Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் இந்தியா?

Featured Replies

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா இன்னும் சில தினங்களில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அத்தீர்மானம் தொடர்பான நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்துவதில் இந்தியா மௌனம் சாதித்து வருகின்றது.

 

2012 மார்ச்சில் அமெரிக்காவின் அனுசரணையுடன் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களில் இன்னமும் நிறைவேற்றப்படாததை செய்து முடிக்குமாறு முன் தள்ளிவிடுவதற்கான தீர்மானமாகவே உத்தேச தீர்மானமும் அமையுமெனவும் அதற்கு அப்பால் வேறு எதுவும் இருக்காது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

ஆயினும் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் போன்று இது அமையாது என்றும் யுத்தத்துக்குப் பின்னரான நல்லிணக்கம், சட்ட ஆட்சி மற்றும் சர்வதேச மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கொழும்பு தொடர்ந்தும் அலட்சியப் போக்கைக் கடைப்பிடிப்பதால் சர்வதேச சமூகத்தின் விசனம் அதிகரித்து வருவதை கோடிட்டுக் காட்டுவதாக உத்தேசதீர்மானம் அமையும் என்பது மற்றொருவரின் அபிப்பிராயம்.

 

உலகின் பல நாடுகளில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கையை மட்டும்  விசேடப்படுத்தி இலக்கு வைப்பது ஏன்? என்பதும் போரில் எஞ்சியிருக்கும் புலிகளின் ஆதரவுச் சக்திகள் வழங்கும் தவறான தகவல்கள், அழுத்தங்களின் அடிப்படையிலேயே மேற்கு நாடுகள் சில செயற்படுவதாகவும் இலங்கை குற்றம் சாட்டுகிறது.

 

கடந்த 2012 இல் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் தேவையற்றதும் வேண்டப்படாததும் நேர்மையற்றதும் எனவும் நாடொன்றை விசேடப்படுத்தி கொண்டுவரும் எந்தவொரு தீர்மானத்தையும்  மனித உரிமைகள் பேரவை விவாதிக்கக் கூடாது என்பது இலங்கையின் திட்ட வட்டமான அறிவிப்பாகும். கடந்த வருடம் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்திருந்த போதும் அமெரிக்காவுடன் கலந்துரையாடி அத்தீர்மானத்தின் கடும் தொனியைக் குறைத்து ‘நீர்த்துப் போகச்‘ செய்யும் தந்திரோபாயத்தை கடைப்பிடித்ததன் மூலம் கொழும்பையும் தமிழ்நாட்டையும் திருப்திப் படுத்தியிருந்ததாகத் தோன்றுகிறது.

 

ஆனால் இந்தத் தடவை தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டுமென இந்தியாவின் சகல அரசியல் கட்சிகளுமே கடுமையாக வலியுறுத்தி வருகின்றன. இந்திய பாராளுமன்றத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக விசேட கவனயீர்ப்பு தீர்மானம் கடந்த புதன்கிழமை கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்ட போது எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை இலங்கையின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை இந்திய அரசாங்கம் அலட்சியம் செய்து வருவதாக கடுமையாக சாடியிருந்தன.


அதேசமயம், இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியின் முக்கிய பங்காளியான தி.மு.க. மாத்திரமன்றி தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களும் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன. ஆனால் அந்த விவாதத்தின் இறுதியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷிட் பதிலளித்த போது இலங்கையும் அமெரிக்காவும் தீர்மானம் தொடர்பாக நேரடியாகப் பேச வேண்டும் எனக் கூறியிருந்ததுடன், 13 ஆவது அரசியலமைப்பை முழுமையாக அமுல் படுத்த வேண்டுமென இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்துமென குறிப்பிட்டிருந்தார்.1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை  இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் அறிமுகப்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தமானது கடந்த 26 வருடங்களாக முழுமையாக  அமுல் படுத்தப்படாமல் இருந்து வரும் நிலையில் தமிழ் மக்களின்  பிரச்சினைத் தீர்வாக 13 ஆவது திருத்த வாய்ப்பாட்டையே இந்தியா  மனனம் செய்து வருகின்றது.

 

ஜெனீவாவில் அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் தொடர்பாக உரிய வேளையில் அறிவிக்கப்படும் என்று பதிலளிக்கப்பட்டிருக்கிறதே தவிர உத்தியோகபூர்வ நிலைப்பாடு தொடர்பாக மௌனம் சாதித்து வருவது ஆச்சரியத்தைத் தருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்ற அதே சமயம், சில தினங்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணயசாமி, அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்குமென உறுதியாக அறிவித்திருந்த நிலையில், சல்மான் குர்ஷிட் வெளியிட்ட கருத்து குழப்ப நிலையில் இந்தியா இருப்பதை வெளிப்படுத்துவதாக காணப்படுகிறது.

 

இந்திய ஊடகங்களால் "நாரதர்' என்று அடிக்கடி வர்ணிக்கப்படுபவரும் சிறந்த சட்ட வல்லுநருமான ஜனதாக் கட்சித் தலைவர் கலாநிதி சுப்பிரமணியம் சுவாமி நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்புக்கு வருகைதந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவரின் திடீர் வருகையும் உயர்மட்டச் சந்திப்பும் பாரிய திருப்பமொன்றுக்கு அத்திபாரமாகவே அமையும் என்பது பரவலான கருத்து.

 

இலங்கையில் இந்தியா கொண்டிருக்கும் வர்த்தக நலன்கள், சீன விவகாரம் என்பன ஜெனீவாத் தீர்மானம் தொடர்பாக உறுதியான நிலைப்பாட்டை எடுக்க டில்லி தயங்குவதாகத் தெரிகிறது. அதேசமயம், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் அலட்சியப்படுத்தி விட முடியாத நிலைமை உள்ளது. கடந்த வருடம் தீர்மானம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சகல தரப்பையும் திருப்திப்படுத்தும் உபாயத்தை இந்தத் தடவை வகுத்துச் செயற்படுவதும் கடினமான காரியமாகவே தோன்றுகிறது. 2012 மார்ச்சில் இலங்கையை இந்தியா "பிணையெடுத்தது' என்று அ.தி.மு.க. எம்.பி. இந்திய பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்த முறையும் அதே  இராஜதந்திர நடவடிக்கையை மேற்கொள்வது கடினமான விடயமே.

 

அதேசமயம் அரசியல் தீர்வுக்காகவும் இயல்பு வாழ்வுக்காகவும் நீண்டகாலமாக ஏங்கிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் நன்மை கருதி நியாயபூர்வமான முறையில் இந்தியா செயற்பட வேண்டும். மனுதர்ம சாஸ்திரத்தை உலகிற்குத் தந்த நாடு மனுதர்மத்திற்கு அமைவாகச் செயற்படும் என்பதே நியாயபூர்வமாகச் சிந்திப்போரின் நம்பிக்கை.

 

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=3142:2013-03-01-18-09-15&catid=294:editorial&Itemid=543

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.