Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தினரிடம் நாங்கள் ஒப்படைத்த உறவினர்கள் எங்கே?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
killinochi-seithy-1-20130217-150.jpg

2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் இராணுவத்தினரிடம் நாங்கள் ஒப்படைத்த எங்கள் உறவினர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதையாவது வெளிப்படுத்தச்சொல்லுங்கள் என கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பொது எதிரணியினர் முன்னிலையில் மக்கள் உருக்கமான வேண்டுகோளை விடுத்திருக்கின்றனர். சனிக்கிழமை காலை கிளிநொச்சியிலுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகம் (அறிவகம்) சென்றிருந்த பொது எதிரணியினர் அங்கு கூடியிருந்த சுமார் நூற்றுக்கணக்கான காணாமல்போனவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

  

இதன்போதே மக்கள் இந்த உருக்கமான வேண்டுகோளை விடுத்திருக்கின்றனர். 'முள்ளிவாய்க்காலில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் முல்லைத்தீவு, ஓமந்தை பகுதிகளில் வைத்து இராணுவத்தினரிடம் எங்கள் பிள்ளைகளை, கணவன், மனைவியை, பிள்ளைகளை ஒப்படைத்தோம். ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்றுவரையில் தெரியவில்லை, இராணுவத்தினர் தமக்கு எதுவும் தெரியாது எனக்கூறுகின்றனர். அரசாங்கம் அப்படி யாரையும் இராணுவம் பொறுப்பேற்க வில்லை எனக்கூறுகின்றது. அப்படியாயின் எங்கள் பிள்ளைகள் எங்கே? எங்கள் பிள்ளைகளுடன் சிறுவர்கள், சிறுமியர்களையும் கூட்டிச் சென்றார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது? உறவுகளை தொலைத்துவிட்டு, மனநோயாளிகளாக, வறியவர்களாக, நோயாளிகளாக மாறியிருக்கின்றோம் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை கூறுங்கள்' என கண்ணீர் மல்க தங்கள் உறவுகளின் புகைப்படங்களுடனும், புகைப்படப் பிரதிகளுடனும் மக்கள் கண்ணீர் மல்கினர்.

 

இந்நிலையில் குறித்த சந்திப்பு கடுமையான மன உளைச்சலை தமக்கு ஏற்படுத்தியிருப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகத்தில் இடம்பெற்ற இன்றைய சந்திப்பு மிகவும் பெறுமதிவாய்ந்த ஒன்று என்றும் பொது எதிரணியினர் இன்று மாலை நடைபெற்றிருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளதுடன், அந்த மக்களின் கண்ணீருக்கும், இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்குச் செய்திருக்கும் அநீதிகளுக்கும் நிச்சயமாக பதில் சொல்லியாகும் நிலை உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ள பொது எதிரணியினர், விடயம் தொடர்பில் பாராளுமன்றிலும், சர்வதேச ஜனநாயக அமைப்புக்களிடமும் தெரியப்படுத்துவோம் என உறுதியளித்துள்ளனர்.

 

killinochi-seithy-1-20130217-450.jpg

 

 

killinochi-seithy-2-20130217-450.jpg

 

 

killinochi-seithy-3-20130217-450.jpg

 

 

killinochi-seithy-4-20130217-450.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=76210&category=TamilNews&language=tamil

RW.jpg

 

A destitute woman telling her story of despair to Opposition UNP leader and pleading with him to help her

when he visited Kilinochchi yesterday. With Mr. Wickremesinghe is TNA Parliamentarian Mavai Senathirajah.

இந்த உறவுகளின் கண்ணீர் எப்போது துடைக்கப்படுமோ என்று தெரியவில் அவர்களின் துயர வாழ்விற்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்படும் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.