Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டசபையில் அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பனுக்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் சரமாரி அடி-உதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசியதோடு மட்டுமல்லாமல் தன்னைப் போலவே மற்ற தேமுதிக எம்.எல்.ஏக்களும் ஜெயலலிதா பாதைக்கு வர வேண்டும் என்று திட்டக்குடி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. தமிழழகன் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த தேமுதிக எம்.எல்.ஏக்கள் அவரை அடிக்கப் பாய்ந்தனர். அவர்களை ராதாபுரம் தேமுதிக எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் தடுக்க முயன்றார். அப்போது அவருக்கு சரமாரியாக அடி விழுந்தது.

சில மாதங்களுக்கு முன்பு திட்டக்குடி தமிழழகன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், மதுரை மேற்கு சுந்தரராஜன், பேராவூரணி நடிகர் அருண் பாண்டியன் ஆகிய நான்கு தேமுதிக எம்.எல்.ஏக்களும் முதல்வர் ஜெயலலிதாவை அடுத்தடுத்துப் பார்த்து அதிமுக ஆதரவாளர்களாக மாறினர்.

இதனால் தேமுதிக கடும் அதிர்ச்சி அடைந்தது. ஒருமுறை சட்டசபைக்குள் வைத்து சுந்தரராஜனை தேமுதிக எம்.எல்.ஏக்கள் மிகவும் அசிங்கமாகப் பேசி அவமானப்படுத்தினர்.

இந்த நிலையில் இன்று சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திட்டக்குடி தமிழழகன் பேசினார். அப்போது நான் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து எனது தொகுதிப் பிரச்சினைகள், குறைகள் குறித்து முறையிட்டேன். பல கோரிக்கைளை வைத்தேன். அவற்றை முறையாகப் பரிசீலித்தார் முதல்வர், முடிந்தவரை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்தார். முதல்வரைப் பார்தது விட்டு வந்த பின்னர்தான் எனது தொகுதிகளில் இப்போது பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

எனவே என்னைப் போலவே மற்ற தேமுதிக எம்.எல்.ஏக்களும் முதல்வரைச் சந்திக்க வேண்டும், தங்களது குறைகளைக் கூற வேண்டு்ம். அவற்றை நிறைவேற்ற முதல்வர் காத்திருக்கிறார் என்றார். அவருக்கு ஆதரவாக ராதாபுரம் மைக்கேல் ராயப்பனும் பேசினார்.

இதைக் கேட்டதும் டென்ஷன் ஆனார்கள் தேமுதிக எம்.எல்.ஏக்கள். உடனடியாக தங்களது இருக்கைகளிலிருந்து எழுந்து தமிழழகனைத் தாக்க ஓடினர். இதைப் பார்த்த மைக்கேல் ராயப்பன் தமிழழகனை யாரும் அடித்து விடாமல் தடுக்க முயன்றார். அப்போது தேமுதிக எம்.எல்.ஏக்கள் கையில் சிக்கிக் கொண்டார் மைக்கேல் ராயப்பன். அவரை தேமுதிகவினர் சரமாரியாக அடித்து நொறுக்கி விட்டனர். இதனால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவைக் காவலர்களை அழைத்த சபாநாயகர் தனபால், தேமுதிக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏக்கள் தவிர மற்றவர்களை அவைக் காவலர்கள் வெளியேற்றினர். காயமடைந்த மைக்கேல் ராயப்பன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்த வன்முறைத் தாக்குதல் நடந்தபோது முதல்வர் ஜெயலலிதாவும் அவையில் இருந்தார்.

மைக்கேல் ராயப்பனும் திருப்பி அடித்தார்-அனகை சட்டை கிழிந்தது

இந்த சண்டைக் காட்சியை அத்தனை உறுப்பினர்களும் பரபரப்புடன் வேடிக்கை பார்த்தனர். தன்னைத் தாக்கிய தேமுதிக எம்.எல்.ஏக்களை மைக்கேல் ராயப்பனும் பதிலுக்குத் தாக்கினார். அப்போது அனகை முருகேசன் என்ற தேமுதிக எம்.எல்.ஏவின் சட்டை கிழிந்தது. இருந்தாலும் தேமுதிக எம்.எல்.ஏக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மைக்கேலால் தனியாக சமாளிக்க முடியவில்லை. இதனால் அவருக்குத்தான் நிறைய அடிகள் விழுந்தன.

திமுக எம்எல்ஏக்கள் வரவேயில்லை:

நல்லவேளையாக இன்று திமுக எம்எல்ஏக்கள் யாரும் அவைக்கு வரவில்லை. தங்களுக்கு பேச அனுமதி தருவதில்லை, ஏதாவது பேசினால் குண்டுக்கட்டாக தூக்கி வெளியே போடுகிறார்கள் என்பதால் சட்டசபைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று அவைக்குப் போக மாட்டோம் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் நேற்றே அறிவித்துவிட்டது நினைவுகூறத்தக்கது.

Thatstamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் எழுந்து எதிர்ப்பு

தமிழழகன் பேசியபோது தேமுதிக எம்.எல்.ஏக்கள் மொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து தமிழழகன் பேச முயன்றபோது சிலர் எழுந்து அவரை நோக்கி ஓடினர்.

அப்போது சில எம்.எல்.ஏக்கள் சத்தமாக ஏதோ சில வார்த்தைகளை சொல்லியபடி ஓடினர்.

சந்திரகுமாருக்கும், மைக்கேலுக்கும் வாக்குவாதம்

தேமுதிக கொறடா சந்திரகுமார் படு கோபமாக காணப்பட்டார். தமிழழகனை நோக்கி முன்னேறிய அவரை மைக்கேல் ராயப்பன் தடுத்து நிறுத்தினார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அது அப்படியே கைகலாப்பாக மாறியது.

அடிதடி - சட்டை கிழிப்பு

இதைத் தொடர்ந்து தேமுதிக எம்.எல்.ஏ.க்களும், அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ.க்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். சட்டையை பிடித்து இழுத்து அடித்தனர். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. கூச்சல், அமளியாக இருந்தது.

சபாநாயகர் பேச்சைக் கேட்கவில்லை

சபாநாயகர் தனபால் அனைவரையும் சமரசம் செய்ய முயன்றார். ஆனால் நிலைமை கட்டுக்குள் அடங்கவில்லை. இதனால் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் சட்டசபையில் இருந்து வெளியேற்ற காவலர்களுக்கு உத்தரவிட்டார். உடனே அவை காவலர்கள் ஓடி வந்து தேமுதிக. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் கூண்டோடு வெளியேற்றினார்கள்.

துரோகிக்கு ஆதரவாக அதிமுக

பின்னர் வெளியே வந்த சந்திரகுமார் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். சந்திரகுமார் கூறுகையில், தேமுதிகவுக்கு துரோகம் செய்த தமிழழகன் எம்.எல்.ஏ. அதிமுகவினர் எழுதி கொடுத்ததை வாசித்தார். துணைக் கேள்வி கேட்கும்போது, விவாதம் போல அவர் விளக்கம் அளிக்கிறார்.

சபாநாயகர் எங்களுக்கு பாதுகாப்பாக இல்லை

முதல்வரைப் புகழ்ந்து பேசி அவர் செய்த துரோகத்தை நியாயப்படுத்துகிறார். அதை தட்டிக் கேட்டால் ஆளும் கட்சியினர், துரோகிகளுக்கு ஆதரவாக எங்களைத் தாக்க வருகிறார்கள். சபாநாயகர் எங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார் என்று நினைத்தால், அவர் எங்களை தாக்குபவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

காகிதங்களை வீசுகிறார்கள்

எங்கள் மீது புத்தகங்களையும், காகித கட்டுக்களையும் எடுத்து வீசுகிறார்கள். ஜன நாயகம் படுகொலை செய்யப்படுகிறது. தி.மு.க. ஆட்சியின்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவை அவமானப்படுத்தி விட்டதாக சட்டசபைக்கு வெளியில் வந்து கூறினார். இப்போது எங்களையே தாக்கி அவை காவலர்களை வைத்து வெளியேற்றுகிறார்கள்.

ஹைலைட்... அமைதியாக வெளியேறிய பண்ருட்டி...

தேமுதிக எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் அவைக் காவலர்கள் வெளியேற்றிய நிலையில் மூத்த உறுப்பினரும், தேமுதிக துணைத் தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் மிகுந்த அமைதியோடு, தானாக வெளியில் நடந்து சென்றார்.

Thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவும் நடக்கும்போது விஜயகாந்த் எங்கே? தண்ணியடிச்சிட்டு கவுந்திட்டாரா? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடிவாங்கினதால மைக்கல் ராஜப்பனுக்கு அம்மாவின் கடைக்கண் பார்வை கிடைச்சு அமைச்சு பதவியோ இல்லை விலை உயர்ந்த காரோ பரிசாக கிடைக்கலாம்

ஆனாலும் பணத்திற்காக விலை போன இவருக்கு நல்ல ஒரு பாடம் செம சாத்துப்படி :D

Edited by SUNDHAL

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.