Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆவணப் படத்தை எடுக்க சேனல்4 யாருக்கும் நிதி கொடுக்கவில்லை: மெக்ரே

Featured Replies

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சேனல்-4 ஒளிபரப்பிய ஆவணப் படத்தை எடுத்த கெலம் மெக்ரே , விரிவான விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இலங்கையில் உள்ள யாரும் தங்களுக்கு உதவி செய்யவில்லை என்றும், இந்த ஆவணப் படத்தை எடுப்பதற்காக யாருக்கும் தாங்கள் பணம் கொடுக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

 

 

சேனல்-4 வெளியிட்ட ஆவணப் படத்தின் உண்மைத் தன்மையால், உலக நாடுகளின் மீதான பார்வை தற்போது இலங்கையின் மீது விழுந்துள்ளதாக மக்ரே குறிப்பிட்டுள்ளார். அரசின் செயல்பாடுகள் பற்றி விமர்சிப்பவர்கள் காணாமல் போவதும், மனித உரிமை மீறல்கள் குறித்து குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்கள் அடக்கப்படுவதும் வாடிக்கையாக நடைபெறும் நாட்டில், தகவல்கள் கிடைக்கப் பெற்ற விதத்தை கொண்டு அரசாங்கம் அச்சுறுத்தல்களை மேற்கொள்வது முறையற்றது என்று அவர் கூறியுள்ளார்.


இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சேனல்-4ன், முதல் ஆவணப்படம் வெளியிடப்பட்ட போது, இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, குற்றச்சாட்டுகளை மேலும் மேலும் மறைக்க முற்படுவதால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று தெரிவித்ததையும் மக்ரே, தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

"NO FIRE ZONE" ஆவணப்படம் தொடர்பாக இலங்கையில் வசிக்கும் எந்தக் குடிமகனும், ஆதாரங்களை வழங்கவில்லை என்றும், மெக்ரே தெரிவித்துள்ளார். சேனல்-4 வெளியிட்ட ஆவணப் படத்திற்கு ஆதாரம் வழங்கியவர்களை கைது செய்யப் போவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி, அந்நாட்டில் வெளியாகும், தி திவைனா (The Divaina) என்ற நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது.

 

http://puthiyathalaimurai.tv/callum-mcrae-on-channel-4-documentary

  • தொடங்கியவர்

இலங்கை இறுதியுத்தம் தொடர்பில் மேலும் பல ஆதாரங்கள்; தம்மிடம் உள்ளதாக கலம் மக்கரே தகவல்

 

 

இலங்கை இறுதியுத்தம் தொடர்பில் மேலும் பல ஆதாரங்கள் தம்மிடமுள்ளதாகவும் அதனை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் சனல் - 4 ஆவணப்பட இயக்குநர் கலம் மக்கரே தெரிவித்துள்ளார்.


இலங்கைப் போரில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போக்குற்றங்கள் தொடர்பில் ஆவணப் படங்கள் வெளியிட்ட சனல் - 4 ஆவணப்பட இயக்குநர் கலம் மக்கரேக்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதன்போதே கருணாநிதியிடம் மக்கரே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

இலங்கையின் போர்க்குற்றங்களை ஆவணப்படமாக தயாரித்தமைக்காக, நேற்று மதியம் மக்கரேயுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்த கருணாநிதி, கலம் மக்கரே தயாரித்துள்ள இந்த ஆவணப்படமானது தமிழ் நாட்டில் பெரிய உணர்வலைகளை தோற்றுவித்துள்ளது எனவும், இந்திய நிலைப்பாட்டில் மாற்றங்களை கொண்டுவர அது உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.


தமிழர்களுக்காக நீங்கள் பல பணிகளை ஆற்றியுள்ளீர்கள் எனக் கருணாநிதி தெரிவித்ததற்கு, நான் எனது கடமையைத்தான் செய்தேன். மேலும் சில ஆதாரங்கள் அடங்கிய காணொளிகளை விரைவில் தாம் வெளியிடவுள்ளதாகவும், கலைஞரிடம் மக்கரே தெரிவித்துள்ளார்.

 

ஜெனீவா சென்று லண்டன் திரும்பியுள்ள காலம் மக்ரே, உடல் நலக் குறைபாட்டில் இருந்தபோதிலும், தன்னுடன் பேசியமை தமக்கு மகிழ்ச்சி தருவதாக கலைஞர் கூறியுள்ளார்.


ஜெனிவாவில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மாணங்களை தி.மு.க உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்திய மத்திய அரசு அமெரிக்க தீர்மாணத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தி.மு.க உறுதியாக இருப்பதாகவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=607761879406640287

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் - கெலம் மக்ரே இடையேயான உரையாடல் பதிவுசெய்யப்பட்டுவிட்டது.. :unsure:

 

கலைஞர்: வணக்கம் தம்பி கெலம் மக்கரே..!

மக்ரே: வணக்கம்.. தலைவரே.. :wub:

 

கலைஞர்: தங்கள் காணொளி கண்டு மனம் வெம்பினேன்.. சினத்தில் தொங்கினேன்..

மக்ரே: நன்றி.. எல்லாம் நீங்கள் செய்திருக்க வேண்டியது.. :rolleyes:

 

கலைஞர்: சரியாகச் சொன்னாயடா தம்பி.. அடுத்த டெசோ மாநாட்டில் இந்த உரிமை மீறல்களை நானே காட்ட இருந்தேனடா.. நீ முந்திவிட்டாய்..

மக்ரே: இன்னும் காலம் கடந்துவிடவில்லை.. மிகுதியை நீங்கள் செய்யலாமே.. :huh:

 

கலைஞர்: இல்லையடா தம்பி.. உன் கைவண்ணத்திலேயே இருக்கட்டும்.. அதில் பாதி ஜெயலலிதாவைப் புறணி பாடுவதாக அமையட்டும்..

மக்ரே: ஆகட்டும் சார்.. ஆனால் உங்கள் மூன்று மணிநேர உண்ணாநோன்புதான் அதில் சிறப்பு அம்சமாக இருக்கும்.. :D

 

கலைஞர்: ??? :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.