Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகமெங்கும் நடைபெற்றுக் கொண்டுள்ள மாணவர் போராட்டங்கள்.[படங்கள்& காணொளி]

Featured Replies

இன்றைக்கு தமிழகமெங்கும் நடைபெற்றுக் கொண்டுள்ள மாணவர் போராட்டங்களின் ஒரு பகுதியை இது!


(-) சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து காலவரையற்ற
உண்ணாப் போராட்டத்தை 10 மாணவர்கள் அடையாறில் நடத்திக் கொண்டுள்ளனர்.



(-) சென்னை செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் மாணவர்கள் தனஞ்செழியன்,
சுதன், கிங்ஸ்லி பால்ராஜ், கோபி, சதீஷ்குமார், ராஜா, மகேஸ்வரகுமார்,
ஜான்சன் உள்பட 18 பேர் நேற்று மதியம் 1 மணி முதல் தொடர்ந்து காலவரையற்ற
உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி முன்பு
அமைக்கப்பட்டுள்­ள சாமியான பந்தலில் அனைவரும் அமர்ந்து போராட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றனர். இன்று அவர்களது போராட்டம் 2-வது நாளாக நீடிக்கிறது.
பூந்தமல்லி - செங்கல்பட்டு சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும் என்ற
கோரிக்கையையும் அவர்கள் இணைத்துப் போராடி வருகின்றனர்.
{youtube} xVU0FVFRpI8{youtube}

(-) நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை­ சேர்ந்த உளவியல்,
தொடர்பியல், பொருளாதாரம், வரலாறு ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர்கள்
நிர்மல்ராஜன், ராமன், முகமதுகான், சிவா, வள்ளிகண்ணு, பிரசாத், பிரபாகரன்,
செந்தமிழ்ராஜ், என்ற மதன்ராஜ், நவீன், முத்துக்குமார்,­ மாரியப்பன் ஆகிய 12
மாணவர்கள், பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணா நிலை அறப்போராட்டத்தி­ல்
இரண்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். 

(-) நெல்லையில் இந்திய அரசின் கடவுச்சீட்டு(பா­ஸ்போர்ட்) அலுவலகம் இன்று மாணவர்களால் முற்றுகையிடப்பட­்டது.


(-) சேலம் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.­ இன்று மதியத்துக்கு மேல் உண்ணாப் போராட்டத்திலும்­
ஈடுபடவுள்ளதாக அறிய முடிகின்றது. அங்கு விடுமுறை விடப்பட்டுவிட்ட­தாக
செய்திகள் வந்துள்ளன.

(-) புதுக்கோட்டை மன்னர் அரசுக் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

(-) கடலூரில் 14 மாணவர்கள் சாகும்வரை உண்ணாப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

(-) இராமநாதபுரம் சேதுபதி கலைக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் இரண்டாம் நாளாக காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

(-) கோவையில், பாரதியார் பல்கலைகழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில­் ஈடுபட்டுள்ளனர்.

(-) கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் கோவை மதிமுக அலுவலகத்தில் சாகும்வரையிலான உண்ணாப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

(-) அதிராம்பட்டினத்­தில் காதர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில­் ஈடுபட்டு வருகின்றனர். 

(-) புதுச்சேரியில்,­ டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


(-) திருப்பத்தூரில்­ சேக்ரட் ஹார்ட் கல்லூரி மாணவாகளை சாலை மறியலில்
ஈடுபட்டுள்ளனர்.­ காவல்துறையினர் குவிக்கப்பட்டு,­ துணை ஆட்சியரும்
அங்குள்ள நிலையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட­ுள்ளது.

(-)
விழுப்புரம் மாவட்டம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியை சேர்ந்த இரண்டு
மாணவிகள் ( ஜெயந்தி ,சுப்புலட்சுமி   )தமிழ் ஈழம் வேண்டி சாகும் வரை
உண்ணாவிரத்தை தொடங்கி உள்ளார்கள் கல்லூரி நிர்வாகம் அவர்களை மிரட்டி பணிய
வைக்க பார்க்கிறது.

(-)
சிதம்பரம்
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க பெரும்
எண்ணிக்கையில் காவல்துறை - அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஊடகங்கள் யாருமற்ற நிலையில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பியவாறு தொடர்ந்து அமர்ந்துள்ளனர்.


இனப்படுகொலை
என சொல்லாமல் மனித உரிமை மீறல் என்று கூறியும், ஒன்றுபட்ட இலங்கைக்குள
தமிழர்களை திரும்ப வாழக்கோரியும் உள்ள, மோசடியான அமெரிக்கத் தீர்மானம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்ககழக மாணவர்களால் தீயிட்டுக்
கொளுத்தப்பட்டது­ .

தமிழீழத்துக்கான­ பொது கருத்து வாக்கெடுப்பு,
இனப்படுகொலைக்கான தற்சார்பு பன்னாட்டு விசாரணை மன்றம் ஆகியக் கோரிக்கைகளை
வலியுறுத்தி தமிழகமெங்கும் நடைபெறும் மாணவர் போராட்டங்கள்.
2day_manavarkal.JPG

 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13300:2day-news&catid=36:tamilnadu&Itemid=102

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.