Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெசோ பந்த் நடைபெறும் , டெசோ மாநாடு தோல்வி என்பது பொய் செய்தி - திமுக.

Featured Replies

டெல்லியில் நடந்த டெசோ மாநாடு தோல்வி என்றும் அதனால் பந்த் நடைபெறாது என்றும் செய்திகளை ஊடகங்கள் பரப்புகிறது , ஆனால் எக்காரணம் கொண்டும் பந்த் நடைபெறும் என்று  அறிவாலய அறிக்கை செய்திகள் தகவல் தெரிவிக்கின்றன .


அவர்களின் அறிக்கையின் சாராம்சம் இதோ :

7-3-2013 அன்று புதுதில்லியில் நடைபெற்ற 'டெசோ’ கருத்தரங்கிற்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகச் சில ஊடகங்கள் திட்டமிட்டு எழுதி வருகின்றன. நாம் முன்வைத்த எந்தக் கோரிக்கையிலிருந்தும் பின்வாங்காத வரை நமக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை.

நாம் பல்வேறு கட்சிகளை அக்கருத்தரங்கிற்கு அழைத்திருந்தோம். இந்திய தேசிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் கருத்தரங்கில் பங்கேற்றன. இவர்கள் அனைவரும் சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12ஆம் நாள் நடைபெற்ற 'டெசோ’ மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுதில்லி கருத்தரங்கில் சர்வதேச பொதுமன்னிப்பு அவையின்(AmnestyInternational )

 இந்தியச் சார்பாளர், திரு. அனந்தபத்மநாபன்  கலந்து கொண்டார். கூடுதலாக மனித உரிமை ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் அவர்களும் கலந்து கொண்டு, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உரையாற்றினார். உண்மை இவ்வாறிருக்க, 'டெசோ’ கருத்தரங்கத்திற்குப் பின்னடைவு என்பது  எவ்விதத்தில் பொருந்தும்?

 

எனினும், காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசும் ஒவ்வொரு நாளும் ஈழப் பிரச்சினையில்  வெவ்வேறு மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்து வருவது கவலை தருவதாக உள்ளது.  7-3-2013 அன்று மக்களவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், ஐ.நா. அவையில் வரவிருக்கும் அமெரிக்க தீர்மானம் குறித்து உறுதியாகவும் தெளிவாகவும் யாதொன்றும் கூறவில்லை.  இதனை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, பா.ஜ.க. உள்ளிட்ட பல கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஆனால், அன்று மாலை 'டெசோ’ கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்திய தேசிய காங்கிரசின் பொதுச்செயலாளர் குலாம்நபி ஆசாத், “அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்போம்” என்பதாக உரையாற்றினார்.  ஆனால், 8-3-2013 அன்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைமீது நன்றி தெரிவித்து உரையாற்றிய, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் எந்த உறுதியும் வழங்காமல்,  தமிழ்ஈழத் தலைவர்களோடு சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய அரசின் இப்போக்கினைத் தொடர்ந்து மவுனமாகப் பார்த்துக் கொண்டிருக்க இயலாத நிலை நெருங்கிக் கொண்டுள்ளது. எக்காரணம் கொண்டும் 'டெசோ’ தன் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது என்பதையும் இத்தருணத்தில் வெளிப்படுத்துகின்றோம்.  எனவே, இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தர பொது வேலை நிறுத்தம் வருகிற 12ஆம் நாள் நடைபெற்றே தீரும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

 

அவ்வேலை நிறுத்தத்திற்கு ஒட்டுமொத்தத் தமிழினமும் ஆதரவு தர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

 

இப்படியாக அந்த அறிக்கை உள்ளது .

 

பா.ஜ.க. உள்ளிட்ட பல கட்சிகள் வெளிநடப்பு செய்தன என்று சொல்லும் அறிக்கை , பா ஜ க டெசோ மாநாட்டில் கலந்து கொண்டதா என்பதை சொல்லவில்லை மேலும் பா ஜ வை மட்டும் குறிப்பிட்டும் சொல்லி உள்ளார்கள். எதற்கு ?

 

இடையில் நேற்று தனி ஈழ வாக்கெடுப்பு கோரி உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்கள் தங்களது உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் அறிக்கை விடுத்து இருந்தார் அதன் முழு வடிவம் இங்கே பாருங்கள் :

 

 

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தாய்த் தமிழகமே ஒன்றாகத் திரண்டுள்ளது  என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

 

அந்த வரிசையில் சென்னை லயோலா கல்லுரி மாணவர்கள், கறுப்புச் சட்டை அணிந்து,   8-3-2013 அன்று  காலை  10.30 மணியளவில் கல்லுரி வளாகத்திற்குள்ளேயே  ஒன்று திரண்டு,  கையில் ஈழத்தில் நடைபெற்ற படுகொலைகளைச் சித்தரிக்கும் படங்கள், மற்றும் வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளைக் கையிலே ஏந்தி,    ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

 

அவர்கள் அங்கே பேசும்போது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழக மாணவர்கள் எந்த அளவிற்கு தீவிரம் காட்டினார்களோ,  அதே தீவிரவாத்தை ஈழத் தமிழர் பிரச்சினையிலும் காட்டுவதாக இருக்கிறோம் என்றும், மத்திய அரசு கோரிக்கைக்கு இணங்கி வராவிட்டால்,  அடுத்த கட்டமாக  தமிழகம் முழுவதும் உள்ள எல்லா கல்லுரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

 

லயோலா கல்லுரி மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக, லயோலா கல்லுரி மாணவர்கள் எட்டு பேர்  ஈழத் தமிழர் பிரச்சினையை முன் வைத்து  7-3-2013 காலை 10 மணி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் வந்துள்ளது. ஈழத் தமிழர்களைக் காக்க தாய்த் தமிழகத்திலே உள்ள ஒவ்வொரு இளைஞர்களுடைய உயிரும் முக்கியம் என்பதை உணர்ந்து  சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் என்பதை மாற்றிக் கொண்டு வேறு வகை அறப் போராட்டங்களில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது பிரச்சினைக்கு மேலும் ஆக்கத்தைத் தரும் என்பதால், உண்ணா விரதம் இருக்கும் மாணவர்கள் உடனடியாக அதனை நிறுத்திக் கொள்ள வேண்டு மென்று மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு அவரது அறிக்கையில்  வாசகங்கள் உள்ளது .

"வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளைக் கையிலே ஏந்தி,    ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.  "

அவர்கள் இனபடுகொலைகளை  எதிர்த்து என்று போராடவில்லை அது தவறு , அவர்கள் போராடுவது , அமெரிக்கா தீர்மானம் வெத்து வெட்டு , இந்தியா பொது வாக்கெடுப்பிற்கு என்று தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்பதுவே .

அதை லாகவமாக விட்டு விட்டார் திமுக தலைவர் கருணாநிதி எனபது அவரது அறிக்கையில் இருந்து தெளிவாக தெரிகிறது.

 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13249:teso-bundh-should-be-held&catid=12:politics&Itemid=105

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.