Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கடற்படை அட்டுழியம் தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்.

Featured Replies

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது நேற்று ஒரே
நாளில் மூன்று இடங்களில் இலங்கை கடற்படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.
காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவருக்கு சொந்தமான 2
விசைப்படகுகளில், அதே பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 1ம் தேதி
மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 5 நாட்களாக கடலில் தங்கி மீன்பிடித்து
கொண்டு நேற்று முன்தினம் காரைக்காலுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவு
12.10க்கு நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே
வந்தபோது, இலங்கை கடற்படையினர் 10 பேர் ஒரு படகில் வந்தனர்.அவர்கள்
துப்பாக்கியை காட்டி, படகில் இருக்கும் மீன்கள், மீன்பிடி உபகரணங்கள்
அனைத்தையும் கடலில் போடுமாறு மிரட்டினர். மீனவர்கள் தயங்கியதால், திடீரென
இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக
சுட்டனர். அப்போது மீனவர் செண்பகம் படகை அங்கிருந்து எடுத்துச் செல்ல
முயன்றார். இதைப்பார்த்த கடற்படையினர் அவரை நோக்கி சுட்டனர். இதில்
செண்பகத்தின் முதுகின் இடதுபுறத்தில் குண்டு பாய்ந்தது. அவரது அலறலை
கேட்டபின் இலங்கை கடற்படையினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

ராமேஸ்வரம்
மீனவர்கள்: ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் காலை 504
விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தொழிலுக்குச்
சென்றனர். கச்சத்தீவு கடல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல்
அவர்கள் மீன்பிடித்தனர். அப்போது அப்பகுதியில் பிளாஸ்டிக் படகில் இலங்கை
கடற்படையினர் ரோந்து வந்தனர்.

மீனவர்கள் படகுகளிலிருந்த இறால்
உள்ளிட்ட மீன்களை பறித்து நடுக்கடலில் வீசினர். மேலும் அதே பகுதியில்
மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 3 விசைப்படகுகளின் வலைகளை அறுத்தெறிந்தனர்.

இலங்கை
கடல் பகுதிக்குள் வரக்கூடாது என எச்சரித்து விரட்டியடித்தனர். நள்ளிரவு 11
மணியளவில் மீண்டும் ரோந்து வந்த இலங்கை படையினர் மீனவர்களை விடிய, விடிய
விரட்டியடிக்கும் பணியை தொடர்ந்தனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் போதிய
மீன்பிடியின்றி கரை திரும்பினர். மீன்களை வீசியெறிந்து: புதுக்கோட்டை
மாவட்டம், ஜெகதாபட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து 400க்கும் மேற்பட்ட
விசைப்படகுகளில் 6ம் தேதி காலை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வீரமணி(50),
அவருடைய மகன்கள் பாண்டி (20), கிஷோர் (19) மற்றும் குப்புசாமி(55) ஆகிய 4
மீனவர்கள் சென்ற படகை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.

பின்னர்
எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, மீனவர்கள் பிடித்து வைத்திருந்த
மீன்களை கடலில் வீசியெறிந்தனர். மேலும், படகு இன்ஜினில் சர்க்கரையை கொட்டிய
இலங்கை கடற்படையினர், மிரட்டிவிட்டு சென்றுவிட்டனர். சர்க்கரை கொட்டியதால்
இன்ஜினை இயக்க முடியவில்லை. நடுக்கடலில் படகு நின்றது. கடலில் தவித்த
மீனவர்களை வேறு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பார்த்து,
அவர்களின் படகுடன் இன்ஜின் பழுதான படகை கட்டி இழுத்து கரைக்கு கொண்டு
வந்தனர்.

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13217:fisherman-nevy&catid=36:tamilnadu&Itemid=102

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.