Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனந்த சங்கரி செவ்வியினை வன்மையாக கண்டிக்கிறார்கள் திருமலை தம

Featured Replies

ஆனந்த சங்கரி செவ்வியினை வன்மையாக கண்டிக்கிறார்கள் திருமலை தமிழ் மக்கள் பேரவையினர்.

லக்பிம சிங்கள நாளிதழுக்கு ஆனந்த சங்கரி அவர்கள் வழங்கிய செவ்வி தமிழில் 28.06.2006 அன்று சுடர் ஒளியில் வெளி வந்தது. அவருடைய செவ்வியினை வன்மையாக கண்டிக்கிறார்கள் திருமலை தமிழ் மக்கள் பேரவையினர்.

அவர் கூறியுள்ள சொல் தமிழ் ஈழ விடுதலை புலிகளை புறம் தள்ளிவிட்டு ஏனைய கட்சியுடன் சேர்ந்து ஓர் தீர்வைத்தருமாறு கேட்கின்றார். இன்று தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களும் ஓர் நெருக்கடியான காலகட்டத்தில் நிற்கிறார்கள். சமாதானமா? யுத்தமா? என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில் இருக்கும் பொழுது இவர் ஓர் பழுத்த அரசியல்வாதியானவர் இப்படி ஓர் கீழ்த்தரமான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார். 1956ம் ஆண்டில் இருந்து மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஐ.தே.கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் தமிழர்களுக்கு என்ன செய்தார்கள் என்று இவரே கேள்வி கேட்கின்றவர் அதனை நன்றாக உணர்ந்தவர் ஏன் இன்னும் அரசியலில் இழுபடுகின்றார். இவர் அரசியலுக்கே அருகதையற்றவர். இன்று வடக்கு கிழக்கு சிறு பிள்ளைகளுக்குகூட தெரியும் இனவாத அரசாங்கம் செய்வது பிழை என்று. ஆனால் இவர் இன்னும் பணத்திற்காகவும் பதவிக்காகவும் தமிழனை காட்டிக் கொடுக்கும் அளவுக்கு கிழட்டு சங்கரியார் துணிந்துவிட்டார். இவர்கள் தமிழர்களுக்காக அன்றிலிருந்து இன்றுவரை என்ன செய்தார்கள். சத்தியாக்கிரகம்இ மறியல் போராட்டம் நடத்தி வந்தார்கள். ஆனால் தந்தை செல்வா அன்றே சொன்னார் இந்த சிங்கள அரசாங்கத்தை ஆயுதம் மூலம்தான் வெல்லலாம் என்று. அதற்கான பொறுப்பை அமிர்தலிங்கம் அவர்களிடம் ஒப்படைத்தார்.

அதன் பின்னர் தான் பல தமிழ் இயக்கங்கள் தோன்றி இன்று எமது தமிழ் மக்களின் விடுதலைக்காக ஒரே நிலைப்பாட்டில் நின்று போராடி வருபவர்கள் தான் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள். அவர்கள் நினைத்திருந்தால் அன்றே இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை எடுத்துக்கொண்டு இந்தியாவின் அரைகுறை தீர்வுடன் தரப்பட்ட மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை எடுத்துக்கொண்டு இராஜபோகமாக வாழ்ந்திருக்கலாம். ஏன் அவர்கள் அப்படி எல்லா இயக்கங்களையும் போன்று செயற்படவில்லை. முடிந்தால் தமிழ் மக்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் விடுதலை பெற்றுக் கொடுப்போம் என்றுதான் இன்று அவர்கள் தமிழ் மக்களின் விடுதலை விழிம்பில் நிற்கின்றார்கள். தங்களைப் போன்று இரட்டை நாக்கு வைத்திருப்பவர்கள் அல்ல எமது தமிழ் ஈழ விடுதலைப் புலிகள். தாங்கள் ஒரு யோக்கியமான தமிழன் என்று புலிகளைப் பார்த்து சொல்கின்றீர் அவர்கள் எந்த ஒரு முடிவிற்கும் வரமாட்டார்கள் அவர்களை புறம்தள்ளி வைத்து விட்டு ஏனையவர்களுடன் கதைத்து இந்தியாவில் தமிழ் நாட்டுக்கு எந்தமாதிரியான அதிகார பரவலாக்கல்கள் கொடுத்துள்ளதோ அதே போல் தரும்படி கூறுகின்றீர்கள். எப்படி தருவார்கள் தங்கள் போன்ற பச்சோந்தி அரசியல்வாதிகள் இருக்கும்வரை தரமாட்டார்கள்.

இன்னும் ஒருவர் இருக்கின்றார் அரசாங்கத்துடன் இருக்கின்றார். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று கொக்கரித்துக்கொண்டு தங்கள் தமிழினத்தையே அழிக்கத் துடிக்கின்றார்கள். என்று திருமலை தமிழ் மக்கள் பேரவையினர் கூறிக்கொள்கின்றனர்.

  • தொடங்கியவர்

ஆகவே தயவு செய்து இனியும் ஒளிந்து ஒளிந்து அரசியல் நடத்தவதை விட்டும் அரசாங்கத்தின் பின்னாலும் ஹெல உறுமயஇ மக்கள் விடுதலை முன்னணியின் பின்னாலும் திரியாமல் அரசியலில் இருந்து ஒதுங்கும்படி கேட்கின்றது.

வருங்காலங்களில் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்தாமலும் விமர்சிக்காமலும் இருப்பது தங்களுக்கு நன்மை தரும்

இது இங்கு நாமத்தில் மதி இருந்தும் மதியற்று அலட்டும் அஃறிணைக்கும் சேர்த்துதான்

ஆனந்தசங்கரி பற்றி செய்திகள் வர தொடங்கி விடது குழந்தைகள் உள்ளவர்கள் கவனம் :P :P

லூசுப்பயல் ஆனந்தசங்கரியைப்பற்றி தமிழ்மக்கள் கதைப்பதைக்கூடத் தவிர்க்கவேண்டும்...

அப்படிவிட்டால் இறுதியில் அவரோட ஆட்டம் முடிவுக்குவரும்...

இல்லாமல் விமர்சிக்கப்போனால் அவருடைய கருத்தை மக்கள் கேட்கிறார்கள் என்ற ஒரு எண்ணம்வரும்...

எனக்கு அவர்மேல் அனுதாபம் தான் மிகுதி..

பாவம் யார்பெற்ற பிள்ளையோ சும்மா கேட்பாரற்று அலட்டியே உயிரைவிடப்போகுது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.