Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கானல் நீராகும் ஜனநாயகம்

Featured Replies

சிறிலங்கா அரசாங்கம் கால காலமாக இலங்கை ஜனநாயக நாடு இங்கு வாழும் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் எனக் கூறி வந்தாலும், உண்மையாக நாட்டில் ஜனநாயகம் இல்லை என்று தான் அண்மைக் காலங்களாக இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஜனநாயக நாடு எனில் அந்நாட்டில் வாழும் மக்கள் அங்கு சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்கவும், சுதந்திரமான முறையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை மேற்கொள்ளவும் மற்றும் ஒன்று கூடுவதற்கான சுந்தந்திரம் வழங்கப்படும்.

ஆனால் சிறிலங்காவில் அப்படி ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழ் மக்களுக்கு அவ்வாறான ஜனநாயக சுதந்திரத்தை வழங்க இந்த அரசு தயாராக இல்லை.

காணமால் போனவர்களை கண்டுபிடித்து தருமாரு கோரி  கொழும்பில் கனவயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தத் திட்டமிட்டிருந்தது. எனினும் அப் போராட்டத்திற்கு வடக்கு மாகாண மக்கள் செல்ல ஆட்சியிலுள்ள அரசாங்கம் தடைவிதிப்பது போன்று ஒரு செயலைச் செய்துள்ளது.

நேற்றைய தினம் வடக்கு - கிழக்கு பகுதிகளில் கைது செய்யப்பட்டுக் காணாமல் போன உறவுகளை மீட்டுத் தரக் கோரி கொழும்பில் நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக, வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதுகாப்பு என்ற போர்வையில் சிறீலங்கா பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

தடுத்து நிறுத்தியதற்கு சிங்களப் பகுதிகளில் இந்த பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து செல்ல அனுமதிக்க முடியாது என சிறிலங்கா பொலிசார் ஒரு நொண்டிச் சாட்டை முன்வைத்தனர்.

அவ்வாறு தாக்குதல் நடாத்தப்படும் என பொலிசாருக்கு தகவல் கிடைத்தது என்றால் ஏன் அவர்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கூடாது? "பொலிஸ் உங்கள் நண்பன்" என்று பதாதைகளை அங்கு இங்கும் தொங்க விடுவதால் எந்த விதமான பிரியோசனமும் இல்லை.

அவ்வாறு மக்கள் பிரயாணம் செய்யும் பேருந்துகள் மீது தாக்குதல் நாடத்தப்படும் என்றால் ஏன் அவர்களை பொலிசார் கைது செய்ய முடியாது? ஏன் அந்த மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கூடாது என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் இன்னொரு விடயம் நினைவுக்கு வருகின்றது. பூர்வீகமாக வாழ்ந்து வந்த நிலங்களை தமது நிலங்களை விடுவிக்க வேண்டும் என கோரி ஜனநாயக வழியில் தெல்லிப்பளையில் போராட்டம் நாடாத்தப்பட்டது.

அதனைக் குழப்பும் வகையில் மர்ம நபர்கள் என்ற போர்வையில் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை மக்கள் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைந்தனர். ஆனால் அவ்வாறு யாரும் கைது செய்யப்படவில்லை என சிறீலங்கா பொலீஸ் பேச்சாளரே மாபெரும் புழுகை கூறியுள்ளார்.

ஆனால் இன்று போராட்டத்தை குழப்ப வந்தவர்களை பொதுமக்கள் பிடித்து தந்தது பொலிசாரிடம் ஒப்படைத்தது உண்மையே என யாழ்ப்பாண பொலிசார் ஒப்புக் கொண்டுள்ளனர் இப்படியான ஒரு சூழ்நிலையில் சிறிலங்கா பொலிசார் மக்கள் பிரயாணம் செய்யும் பேருந்துகளுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என நினைப்பது மாபெரும் தவறு.

இங்குதான் ஒரு விடயம் கவனிக்கப்பட வேண்டும். தமிழ் மக்களால் ஆர்ப்பாட்டம் நடத்தபடும் போதுதான் கழிவு ஓயில்களும், விலங்கு கழிவுகளும் வீசப்படும். சில சந்தர்ப்பங்களில் மர்ப நபர்கள் என்ற போர்வையில் போராட்டங்களையும் குழப்பப்படும்.

இந்த நாட்டின் வாழும் பெரும்பான்மை சிங்கள உறவுகளும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. ஆனால் அவர்கள் போராட்டங்கள் நடாத்தும் போது இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதில்லை.

அது ஒருபுறமிருக்க காணாமல் போனவர்களை தேடிக் கண்டுபிடித்து தருமாறு கோரியே இவர்கள் போராட்டம் நடத்த சென்றார்கள். இவர்கள் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தி கவிழ்ப்பதற்காகவோ அல்லது அரசியல் புரட்சி ஒன்று ஏற்படுவதற்காகவோ இவர்கள் போராட்டம் நடத்தவில்லை.

தான் கட்டிய கணவன், தன் பிள்ளை, தனது மனைவி போன்ற உறவுகளை மீட்டுத்தருமாறு கோரியே இவர்கள் போராட்டம் நடத்த முனைந்தனர் இது தவறா?

நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என மார்தட்டிக் கொண்டு தமிழ் மக்களின் உண்மையான விடுதலைப் போராட்டத்தை சர்வதேச நயவஞ்சக நாடுகளுடன் இணைந்து வெற்றி பெற்றுவிட்டு நாட்டில் சாந்தியும், சமாதானமும்  நிலவுகின்றது என்று கூறுகின்றனர்.

ஆனால் உண்மையில் நாட்டில் இவ்வாறான சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக தமிழ் மக்கள் இதுவரை நினைத்ததே இல்லை என்று தான் கூற வேண்டும்.

யுத்தத்தை மட்டும் தனது ஒரே ஒரு நோக்காக கொண்டு செயற்பட்ட அரசாங்கம், யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை மடித்தும் பல்லாயிரக்கணக்கான உறவுகளை அங்கவீனர்களாக்கியும், ஆயிரக்கணக்கான உறவுகளை காணமல் போக வைத்தும் உள்ளது.

இவ்வாறு காணமல் போனவர்களை மீட்டுத் தரக் கோருவது எந்த விதத்திலும் தவறாகாது. ஆனால் இலங்கை அரசு இதனை தவறாக நினைக்கின்றது. வார்த்தைகளில் மட்டும் தேசிய நல்லிணக்கம் என்று பேசிக் கொண்டிருப்பதால் மட்டும் நல்லிணக்கம் ஏற்படாது.

மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்க பழகிக் கொள்ள வேண்டும். தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரும் உறவுகளின் மகஜர் ஒன்றை வாங்குவதற்கு  கூட பெரும்பான்மை இன அரச அதிகாரி மறுத்துள்ளார் என்றால் காணாமல் போன உறவுகள் எவ்வாறு திரும்பக் கிடைப்பார்கள்?

எங்கள் பிள்ளைகள் உயிருடன் உள்ளார்களா? நாங்கள் இறப்பதற்கு முன்னர் தெரியப்படுத்துங்கள் என நடுவீதியில் அமர்ந்திருந்து கத்தும் அந்த தாயின் அவலக் குரல் ஏன் மனித உரிமைகள் என்று கூச்சலிடும் சர்வதேச நாடுகளுக்கு கேட்கவில்லை?

இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் நாங்கள் தவறு இழைத்து விட்டதாக கூறும் உலகம், ஏன் தமிழர்களுக்கு நீதியான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க  முன்வரவில்லை. காலத்திற்கு காலம் அறிக்கைகளையும் கண்டனங்களையும் விடுவதால் மட்டும் தமிழ் மக்களுடைய பிரச்சனை தீர்ந்து விடாது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் நிலையில் இனியாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்கை சர்வதேசம் வழி அமைத்துக் கொடுக்குமா என்பதே தமிழ் மக்களின் தற்போதைய கேள்வியாகவுள்ளது?

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=8964447014827328

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.