Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அங்கிருந்து இங்கு...!

Featured Replies

இங்கிலாந்தில் வசிக்கும் வசதி படைத்தவர்களின் கடன் அட்டைகளின் இரகசிய இலக்கங்களை திருடி போலி கடன் அட்டைகளைத் தயாரித்த 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் 2,800 போலி கடன் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பெருந்தொகையிலான போலி கடன் அட்டைகள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உலகின் மிகப்பெரிய கடன் அட்டை மோசடிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவின் உதவி காவல்துறை அதிகாரி பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் சிங்களவர். ஒருவர் ஏறாவூரைச் சேர்ந்த தமிழர். சிங்களவர்கள் ஹொரண, ராகம, அம்பேபுஸ்ஸ ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் பொல்காவலையில் வசிக்கும் முஸ்லிம் ஒருவரும் கைது செய்யப்பட உள்ளார்.

இந்த சந்தேக நபர்கள் அனைவரும் இங்கிலாந்திலிருந்து அண்மையில் சிறிலங்கா திரும்பியவர்கள்.

இவர்களில் இருவர் கணனித்துறையில் சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளதாகவும் அங்கு அது தொடர்பான கற்கையினை மேற்கொண்டுள்ளனர் என்றும் குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர்கள் போலி கடன் அட்டைகளைப் பயன்படுத்தி இலங்கையிலுள்ள தனியார் வங்கிகளிலிருந்து சுமார் ஒரு கோடி ரூபா பணத்தைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட கடன் அட்டைகள் தவிர மேலும் 5,995 போலி கடன் அட்டைகளைத் தயாரிப்பதற்கு அவர்கள் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

இதற்காக இங்கிலாந்தில் வசிக்கும் வசதி படைத்தவர்களின் கடன் அட்டை இரகசிய இலக்கங்கள் மற்றும் தரவுகளை அவர்கள் ஒரு கணனியில் பதிவு செய்து வைத்துள்ளனர்.

இங்கிலாந்தில் எரிபொருள் நிலையங்களில் பணியாற்றும் இலங்கையர்கள் ஊடாகவே இவர்கள் இத்தகைய கடன் அட்டைகளின் இரகசிய இலக்கங்களைக் கண்டறிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்கள் இங்கிலாந்து தூதரகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளதுடன் தூதரக அதிகாரிகளும் விசாரணைகளுக்கான ஒத்துழைப்பினை வழங்கியதாக குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தகவல் புதினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்ச நாள் இங்க சவிசிலலையும் இதால நிறையப்பேர் சந்தோசமா வாழ்ந்தவையள். இது இங்கிலாந்தில இருந்து தான் சுவிசுக்கு வந்தது. எனக்கு ஒருக்கா என்ர நண்பரின்ர நண்பர் இலவசமா பெற்ரோல் அடிச்சு விட்டவர். பிறகு தானே தெரியவந்த எப்படி என்டு. ஆள் இப்ப உள்ளுக்கையோ எங்கையோ தெரியா. கொஞ்ச நாள் இதால எத்தின பேர் ஆடினவையள். இங்க இருக்கிற காவல்துறை என்ன சும்மாவே :( :(

ஹா ஹா கள்ளமட்டை கிங் ஆக்களின்ற பிஸினஸ் இப்பவும் நல்லா ஓடுதோ?

இந்த "சிப் அன்ட் பின்" வந்தாப்பிறகும் நடக்குது எண்டா உவங்கள் கெட்டிக்காரங்கள் தான்....

அந்த நாள் கள்ளமட்டை ராசாக்கள் எல்லாம் இப்ப பெரிய பிஸினஸ் பீப்பிள் தெரியுமோ?....கோட்டு சூட்டும் பஜிரோவும் நாலு அஞ்சு கடையும் கொழும்பில அப்பார'ட்மென்டும் கொலிடேயுமா கலக்குகினமாம்..தென்னிந்திய நடிகைகளோட வீட்டில ரெகுலரான விஸிட்டர்களும் இவர்கள் தானாம்..

அதோட அவேன்ற சொந்தக்காரர் கூட போட்டிபோட்டு காணிவாங்கிறதும் ஊரெல்லாம்சொல்லி பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் நடக்குதாம் அயல்களுக்கு காட்ட...கள்ளமட்டை காசில... இதால அயலவீட்டுக்காரரும் வெளியிலஇருக்கிற தங்கட பிள்ளையளை ஒரேநச்சரிப்பாம் லட்சங்களாய் அனுப்பச்சொல்லி.

;

உந்த லேட்டஸ்டா கள்ளமட்டை செய்யிறவையும் அதில கனகாலம் நிக்கிறவையும் தானாம் பிடிபடுகினம்...உந்த பிஸினஸில போட்டியால காட்டிகொடுப்புகளும் தாராளமாம்.

ஆனால்பாருங்கோ பலநாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான்.!!!!

chip & pin அட்டை இல் நீங்கள் pin அய் அமிள்த்தும் போது கவனமாக செய்யுங்கள். நீங்கள் அமிள்த்துவதை கமாராவில் பார்த்துத்தான் எடுக்கிறார்கள்.

pin அய் மாத்திரம் வைத்து ஒண்டும் செய்யமுடியாது. ஆனால் அதுவும் உங்கள் chip & pin கடன் அட்டையை உல்டா பண்ணுவதற்கு தேவையான முக்கிய தகவல்களில் ஒன்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு கனடாவில் கூட வங்கி அட்டைமோசடி மிகமோசம். தொலைபேசிஅட்டை போல் எரிபோருள் நிரப்பும் அட்டை விற்கின்ரார்கள். இவர்கள் எப்போது திருந்துவார்கள்?

¦À¡ÕÇ¡¾¡ÃôÀ¢ÃÉÔõ §À¡ðÊÔõ ÍÄÀÁ¡¸ ¦À¡ÕÇ£ðΞ¢ø ¬¨ºÔ¨¼§Â¡÷¸û þÕìÌÁðÎõ ¸ûÇÁ𨼠¸¢í ¸û þÕôÀ¡÷¸û.

þô§À¡Ð «Å÷¸û §º¨Å¨Â þÄí¨¸ þó¾¢Â¡ Á§Äº¢Â¡ º¢í¸ôâ÷ ¸É¼¡ «¦Áâ측 ¯ûÀ¼ ÀÄ¿¡Î¸ÙìÌ Å¢Š¾Ã¢òРŢðÎ «í¸ ¯ûÇŨÉÔõ ¦¸Î츢ȡ÷¸û..

¸ÅÉõ ¯í¸ûÁ𨼠.. ;-)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.