும் நிலையில் தனது அயல்நாடான சிறிலங்காத் தீவுடன் முரண்பட்டுக் கொள்ள முடியாத நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. சிறிலங்காத் தீவில் தனது பொருளாதார மற்றும் மூலோபாய நலனை அடைந்து கொள்வதை நோக்காகக் கொண்டு சீனா செயற்படுகிறது.

 

“சிறிலங்கா தனது நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கான உடன்பாட்டை சீனாவுடன் செய்துள்ளது. இவ்வாறான திட்டங்களை மேற்கொள்வதில் இந்தியாவை சிறிலங்கா ஓரங்கட்டுவதற்கான காரணம் தெரியவில்லை.

 

எதுஎவ்வாறிருப்பினும் சிறிலங்காவின் இந்த நகர்வானது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தன்னை நியாயப்படுத்துவதற்கு தடையாக இருக்கும் என்பதே உண்மையாகும்” என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளியலாளருமான கலாநிதி கர்சா டீ சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அனைத்துலக விமானநிலையத் திட்டங்கள் தவிர சீனாவானது சிறிலங்காவில் பிறிதொரு நெடுஞ்சாலைத் திட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதுடன், விவசாயம் போன்ற ஏனைய துறைகளிலும் முதலீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகியவற்றுக்குப் பின்னர் தற்போது சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் மேலும் எதேச்சதிகார சக்தியாக மாறியுள்ளது. இந்த வரிசையில் அண்மையில் சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசரான சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டு அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 

சிறிலங்காவில் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் அனைத்துலக சமூகம் ஆகியன சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதியான நடவடிக்கையை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்த போதிலும் கூட சிறிலங்கா அரசாங்கம் இதனை செவிமடுக்கவில்லை.

 

நீதிமன்றின் அனுமதியில்லாது மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை சிறிலங்கா அரசாங்கம் எடுக்கக் கூடாது என சிராணி பண்டாரநாயக்க கோரியதை அடுத்தே மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இவரை பதவியிலிருந்து நீக்கியது.

 

சிறிலங்காவில் தனக்குள்ள அறுதிப் பெரும்பான்மைப் பலத்துடன் சிராணி பண்டாரநாயக்கவைப் பதவியிலிருந்து நீக்கிய அதிபர் மகிந்த ராஜபக்ச புதிய நீதியரசராக தனது விசுவாசி ஒருவரை நியமித்துள்ளமையானது நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்துள்ளது. இதன் மூலம் நாட்டில் தேர்வு செய்யப்பட்ட முதலாவது ஜனநாயகவாதியான சிறிலங்கா அதிபர் மேலும் அதிகாரத்தைக் கொண்டுள்ள ஒரு சக்தியாக மாறியுள்ளார்.

 

சிறிலங்காவில் சுயாதீன நீதித்துறைக்கு விழுந்த பெரும் அடியாகவே சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அமைந்துள்ளது. ஒப்பீட்டளவில் சிறிலங்காவை விட தற்போது, சிதைந்து போயுள்ள பாகிஸ்தானின் நீதித்துறை சிறப்பாக காணப்படுகிறது.

 

தமிழ் மக்கள் வாழும் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பதை சிறிலங்கா அதிபர் தனது நோக்காகக் கொண்டிருக்கவில்லை என்பதையே சிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கப்பட்டமை சுட்டிக்காட்டுகிறது. இந்நிலையில் சிராணி பதவி நீக்கப்பட்டமை சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோல்வியுற்றதைக் குறிக்கிறது. 13வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படுவது தொடர்பில் சிறிலங்கா இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில் சிறிலங்கா விருப்பங் கொண்டிருக்கவில்லை என்பதே சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில் 13வது திருத்தச்சட்டமானது மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதை நோக்காகக் கொண்டதாகும்.

 

நடந்து முடிந்த சிறிலங்காவின் 65வது சுதந்திர தினத்தில் உரையாற்றிய அதிபர் மகிந்த ராஜபக்ச, தமிழர்களுக்கு சுயாட்சி உரிமை கிடையாது என அறிவித்திருந்தார். இதன் மூலம் இந்தியாவுடனான சிறிலங்காவின் வரலாற்று ரீதியான உடன்பாட்டை இது மீறுகின்றது. இந்தியாவை சிறிலங்கா ஏமாற்றிவருகிறது என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

 

இந்நிலையில் தமிழர்களுக்கான சுயாட்சி உரிமை என்பது சிறிலங்காவில் மூடப்பட்ட விடயமாகவே காணப்படுகிறது. சிறிலங்கா அதிபரின் சுதந்திர தின உரை மூலம் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு உரிமை சென்றடையக் கூடாது என்கின்ற தமது விருப்பத்தை வெளிக்காட்டியுள்ளனர். இந்நிலையில் தமிழ் மக்களுக்கான சுயாட்சி உரிமை என்பது வெறும் பகற்கனவாகவே காணப்படுகின்றது.

 

சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் காலாதிகாலமாக வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் இன ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் ஓரங்கட்டப்படுகின்றனர். வடக்கு கிழக்கில் தற்போது இராணுமயப்படுத்தல்கள் நிலவுகின்றன. தமிழர் தேசமும் சிங்கள மயப்படுத்தப்பட வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு சில பத்தாண்டுகளுக்கு முன்னர் சிங்கள ஆட்சியாளர்களால் முன்வைக்கப்பட்ட நடைமுறைகள் தற்போது மேலும் துரிதப்படுத்தப்படுகின்றன.

 

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிரான எதிர்ப்பலையால் இந்தியா தமிழ் மக்களின் பிரச்சினையில் பங்கெடுக்க வேண்டிய நிலையிலுள்ளது.

 

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியாவின் பீகார், திருப்பதி போன்ற இடங்களுக்கு பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த போது தமிழ் ஆதரவு அமைப்புக்கள் அதிபரின் வரவை எதிர்த்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

 

ராஜபக்ச மனித குலத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாலும், வருகின்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியாவின் கருத்து வாக்கெடுப்பைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவதை நோக்காகக் கொண்டும் சிறிலங்கா அதிபர் இந்தியா வரவுள்ளதால் அவரது வரவை ஏற்றுக் கொள்ளவேண்டாம் என திராவிட முன்னேற்றக் கழகத்தால் தலைமை தாங்கப்படும் தமிழீழ ஆதரவாளர் அமைப்பின் சந்திப்பொன்றில் கருணாநிதி இந்திய மத்திய அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

 

“இந்தியா எமது நட்பு நாடு. அயல் நாடு. இந்தியா சிறிலங்கா எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகளின் போது தனது ஆதரவுக் கரத்தை தந்துள்ளது. தற்போதும் இந்தியா சிறிலங்காவின் நட்பு நாடாகத் தொடர்ந்தும் உள்ளதால் வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள பேரவையின் கூட்டத் தொடரில் இந்தியா, சிறிலங்காவுக்கு ஆதரவாக இருக்கும் என நாம் நம்புகிறோம்” என சிறிலங்கா ஊடக அமைச்சர் கெகலிய றம்புக்வெல தெரிவித்துள்ளார்.

 

இந்தியா மீண்டும் தனது பூகோள அரசியல் விடயத்தை தனக்கான ஆடுபொருளாகப் பயன்படுத்துவதற்கான தருணம் இதுவாகும்.

 

http://naamthamilar.ca/?p=49766.html

  • தொடங்கியவர்

ஒரு நாட்டின் வெளிவிகார கொள்கை என்பது நாட்டு நலன் சார்ந்ததாக இருக்கவேண்டும்.

 

வெறும் குடும்ப நலத்தையும் ஊழலையும் நம்பினால் நாடு அழிந்துவிடும். கட்டுரையை எழுதிவர் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினால், அரசியல்வாதிகள் கொள்கைவகுப்பாளர்கள் உணர்ந்தால் நன்று.

  • தொடங்கியவர்

கிரகங்கள் எல்லாமே வரிசையாக நிற்கின்றன:

 

மாசி : "சுதந்திர தின" விழாவில் எந்த உரிமைகளையும் பகிர மாட்டேன் என கூறிய செய்தி இந்திய ஊடகங்கள், அரசியல்வாதிகள் கவனத்திற்கு சென்றுள்ளது. மகிந்தாவின் வரவும் உணர்வலைகளை பரவவிட்டுள்ளது

 

 இந்நிலையில் தமிழர்களுக்கான சுயாட்சி உரிமை என்பது சிறிலங்காவில் மூடப்பட்ட விடயமாகவே காணப்படுகிறது. சிறிலங்கா அதிபரின் சுதந்திர தின உரை மூலம் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு உரிமை சென்றடையக் கூடாது என்கின்ற தமது விருப்பத்தை வெளிக்காட்டியுள்ளனர். இந்நிலையில் தமிழ் மக்களுக்கான சுயாட்சி உரிமை என்பது வெறும் பகற்கனவாகவே காணப்படுகின்றது.

 

பங்குனியில் ஐ.நா. மனித உரிமை பேரவையிலும் வர உள்ள தீர்மானங்களை 'எதிர்கொள்வோம்' என சவால் தெரிவித்துள்ளனர்



சித்திரையில் பொதுநலவாய மாநாடு கார்த்திகையில் நடக்குமா இல்லையா? என முடிவாகும். சிரானிக்கு  பதவி கொடுத்தாலும் அது உதவாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.