Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தங்கள் காதலை வளர்க்க சென்னையை விரும்பும் ஐஸ்- அபிஷேக்

Featured Replies

தங்கள் காதலை வளர்க்க சென்னையை விரும்பும்

ஐஸ்வர்யாராய்-அபிஷேக்பச்சான் ஜோடி!

சென்னையில்., ஒரே திரையரங்கில் அடுத்தடுத்து இரண்டு படம் பார்த்து ரசித்துள்ளது!!

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராயும், இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மகனும் இந்தி நடிகருமான அபிஷேக்பச்சனும் ஒருவரையருவர் தீவிரமாக காதலித்து வருகின்றனர். மும்பை நகரில் ஏதாவது ஒரு விழாவில் ஐஸ்வர்யாராய் கலந்து கொ£ள்கிறார் என்றால் அங்கே அபிஷேக்பச்சனும் தவறாமல் ஆஜராகி விடுவார்.

abhishekaiswarya3jm.jpg

"ஐஸ்-அபிஷேக் ஜோடி, நாகரீக ரசிகர்கள்(!) நிரம்பிய சென்னையை இடையூறு இல்லாமல் தங்கள் காதலை வளர்க்கவே தேர்ந்தெடுத்துள்ளதாக மும்பை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..."

இதே போன்று அமிதாப் வீட்டு விசேஷங்களிலும் ஐஸ்வர்யாராய் தவறாமல் கலந்து கொள்வார். அண்மையில் கூட மும்பையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலுக்கு இருவரும் ஜோடியாக சென்று கலக்கியது பரபரப்பு செய்தியானது.

aish041gs.jpgabhishekbachchan8hf.jpg

இடையில் ஐஸ்வர்யாராய் ஜாதகத்தில் தோஷம் உள்ளது., அதனால் அபிஷேக்-ஐஸ்வர்யா திருமணம் நடக்காது என்றெல்லாம் செய்திகள் பரவியது. ஆனால் ஐஸ்வர்யாராயை கைப்பிடிப்பதில் அபிஷேக் இம்மியளவும் 'ஷேக்' ஆகி 'ஷாக்' கொடுக்கவில்லை. ஆதலால் ஐஸ்வர்யாவிற்கு தோஷ நிவர்த்தி செய்து இரண்டு பேருக்கும் விரைவில் திருமணம் ந¬பெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஐஸ்வர்யாராயும்., அபிஷேக்பச்சனும் அண்மையில் சென்னைக்கு வந்து; ஒரே திரையரங்கில் அடுத்தடுத்து இரண்டு இங்கிலீஷ் படங்களைப் பார்த்து சென்றுள்ளது தற்பொழுது தெரிய வந்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு;-

கடந்த சில நாட்களுக்கு முன் துபாய் நகரில் சர்வதேச திரைப்பட விழா ஒன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட ஐஸ¨ம், அபிஷேக்கும் விழா முடிந்ததும், அங்கிருந்து கிளம்பி நேராக மும்பைக்கு செல்லாமல்; சென்னைக்கு பறந்து வந்து விட்டனர்.

கடந்த ஜூன் 19-ந்தேதி சென்னைக்கு பறந்து வந்த ஐஸ்-அபிஷேக் ஜோடி., முதலில் ஒரு பிரபல மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்த்து அவர்களுடன் சிறிதுநேரம் தங்கி அக்குழந்தை நோயாளிகளை உற்சாகப்படுத்தினர். அதன் பிறகு அன்று இரவே சென்னை, ராயப்பேட்டை பகுதியில் உள்ள சத்யம் காம்ப்ளக்சுக்கு திடீர் விஜயம் செய்துள்ளனர். அப்பொழுது இரவு 7.15மணி அந்த காம்ப்ளக்ஸில் 'எம்.ஐ.3' எனும் ஆங்கிலப் படம் ஓடிக் கொண்டிருந்திருக்கிறது.

ஐஸ்-அபிஷேக் ஜோடி அங்கு படம் பார்க்க வருவது பற்றி எந்த முன் அறிவிப்பும் இல்லை என்பதால்., டிக்கெட்டும் முன்பதிவு செய்யப்படவில்லை.அப்போது தியேட்டரின் அனைத்து இருக்கைகளும் 'ஃபுல்' ஆகி இருந்ததால்., மத்தியப் பகுதியில் உள்ள 'ஹெச்' வரிசையில்தான் இடம் கிடைத்திருக்கிறது.

எனினும் இருவரும் எந்த பந்தாவும் இல்லாமல் அங்கிருந்த இருக்கைகளில் அடுத்தடுத்து அமர்ந்து படத்தைப் பார்த்து ரசித்திருக்கின்றனர். மேலும் கிடைத்த இருக்கைகளில் அவர்களுடன் வந்த ஆறு மெய்காப்பாளர்களும் அமர்ந்து படம் பார்க்காமல் இவர்களை பாதுகாத்துக் கொண்டிருந்தனராம்.

abhishekbachchan017vn.jpg

உலக அழகி தனது காதலருடன் வந்திருக்கும் தகவல் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. ஆனாலும், இந்த ஜோடிக்கு யாரும் இடையூறு கொடுக்கவில்லை. இதனால் இருவரும் அப்படத்தை முழுமையாக ரசித்துப் பார்த்துள்ளனர்.

அந்தப்படம் முடிவடைந்ததும் கூட்டத்தோடு கூட்டமாக வெளியே வந்த அந்த ஜோடி அதன் பின்னர் அந்த காம்ப்ளக்ஸில் இருந்த மற்றொரு திரையரங்கில் புகுந்துள்ளனர். அங்கு இரவு 10.30 மணிக் காட்சியில் 'எக்ஸ்-மென் 3' எனும் மற்றொரு ஆங்கிலப்படம் ஓடிக் கொண்டிருந்தது. இவர்களுக்கு அங்கேயும் 'ஹெச்' வரிசையில் தான் இருக்கை கிடைத்தது.

எனினும் அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல், முழு படத்தையும் கண்டு களித்துள்ளனர். இந்தப்படமும் முடிந்து வெளியே வந்த போது ஒரு சில ரசிகர்கள் மட்டும் இருவரையும் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராஃப் கேட்க அதற்கு இருவரும் சிரித்தபடியே ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்துவிட்டு கிளம்பியுள்ளனர். அங்கிருந்து கிளம்பியவர்கள் நேராக ஒரு 'நைட் கிளப்'புக்கு சென்றுள்ளனர். அங்கு 'கஜ்ராரே' உள்பட பல இந்திப்படங்களின் 'ஹிட்' பாடல்களுக்கு விடிய விடிய ஆட்டம் போட்டுள்ளனர். இந்த நேரங்கெட்ட 'கெட்ட' ஆட்டம் அதிகாலையில்தான் முடிவுக்கு வந்ததாம்.

அதிரடி ஆட்டத்திற்குப்பின் அருகில் இருந்த ரோட்டோரக்கடையில் 'சாண்ட்விச்' சாப்பிட்டுவிட்டு கிளம்பியுள்ளது ஐஸ்-அபிஷேக் ஜோடி!

மும்பை மற்றும் பிற நகரங்களில் ரசிகர்களின் அத்துமீறும் அநாகரீக அன்புத்தொல்லையில் தங்கள்காதலை தனிமையில் வளர்க்க முடியாது. என கருதும் ஐஸ்-அபிஷேக் ஜோடி; நாகரீக ரசிகர்கள்(!) நிரம்பிய சென்னையை இடையூறு இல்லாமல் தங்கள் காதலை வளர்க்கவே தேர்ந்தெடுத்துள்ளதாக மும்பை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடி ஆத்தீ.?!

-மீராமணாளன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.