Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செப்டெம்பர் 7 இல் வட மாகாணசபைத் தேர்தல் - சர்வதேச நெருக்கடிகளை சமாளிக்க அரசு திட்டம்!

Featured Replies

செப்டெம்பர் 7 இல் வட மாகாணசபைத் தேர்தல் - சர்வதேச நெருக்கடிகளை சமாளிக்க அரசு திட்டம்!

                                    

                                        

                                             c0d9b17e-0158-4718-965c-f604e43915601.jp

                                        

                                        

 

சர்வதேசத்தின் தொடர்ச்சியான அழுத்தங்களால் வட மாகாணசபைத் தேர்தலை

செப்டெம்பர் 07 ஆம் திகதி நடத்துவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான

உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிடப்படவுள்ளதாக செய்திகள்

வெளியாகியுள்ளன.

வட மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என இந்தியா, அமெரிக்கா,

பிரிட்டன், கனடா உட்பட சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதால்

அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க முடியாத நிலையில் அரசு இந்த முடிவை

எடுத்துள்ளது.

குறிப்பாக, அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா தொடரில் ஏற்படும்

நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவும், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள

பொதுநலவாய மாநாட்டை இலக்குவைத்துமே அரசு வட மாகாணசபைத் தேர்தல் திகதியைத்

தீர்மானித்துள்ளதாக நம்பப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளில் அரசு

இறங்கியுள்ளது என்றும் தேர்தல் திகதியை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கான

ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிப்பு

விடுக்கப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, வடக்குத் தேர்தல் அறிவிப்பை விடுப்பதற்கு ஜனாதிபதியின்

கட்டளைக்காகத் தேர்தல் திணைக்களம் காத்திருக்கிறது. இயங்காத சபை ஒன்றுக்கு

அதாவது மாகாணசபையொன்றுக்கு முதன்முதலாகத் தேர்தல் நடைபெறும்போது அதற்கு

ஜனாதிபதியின் உத்தரவு அவசியம்.

குறிப்பாக, 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின்

10 (1) உப பிரிவிற்கமைய ஏதேனுமொரு மாகாணத்திற்கு முதன்முதலாக மாகாணசபைத்

தேர்தல் நடத்தப்படவுள்ளபோது அத்தகைய தேர்தலொன்றை நடத்துமாறு ஜனாதிபதி

தேர்தல் ஆணையாளருக்கு உத்தரவொன்றை பிறப்பித்தல் வேண்டும். இதற்கமைய

வடமாகாணசபைத் தேர்தல் விடயத்தில் ஜனாதிபதியின் உத்தரவுக்காகத் தேர்தல்

திணைக்களம் காத்திருக்கின்றது.

குறிப்பாக, ஏனைய மாகாணங்களுக்கு ஏற்கனவே தேர்தல்கள் நடைபெற்றுள்ளதால்

பதவிக்காலம் முடிவடையும்போது அல்லது அரசமைப்பின்படி ஆளுநர் குறித்த சபையைக்

கலைத்தாலே தேர்தல் ஆணையாளரால் தேர்தலுக்குச் செல்லமுடியும். இங்கு

ஜனாதிபதியின் உத்தரவு முக்கியம் பெறாது என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, வடக்குத் தேர்தல் செப்டெம்பரில் நடத்தப்படும் என சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்திருந்தமை தெரிந்ததே.

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=c0d9b17e-0158-4718-965c-f604e4391560

 வட மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா உட்பட சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதால் அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க முடியாத நிலையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

 

 

யாரை நிறுத்தப்போகிறார்? இராணுவத்தை அகற்றாமல் நியாயமான தேர்தல் நடக்குமா?

இந்த அறிக்கைகள் கார்த்திகையில் நடக்க உள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை 'பாதுகாக்கலாம்' , ஆனால் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமை தொடருக்கு "too little and too late "

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.