Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருதிச் சாட்சியங்கள்

Featured Replies

குருதிச் சாட்சியங்கள்
தீபாவளி, பொங்கல், புதுவருடம் என பண்டிகை நாள்களில்தான் தமிழ்த் திரைப்படங்கள் அள்ளுகொள்ளையாக வெளியாவதுண்டு.

ஏனெனில் பண்டிகைக் காலங்களில் தான் பெருமளவான பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு இழுக்க முடியும்.   பொதுவாகவே இத்தகைய பண்டிகைகளின் போது அந்த நாள்கள் அரச விடுமுறை நாள்கள் என்பதால் எல்லோரது கவனமும் புதிய படங்களின் மீது பதிவதால் தாம் நினைத்த இலக்கினை இந்தத் திரைப்படங்களால் அடையமுடிகிறது.

 

 

என்னதான் மோசமான திரைப்படமாக இருந்தாலும் கூட முதலுக்கு பாதகமில்லாத நிலைமை பண்டிகைக் காலங்களில் தான் கிடைக்கிறது. எனவேதான் இத்தகைய பண்டிகைகளைக் குறிவைத்தே படங்களின் வெளியீட்டுத்திகதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.


ஜெனிவா மனிதஉரிமைகள் சபை அமர்வு ஆரம்பித்தாலே "சனல்4' தொலைக்காட்சி மீதே எல்லோரது பார்வையும் ஒரே கணத்தில் திரும்பும். ஏனெனில் ஒவ்வொரு முறையும் அதிர்வினை ஏற்படுத்தக்கூடிய காட்சித் துண்டங்களை ஆதாரங்களோடு வெளியிட்டு இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் பணியை "சனல்4'  தவறாது செய்து வருகிறது.

 

 

1. நிர்வாணக் கொலைகள்

உலகின் மனச்சாட்சியைப் பெரும் அதிர்வுக்குள்ளாக்கியது "சனல்4' வெளியிட்ட இலங்கையின் இறுதிப் போர் பற்றிய முதலாவது காட்சித்துண்டம். இது நிர்வாணக் கொலைகளையும், இசைப்பிரியா உள்ளிட்ட பெண்களின் உடலங்கள் விருந்தின் பின் சகதிக்குள் வீசி எறியப்பட்டதையும் உலகின் கண்களுக்குள் தெரியப்படுத்தியது.

 

 

நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கும் சதுப்பு நிலமொன்றில், ஆடைகளற்ற ஆடவர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் சீருடை அணிந்தோரால் அழைத்து வரப்படுகின்றனர். அவர்களுக்கு முன்னே தலைகளில் துவாரங்களோடு குருதியின் மீது குப்புறக்கிடக்கின்றன இன்னும் சில உடலங்கள்.


ஆனால் கண்களில் இறுக்கிக்கொண்டிருக்கும் கறுப்புத் துணி அந்த உடலங்களை நிர்வாண மனிதர்களுக்கு மறைத்துவிடுகிறது. துப்பாக்கிகளையும், எக்காளச் சிரிப்புகளையும், செல்போன்களையும் ஏந்தி நிற்கும் பச்சைச் சீருடை ஏவலாளிகள் எஜமானர்களின் உத்தரவை நிறைவேற்றுகிறார்கள். வெற்றுடம்புக்காரர்கள் சகதிக்குள் குந்தியிருக்க பணிக்கப்படுகிறார்கள்.

"பட் பட் பட்..."

 

ஒரு முறை அதிர்ந்து பின் கந்தப் புகையோடு அடங்குகிறது துப்பாக்கி. அதற்கிடையில் தலைசிதறி , இரத்தம் கொப்பளிக்க நிர்வாண மனிதர்கள் உயிரற்று வீழ்கிறார்கள்.  செல்போன்களின் பதிவாக்கம் அத்தோடு நின்றுவிடவில்லை. அப்பாலும் நகர்கின்றன.


அவை சீருடைக் காரர்களினால் கதறக் கதறக் குதறப்பட்ட பெண்களின் வெற்றுடம்புகள் மீது படர்கின்றன. ஆடைகள் அலங்கோலமாக அகன்றுபோயிருக்க, பிறந்த மேனியோடு வானைப்பார்த்தபடியே துவக்குச் சூடு வாங்கி இறந்துபோயிருந்தார்கள் அப்பெண்கள்.

இந்தக் காட்சிகளைப் பார்த்தோர் பதறிப்போயினர். திரையையும் தாண்டி குருதி அவர்களின் முகத்திலும் தெறித்தது. அதன் பின்னர் தான் போர்க்குற்ற விசாரணை பற்றிய குரல்களின் தொனி உயரத்தொடங்கியது. புலம்பெயர் நாடுகளில் இலங்கை அரசுக்கு எதிரான அகிம்சை வழிப்போராட்டங்கள் தீ போல பற்றி எரியத்தொடங்கின.


 

2. துளையிடப்பட்ட லோகிதாசன் 

அரிச்சந்திரனின் மகன் லோகிதாசன் தர்ப்பை கொய்யச்சென்றான். பாம்பொன்று அந்தப் பச்சிளம் பாலகனை தீண்டியது. கூடச்சென்றவர்கள் அவன் உடலை மரம் ஒன்றின் கீழே இலைகளால் மூடிவிட்டு ஓடிவந்துவிட்டார்கள். சந்திரமதியிடம் லோகிதாசன் இறந்ததைச் சொன்னார்கள்.

 

ஆனால் இறுதிப்போரின் போது துப்பாக்கிச் சன்னங்களினால் துளையிடப்பட்ட லோகிதாசனின் இறப்புப்பற்றி யாராலும் எவருக்கும் சொல்லமுடியவில்லை. ஏனெனில் சந்திரமதி பற்றியோ, அரிச்சந்திரன் பற்றியோ யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

 

அத்தோடு லோகிதாசனோடு கூடச்சென்றவர்களைத் தீண்டிய பின்தான் நவீன பாம்புகள் அவன் மீது துப்பாக்கிச் சன்னங்களை துப்பியிருந்தன. லோகிதாசனின் இப்போதைய பெயர் பாலச்சந்திரன்.


விடுதலைப்புலிகளின் தலைவரின் இளைய மகன் பாலச்சந்திரன் கொலையுண்ட காட்சியை தனது இரண்டாவது வெளியீடாக்கியது "சனல்4'. கடந்த முறை மனித உரிமைகள் சபை முன்னால் இலங்கை விழிபிதுங்க நின்றபோது வெளியான இந்தக் காட்சிகளடங்கிய தொகுப்பு, இலங்கையின் மேனியில் தீயைப் படரச்செய்தது.

 

 

3. துயரேந்திகளின் குருதிக் குரல்கள்

இப்போது இன்னொரு வெளியீட்டுக்கு "சனல்4' நாள் குறித்துவிட்டது. மார்ச் மாதம் நடக்கவுள்ள மனிதஉரிமைகள் சபை அமர்வின் போது தமது புதிய வெளியீடு காட்சிக்கு வரும் என்று "சனல்4' அறிவித்திருக்கிறது. அதன் முன்னோட்டக் காட்சிகளடங்கிய சிறு தொகுப்பை இப்போது வெளியிட்டிருக்கிறது.

 

 

அதில் இறுதிப்போரின் போது வகைதொகையின்றி ஏவப்பட்ட போரயுதங்களால் தாக்குண்டு வீழ்ந்த ஆயிரக்கணக்கான மக்களின் கதறல்கள்  பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.


போர் தொடங்கிய நாள் முதல் ஒவ்வொன்றாக இழந்து இழந்து, துயரேந்திகளாக மாறிப்போன அப்பாவி மக்களின் கடைசிக் குரலை குருதியின் நடுவே பதிவு செய்திருகிறது இந்தக் காணொளி. இதனையே

முன்னோட்டக் காட்சிகள் காட்டியும் சொல்லியும் நிற்கின்றன.

 

இது முன்னைய வெளியீடுகள் போல ஒரு சில மனிதர்களின் கொலையுறுதலை மாத்திரம் உள்ளடக்காது, தொகுப்புக் கொலைகளை இரத்தமும் சதையுமாக திரையில் படரவிட இருக்கிறது.


வழமைபோலவே இந்த முறையும் "இந்தக் காட்சிகளெல்லாம் புனையப்பட்டவை. கேரளாவிலோ, புலம்பெயர் நாடு ஒன்றிலோ தேர்ந்த நடிகர்களால் ஆற்றுகை செய்யப்பட்டவை" என்று கீறல் விழுந்த ஒலித்தட்டுப்போல அரசு மாய்மாலம் கொட்டக்கூடும்.

 

ஆனாலும் ஆயிரமாயிரம் குருதிச் சாட்சியங்களின் முன்னால் இந்த அதிகாரக்குரல் நின்று படிப்பது கஷ்டத்திலும் கஷ்டம்!


=ஒளண்யன்

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=4195846111732043

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருதிச் சாட்சியங்கள்

  • தொடங்கியவர்

ஜெனிவா மனிதஉரிமைகள் சபை அமர்வு ஆரம்பித்தாலே "சனல்4' தொலைக்காட்சி மீதே எல்லோரது பார்வையும் ஒரே கணத்தில் திரும்பும். ஏனெனில் ஒவ்வொரு முறையும் அதிர்வினை ஏற்படுத்தக்கூடிய காட்சித் துண்டங்களை ஆதாரங்களோடு வெளியிட்டு இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் பணியை "சனல்4'  தவறாது செய்து வருகிறது.

 

உண்மை. இம்முறையும் சனல் நாலு தனது அளப்பரிய சேவையை செய்யும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.