Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டுப்பற்றாளர் மருத்துவர் மூர்த்தி அவர்களுக்கு டென்மார்க் வாழ் தமிழ் மக்களின் அஞ்சலிகள்.! வீரவணக்க நிகழ்வு!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனப்படுகொலைக்குள்ளான தமிழினத்திற்கும் தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்கும் அளப்பரிய பணிகளைச் செய்த தமிழீழத்தலைநகரான திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட வெண்புறா மூர்த்தி என அழைக்கப்பட்ட நமசியாயம் சத்தியமூர்த்தி கடந்த புதன்கிழமை பிரித்தானியாவில் இயற்கை எய்தினார்.

 

1980களின் ஆரம்பத்தில் தமிழீழவிடுதலைப்புலிகளுடன் இணைந்து செயல்பட்ட மருத்துவர் மூர்த்தி அவர்கள் சிறிலங்கா அரசால் கைது செய்யப்பட்டு சித்தரவதைக்குள்ளாக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து தமிழ்நாட்டடில் விடுதலைப்போராத்திற்காக பணியாற்றிய நாட்டுப்பற்றாளர் மூர்த்தி அவர்கள் தமிழீழத்தேசியத்தலைவரால் தமிழர் புனர்வாழ்வுகழகம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் தொடக்ககால உறுப்பினர்களில் ஒருவராகவும் இணைந்து பணியாற்றினார்.

 

1987ம் ஆண்டுப்பகுதியில் பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்து வந்த மருத்துவர் மூர்த்தி அவர்கள் தொடர்ந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் இணைந்து சிறிலங்கா இனவெறி அரசால் ஏதிலிகளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு பெரும்பணியாற்றினார். புpரித்தானியாவில் இயங்கிய தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திற்கு மட்டுமல்லாமல் புலம்பெயர் நாடுகளில் இயங்கிய அனைத்து தமிழர் புனர்வாழ்வுக் கழத்தின் வழர்ச்சிற்கும் அதன் பணிகளுக்கும் ஆன ஆக்கபூர்வமாக ஆலோசனைகளை நாட்டுப்பற்றாளர் மூர்த்தி அவர்கள் வழங்கிவந்துள்ளார். சிறிலங்கா அரசின் தாக்குதல்களால் அவயங்களை இழந்த எமது உறவுகளுக்கு பணியாற்றிய வெண்புறா அமைப்புடன் இணைந்து இறுதியாக பணியாற்றிமையால் எல்லோரும் இவரை வெண்புறா மூர்த்தி என அழைக்க ஆரப்பித்தனர். ஆயர்வேதம், அக்குபங்சர் வைத்தியத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர். அத்துடன் தமிழ் தொலைக்காட்சி வானொலிகளிலும் தோன்றி தமிழ் மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கிவந்தார். இங்கிலாந்து மகாராணியாரின் விருது பெற்ற வைத்தியரான இவர் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்டவர்.

 

டென்மார்க் தமிழ் மக்களிடையேயும் மனிதநேய செயற்பாட்டாளர்களிடையேயும் நாட்டுப்பற்றாளர் மூர்த்தி மிகவும் நன்கு அறிப்பட்டவராக இருந்துள்ளார். தமிழீழப் பிரதேசங்களை 2004ம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கிய போது அல்லப்பட்ட எமது மக்களுக்கு தமிழர்புனர்வாழ்வுக் கழகம் டென்மார்க் உதவிகளை நேர்த்தியாக பெற்று அல்லப்பட்ட எமது மக்களுக்கு உதவுவதற்கும் ஆலோசனைகளையும் வழங்கயிருந்தார். தமிழர் புனர்வாழ்வுக்கழகம் டென்மார்க்கில் சட்ட நெருக்கடிகளுக்குள்ளாக்கப்பட்ட போது தமிழர் புனர்வாழ்வுகழகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஆறுதல்களைகளையும் ஆலோசனைகளையும் வழங்கியவர்களில் நாட்டுப்பற்றாளர் மூர்த்தியும் ஒருவராகும்.

 

நாட்டுப்பற்றாளர் மருத்துவர் மூர்த்தி அவர்களின் மரணம் தமிழீழ மக்கள் அனைவருக்கும் ஒரு இழப்பாகும் மருத்துவர் மூர்த்தி அவர்களை நினைவுகூரும் இவ்வேளையில் அவரின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் நண்பர்கள் மற்றும் சக மனிதநேயசெயல்பாட்டாளர்களுக்கும் டென்மார்க் வாழ் தமிழ் மக்கள் சார்பில் தமிழர் நடுவம் டென்மார்க் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கின்றது.

 

தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்.

தமிழர் நடுவம் டென்மார்க்

 

பின்குறிப்பு: வீரவணக்க நிகழ்வு:

நாட்டுப்பற்றாளர் மருத்துவர் மூர்த்தி அவர்களுக்கும் ராஜபக்சாவை போற்குற்றவாளி என அறிவிக்கக்கோரி நேற்று தமிழகத்தில் தீக்குளித்து தற்கொடையான நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் இல.மணிக்கும் ஆன வீரவணக்க நிகழ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை கீழ்வரும் முகவரியில் தமிழ்தேசிய நினைவேந்தல் அகவத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் அமைப்புக்களையும் டென்மார்க் தமிழ் மக்களையும் வீரவணக்க நிகழ்வில் கலந்து மலர் மற்றும் சுடர்வணக்கம் செய்யவருமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

இடம்: தமிழர் கலாச்சார கலையக மண்டபம்(Industrivej 15 A, 7200 Grindsted)

காலம்: 10.03.2013 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணி

 

http://tamilcentre.dk/?p=629

 

Dr-murthidk.jpg

Edited by Tamilvoice

நிகழ்வை ஒழுங்குபடுத்தும் டென்மார்க்கில் உள்ள தமிழர் நடுவம் அமைப்பிற்கு நன்றிகள் பல.

 

உணர்வாளர்களை தியாகிகளை மதிப்பதன் மூலம் நாம் மூலம் நாமும் அளவிடப்படுகின்றோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டென்மார்க்கில் நடந்த நாட்டுப்பற்றாளர் மருத்துவர் மூர்த்தி மற்றும் தற்கொடையாளன் இல.மணி அவர்களுக்கான வணக்கநிகழ்வு.

 

கடந்த மாதம் 27ம் நாள் பிரித்தானியாவில் இயற்கை எய்திய நாட்டுப்பற்றாளர் மருத்துவர் நமசியாயம் சத்தியமூர்த்தி அவர்களுக்கும் ராஜபக்சாவை போற்குற்றவாளி என அறிவிக்கக்கோரி தமிழகத்தில் தீக்குளித்து தற்கொடையான நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் இல.மணிக்கும் ஆன வணக்க நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு டென்மார்க்கில் நடைபெற்றது. டென்மார்க் தமிழ்தேசிய நினைவேந்தல் அகவத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இவ்வணக்கநிகழ்வு கிரின்ஸ்ரட் தமிழர் கலாச்சார கலையக மண்டபத்தில் அகவணக்கத்துடன் அரம்பமாகியது.

நிகழ்வில் இம்மாத மாவீரர்களுக்கான ஈகச்சுடரை தமிழர் நடுவம் டென்மார்க்கைச் சேர்ந்த செந்தில் அவர்கள் ஏற்றிவைக்க நாட்டுப்பற்றாளர் மருத்துவர் மூர்த்திக்கான ஈகச்சுடரை கிரின்ஸ்ரட் பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக்கழத்தின் பணியாளராக செயலாற்றிய செல்வக்கதிரமலை அவர்களும் தற்கொடையாளன் இல.மணிக்கான ஈகச்சுடரை கிரின்ஸ்ரட் நகரத்தில் வாழும் ஜெயகுமார் அவர்களும் ஏற்றிவைத்தனர். தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர் மற்றும் சுடர்வணக்கங்களை செலுத்தினர்.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் டென்மார்க்கால் வெளியிடப்பட்ட துயராஞ்சலி மற்றும் தமிழர் நடுவம் டென்மார்க்கால் வெளியிடப்பட்ட வீரவணக்க அறிக்கையுடன் இயற்கை எய்திய வெண்புறா மூர்த்தி என அழைக்கப்பட்ட நமசியாயம் சத்தியமுர்த்தி அவர்களை நாட்டுப்பற்றாளர் என மதிப்பளித்து தமிழீழ விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட அறிக்கையும் நிகழ்வில் வாசிக்கப்பட்டது.

 

RIMG0005-150x150.jpg . RIMG0004-150x150.jpg  RIMG0003-150x150.jpg RIMG0006-150x150.jpg . RIMG0002-150x150.jpg   RIMG0007-150x150.jpg RIMG0001-150x150.jpg

 

 

Edited by Tamilvoice

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.