Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூயவளனார் கல்லூரி மாணவர்களை போராட்டம் டெசோவிற்காக முடக்கப்பட்டது! (படங்கள் & வீடியோ )

Featured Replies

சென்னை இலயோலா கல்லூரி மாணவர்களது
போராட்டம் தமிழக காவல்துறையால் அடக்கப்பட்ட நிலையில்  திருச்சியில்   காலை
தூயவளனார் கல்லூரி மாணவர்களால் உண்ணாவிரத போரட்டத்தை   ஆரம்பித்தர்கள் .

பதினொரு
மாணவர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த
நிலையில் அவர்களிற்கு ஆதரவாக நூறிற்கு மேற்பட்ட மாணவர்கள் அடையாள
உணணாவிரதத்தில் பங்கேற்றிருந்தார்கள்.

 மாணவர்களது உண்ணாவிரதப்
போராட்டத்தை கேள்வியுற்ற இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மாநிலத் தலைவர்
த.பாண்டியன் அவர்கள் நேரில் வந்து தமது ஆதரவை தெரிவித்ததுடன் மாணவர்களது
கோரிக்கைகள் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்துச் சென்றார்.

இந்நிலையில்
இன்று இரவு உண்ணாவிரத்தில் இருக்கும் மாணவர்களிற்கு உணர்வூட்டுவதற்காக
சனல்-4 தயாரித்த ஆவணப்படத்தையும் தமிழீழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை
குறித்த காணொளிப்படங்களும் திரையில் போட்டுகாண்பிக்க ஏற்பாடுகள்
செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது கல்லூரி நிர்வாகத்தினரால் மாணவர்கள்
அழைக்கப்பட்டு வலுகட்டாயமாக உண்ணாவிரதத்தை கைவிட
நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

உண்ணாநிலையை முடித்துக்கொள்ளுமாறு திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் கொடுத்த பழரசத்தை மாணவர்கள் ஏற்க மறுத்த காட்சிகள்

 

நாளை டெசோ சார்பில் நடைபெற உள்ள பொதுவேலை நிறுத்தப் போராட்டத்தை
மாணவர்களது போராட்டம் மழுங்கடித்துவிடும் என்ற காரணத்திற்காக தி.மு.க.
தரப்பில் இருந்து கல்லூரி நிர்வாகத்திற்கு கடுமையான அழுத்தங்கள்
கொடுக்கப்பட்டதன் எதிரொலியாக மாணவர்கள் போராட்டத்தை கைவிட
நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

இன்று காலையில் இந்த மாணவர்களது
உண்ணாவிரதப் போராட்டத்தை அந்த கல்லூரி முதல்வரே ஆரம்பித்துவைத்திருந்த
நிலையில் அவரே கைவிடும்படி மாணவர்களை வற்புறுத்தும் நிலைக்கு தி.மு.க.
கடும் நெருக்கடி கொடுத்துள்ளது.



தி.மு.க.வின் திருச்சி மாவட்ட செயலாளரும் முன்னால் போக்குவரத்துத்துறை
அமைச்சருமாக இருந்த நேரு நேரடியாக கல்லூரிக்கு வந்து கல்லூரி முதல்வர்
உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்ததின்  பின்னணியிலேயே வெற்றிபெற வாழ்த்துக்
கூறி ஆரம்பித்து வைத்தவர்களே நிறுத்திவைக்க வேண்டிய சூழ்நிலைக்கு
தள்ளப்பட்டமைக்கு காரணமாகும்.

இருந்தபோதும் கல்லூரி நிர்வாகத்தின்
கருத்துக்களை ஏற்க மறுத்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக
இருந்தபோது மாணவர்களது பெற்றோரை அழைத்து கைது சிறை என்று என்னென்னவோ கூறி
மாணவர்களது பெற்றோரை கலகமடையச் செய்துள்ளார்கள்.

பெற்றோரது
வற்புறுத்தல்களையும் மீறி போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக இருந்த
மாணவர்களை வற்புறுத்தி உண்ணாவிரதத்தை கைவிடவைத்துவிட்டது கல்லூரி
நிர்வாகம்.

நாளை ஒருநாள் இடைவெளிவிட்டு நாளை மறுநாள்முதல் மீண்டும் உண்ணாவிரதம் இருக்க அந்தமாணவர்கள் உறுதியாக உள்ளார்கள்.

vendam.JPG

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13294:thuyavan-college&catid=36:tamilnadu&Itemid=102

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.