Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலச்சந்திரன் படுகொலை பின்னணியில் போர்க்குற்ற விசாரணையை துரிதப்படுத்த கூட்டமைப்பு வேண்டுகோள்!

Featured Replies

பாலச்சந்திரன் படுகொலை பின்னணியில் போர்க்குற்ற விசாரணையை துரிதப்படுத்த கூட்டமைப்பு வேண்டுகோள்                                

                                             7959415d-bef0-4fc9-b22a-3d2d4fbf51d51.jp

                                        

'ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றச்சாட்டுகள்

தொடர்பாக ஒன்றரை மணிநேரம் ஒளிபரப்பப்படவுள்ள காணொளியில் உள்ள ஒரு பகுதியே

பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள்.

இதைவிட நெஞ்சை உருக்கும் கொடூரமான சம்பவங்கள் வெளிவரக்கூடும். எனவே,

இந்தியா உட்பட உலக நாடுகள் தாமதிக்காது இலங்கை அரசு மீது சர்வதேச

போர்க்குற்ற விசாரணைகளைத் துரிதப்படுத்தவேண்டும்.'

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற

உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்

வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பான

புகைப்படங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு

தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தெரிவித்தவை வருமாறு:

இலங்கை அரசானது தாம் வன்னியில் இறுதி யுத்தத்தில் மனிதாபிமான

நடவடிக்கைகளில் ஈடுபட்டோம் எனக் கூறிவருகின்றது. ஆனால், அவர்களின்

மனிதாபிமான நடவடிக்கையின் விசித்திரம் இப்போது அம்பலமாகியுள்ளது. சரணடைந்த

பச்சிளம் பாலகனுக்கு சாப்பிட 'பிஸ்கட்' வழங்கி சித்திரவதைசெய்து சுட்டுப்

படுகொலை செய்வதுதானா இலங்கை அரசின் மனிதாபிமானம்?

வழமையான பாணியில் இலங்கை அரசு பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாக

வெளிவந்துள்ள புகைப்படங்களையும் மற்றும் வெளிவரவுள்ள காணொளிகளையும்

முற்றுமுழுதாக மறுக்கும். யாழ். தெல்லிப்பளையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இராணுவப் புலனாய்வாளர்கள் காட்டிய

காட்டுமிரண்டித்தனத்தைக் கூட இலங்கை அரசு மூடிமறைக்க முற்படுகின்றது.

தமிழ், ஆங்கில, சிங்கள ஊடகங்களில் வெளிவந்த இராணுவப் புலனாய்வாளர்களின்

படங்கள், காணொளிகளைக்கூட அதிநவீன தொழில்நுட்பத்தில்

திரிபுபடுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாக

வெளிவந்துள்ள புகைப்படங்கள் மற்றும் வெளிவரவுள்ள காணொளிகளையும்

'தொழில்நுட்பத்தில்   திரிபுபடுத்தப்பட்டிருப்பவை' என்றே இலங்கை அரசு

கூறும்.

ஆனால், இந்தியா உட்பட உலக  நாடுகளின் கையில்தான் இலங்கை அரசின் இந்தக்

கொடூர செயல்களுக்கான பதில்கள் தங்கியிருக்கின்றன. இந்தக் கொடூரக்

காட்சிகளைப் பார்வையிட்ட பின்னர் அரசியலுக்காக அறிக்கைகளை வெளியிட்டுவிட்டு

உலக நாடுகள் அமைதியாக இருக்கக்கூடாது.

இந்தியா உட்பட உலக நாடுகள் ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசுக்கு எதிராக

அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையை ஆதரிக்கவேண்டும். அத்துடன், 

தாமதிக்காது இலங்கை அரசு மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளைத்

துரிதப்படுத்தவேண்டும்.

இந்த விசாரணைகளின் ஊடாக தமிழ் மக்கள் படுகொலையுடன்

சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை கிடைக்கவேண்டும். யுத்தத்தில்

பாதிக்கப்பட்ட தமிழருக்கு நீதி கிடைக்கவேண்டும். தீர்வு கிடைக்கவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதையே வலியுறுத்தி நிற்கின்றது என தமிழ்த்

தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்

பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=7959415d-bef0-4fc9-b22a-3d2d4fbf51d5

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கேட்டது போன்று இந்த வருடம் ஐ.நா. சுயாதீன சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடல் வேண்டும்.

 

அது நடக்க கூட்டமைப்பும் தன்னால் முடிந்த ஆதரவுகளை துணிந்து தர வேண்டும்.


இந்த வரலாற்று சந்தர்ப்பத்தை கைவிட கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.