Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் சொன்ன செய்தி கேளீர்......

Featured Replies

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா. யாழ்ப்பாணத்தில் முதலைகள் அவ்வளவாக இல்லாவிட்டாலும் மூர்க்கர்களுக்குப் பஞ்சமில்லை. அவர்கள் திசைக்கொன்றாக முளைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

அதுவும் தமது அடிப்படை உரிமைக்காக ஜனநாயக ரீதியில் போராட முனையும் மக்களின் குரல் வளையைக் கடித்து துப்புவதென்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் மூர்க்கர்கள் அதிகம் தான்.

சொந்த மண்ணிலேயே "பிறத்தியார்' போன்று எல்லாவற்றுக்கும் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்டதால் அரசியல் ரீதியாக தமிழர்கள் போராட முனைந்தனர். காகிதங்களில் நிறையக் கையெழுத்துக்களோடு ஒப்பந்தங்கள் உருவாகி கடைசியில் அவை குப்பைக்கூடைகளை நிறைக்கவே உதவின. எந்தவொரு ஒப்பந்தமும் ஒருபோதும் ஒப்பேறவில்லை.

அந்த வேளையில், நம்பிக்கைகள் வற்றிக்கொண்ட தருணத்தில் தான், நீண்ட காலச் சாத்வீகப் போராட்டங்களின் பெறுபேறுகள் அடுத்தடுத்துப் பூச்சியங்களாகவே எஞ்சின. தமிழர்கள் பற்றிக்கொண்டனர் ஆயுதங்களை.

குண்டு விழுந்தால் என்ன, வீடு குலுங்கி இடிந்தால் என்ன, உடல் துண்டாகிப் பறந்தால் என்ன, அவற்றைப் பற்றியெல்லாம் சட்டைசெய்யாது விடுதலை என்ற இலக்கை நோக்கி தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களோடு நடந்தார்கள். நமக்கென்றும் ஒரு நாடு கிடைக்கும் என்ற கனவு பலிதமாவது போல் இருந்தது.

கடைசியில் எல்லாமே ஒரு துர்க்கனவாகி சிதைந்து போயின. எல்லாத் திசைகளிலும் ஓங்கி ஒலித்த விடுதலையின் பாடல் முள்ளிவாய்க்கால் கடற்கரையோரமாக காற்றோடு கரைந்துபோயிற்று. ஆயுதங்களை மௌனித்துவிட்டு மீண்டும் ஜனநாயகத்தின் பக்கம் தமிழர்கள் பார்வையைத் திரும்பியுள்ள காலம் இது.

"வருவோர் போவோரையெல்லாம் கடித்துக் குதறிய விலங்கைத்தான் கொன்றோம். விட்டிருந்தால் அது எல்லோரையும் கடித்திருக்கும்.'' என்ற வாதமே அதிகாரத்தின் நியாய முகமூடியாக இருக்கிறது.

ஆனால் அடுத்தவன் வீட்டுக்குள் மதிலேறிக் குதித்துவிட்டு, அங்கு காவலுக்கு நின்ற பிராணியிடம் கடிவாங்கிவிட்டு, இப்படி கட்டாக்காலி என்று கதைவிடுவதை உலகம் நம்பாவிட்டாலும் நம்புவது போன்று நடிக்கத்தான் வேண்டும். ஏனெனில் அதிகாரத்தை மதிலேறி குதிக்கவைப்பதற்காக குனிந்து தம் முதுகை ஏணியாக்கியவை இந்த நாடுகள் தான்.

அகங்காரக்காரர்கள் போருக்குப் பின்னான பொழுதுகளில் அதிகளவில் பிரசவிக்கப்பட்டார்கள். ஆயுதத்தை தமிழர்கள் மறந்துபோயிருந்தாலும் அவர்கள் மறக்க விடுவதாக இல்லை.

ஆயுதம் தூக்கியது தவறு என்று சொல்லி உலகச் சண்டியர்கள் எல்லோரோடும் கைகோர்த்து அடித்து வீழ்த்தி புதைத்தவர்கள், இப்போது அகிம்சையும் ஆகாதென்று பாய்கிறார்கள்.

உரிமைக்காகப் போராட இரு வழிகளே உள்ளன. ஒன்று அகிம்சை மற்றையது ஆயுதம். இவற்றைத் தவிர வேறு மார்க்கங்கள் இல்லாவிட்டால் அதிகாரத்தின் அடிதொழுது, அவ்வப்போது வீசப்படுகின்ற எலும்புக்கோ அல்லது பழைய செருப்புக்கோ பல்லிளித்துக் கொண்டு வாலாட்டவேண்டும். அதுவே புதிய போக்கின் இருத்தலுக்கான வழி.

முள்வேலியிடப்பட்டு தசாப்தக் கணக்கில் பச்சைச் சீருடையால் போர்த்தப்பட்டுள்ள தங்களுடைய நிலங்களை தங்களிடம் தரும்படி மக்கள் கெஞ்சுகிறார்கள். அதில் எப்படித் தவறு இருக்கமுடியும்?

போர் ஓய்ந்து போன தேசத்தில் படைத்தரப்பின் பரவுகைக்கு அவசியம் கிடையாது. தங்களின் கேந்திர முக்கியத்துவத் தளங்கள் என்று நம்புகிற பகுதிகளில் மாத்திரம் அவர்கள் தங்கியிருக்கலாம். பொழுது போக்குக்கு நான்கு ஐந்து பரப்பில் தோட்டம் செய்து விளையாடலாம்.

ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு மக்களின் நிலம் முழுவதும் தமக்கே வேண்டும் என்று வீம்பு செய்வதில் உலக சட்டத்தில் எங்கே இடமுண்டு. மண்ணின் மைந்தர்கள் அகதிகளாக முகாம்களில் தங்கியிருக்க, பாதுகாப்புக்கென வந்தவர்கள் அவர்களின் நிலங்களை விழுங்க முனைவது  ஜனநாயக வரையறைக்குள் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதனால்தான் தங்களுக்காகத் தாங்களே குரல் கொடுக்க மக்கள் கிளம்பினார்கள்.

கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல மக்கள் போராடப் புறப்பட்ட சமயங்களில் எல்லாம்  அகங்காரக் காரர்களின் பிரசன்னமும் நிகழத் தவறவில்லை. இருப்பிடங்களுக்கு சென்று அச்சுறுத்தினார்கள். உயிர்ப் பயம் காட்டினார்கள். "குழந்தை குட்டிகள் கவனம்'' என்று அறிவுரை சேர்த்து அதட்டினார்கள்.

அதையும் மீறி வந்தவர்களுக்கு பொதிசெய்யப்பட்ட கழிவு ஒயிலால் அபிஷேகம் செய்தார்கள். சுடுகலன்கள் பொருத்தப்பட்ட படை வாகனங்களையும், கவசங்கள் பொருத்தப்பட்ட ஏவலாளிகளையும் எண்ணுக்கணக்கற்று நிறுத்திவைத்து உளரீதியாகப் போர் தொடுத்தார்கள்.

ஆனாலும் அசரவில்லை மக்கள். மீண்டும் மீண்டும் அகிம்சை கொண்டு  போராடினார்கள். தெல்லிப்பழையில் நேற்று முன்தினமும் எல்லா அச்சுறுத்தல்களையும் மிதித்தபடியே ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டனர். தங்கள் நிலங்களைத் தங்களிடமே தரும்படி வேண்டினர்.

அகங்காரக்காரர்களும் தம்முயற்சியில் சற்றும் மனம் தளரவில்லை. இந்தமுறை அவர்களுக்கு கழிவு ஒயில் கிடைக்கவில்லை போலும். பாவம், அவர்களும் என்ன செய்வார்கள். நிறைய இடங்களில் ஏற்கனவே எறிந்துவிட்டதால் கழிவு ஒயில் வாங்க அவர்கள் ஈரானுக்கா போக முடியும்? எனவே இந்த முறை திட்டத்தை மாற்றினார்கள்.

"நான்கு பேர் மக்களுக்குள் ஊடுருவி போராட்டத்தைக் குழப்ப வேண்டும்'' இதுவே அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை. ஏவலாளிகள் போல சொன்னதைச் செய்ய கூட்டத்துக்குள் மஞ்சள், நீலம், பச்சை என்று வர்ண முகமூடிகளோடு புகுந்துகொண்டார்கள்.

போராட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அங்கிருந்து அகன்றதும் அவர்கள் தங்கள் முகமூடிகளைக் கழற்றினார்கள். ஆனாலும் அவர்களின் அச்சுறுத்தல்கள் முன்னரைப் போலப் பலிக்கவில்லை. மாறாக போட்ட திட்டம் "பூமராங்'' போல (பூமராங்=ஆஸ்திரேலிய பழங்குடியினரின் ஆயுதம். சற்று கவனம் பிசகினாலும் எய்தவரையே திருப்பித் தாக்கிவிடும்.)

அகங்காரக்காரர்களையே திருப்பித் தாக்கத் தொடங்கியது. ஏற்கனவே தங்கள் நிலம் 20 வருடங்களுக்கு மேலாக மாற்றார் கையில் சிக்கியிருப்பதால் கொதித்திருந்த மக்கள் தேடப்பட்டவர்கள் சிக்கிவிட்டால் சும்மா இருப்பார்களா?

மக்கள் முதலைகளாக மாறியதால் உட்புகுந்தவர்கள் கொண்டதை விட்டு ஓடி ஒளிய வேண்டியிருந்தது. ஓடினார்கள். "எங்களுக்காக அகிம்சை வழியில் குரல் கொடுப்போம்.  தடுத்தால்  இனிமேல் கைகளையே ஆயுதமாக்கிப் போராடவும் தயங்கோம்.'' இதுவே மக்கள் சொன்ன செய்தி.

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=2906946419838315

  • தொடங்கியவர்

 உரிமைக்காகப் போராட இரு வழிகளே உள்ளன. ஒன்று அகிம்சை மற்றையது ஆயுதம். இவற்றைத் தவிர வேறு மார்க்கங்கள் இல்லாவிட்டால் அதிகாரத்தின் அடிதொழுது, அவ்வப்போது வீசப்படுகின்ற எலும்புக்கோ அல்லது பழைய செருப்புக்கோ பல்லிளித்துக் கொண்டு வாலாட்டவேண்டும். அதுவே புதிய போக்கின் இருத்தலுக்கான வழி.

 

 

இதைத்தான் கெலும் மக்ரேயும் இந்தியாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில் கூறி இருந்தார்.

 

போர்குற்றங்கள் விசாரிக்கப்படாவிட்டால் நீதி கிடைக்காவிட்டால் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு அது வழி சமைக்கும் என.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.