Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பௌத்த இளைஞர் யுவதிகளை பல வழிகளில் மத மாற்றம் செய்து வருகின்றனர்

Featured Replies

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பௌத்த இளைஞர் யுவதிகளை பல வழிகளில் மத மாற்றம் செய்து வருகின்றனர்.

 

அதாவது முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களில் பௌத்த இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை கொடுத்து அவர்களை பல வழிகளில் மத மாற்றம் செய்கின்றனர். இது தொடர்பாக எமக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளது.

 

இன்னும் 50 வருடங்களில் இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்ற மேற்கொள்ளப்படும் விசேட திட்டங்களே இவை. இவற்றை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.

 

இன்று மாலை கண்டி நகரில் மத்திய சந்தை முன் இடம்பெற்ற பொதுபல சேனாவின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

 

இங்கு மேலும் உரையாற்றிய கிரம விமலஜோதி தேரர்,
 

முப்பது வருட கால யுத்ததம் ஒன்றை அனுபவித்த நாங்கள் மற்றுமொரு இனவாத அல்லது மத வாத யுத்தம் எற்பட இடமளிக்க மாற்றோம். நாங்கள் 400 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டு சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தோம். அக் காலத்தில் நாங்கள் எதிர்நோக்கிய சவால்கள் எண்ணிலடங்காதவை. சிங்கள பௌத்த மக்கள் அன்று முதல் உயிர் தியாகம் செய்தே இன்நாட்டை பாதுகாத்தனர்.

 

தற்போது மீண்டும் எம் நாட்டுக்கு பல்வேறு வடிவில் சவால்களும் ஆக்கிரமிப்புக்களும் வந்த வண்ணம் உள்ளன. இலங்கையில் 400 க்கும் மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பௌத்த இளைஞர் யுவதிகளையும் மதமாற்றம் செய்யும் நடடிவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டை இஸ்லாமிய நாடாக்கும் விஷேட திட்டத்தில் இதுவும் ஒன்று.

 

அந்நதவகையில் நாங்கள் இந்த அபாயகரமான நிலையை உணர்ந்து கடந்த மே மாதம் முதல் நடாத்திய போராட்டதின் பாரிய வெற்றிதான் ஹலால் வெற்றியாகும். எங்களில் சிலர் எமக்கு குற்றம் கூறுகின்றனர்.

 

நாங்கள் இன யுத்தம் ஒன்றையும் மத யுத்தம் ஒன்றையும் திணிக்க முற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். இருந்த போதும் நாங்கள் 30 வருடங்களாக நாங்கள் அனுபவித்த யுத்தம் காரணமாக நாட்டின் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டனர். எனவே இன்னுமொரு இன மத மோதலை ஏற்படுத்த நாங்கள் இடமளிக்க மாட்டோம் என கூற விரும்புகின்றோம் என்றார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3526

  • தொடங்கியவர்

பொது பலசேனா இன்னும் இரண்டு போயாவுக்குள் மரணித்துவிடும் :தம்பர அமில தேரர்

 

பொது பலசேனா என்ற அடிப்படைவாத அமைப்பு இன்னும் இரண்டு போயா தினங்களுக்குள் மரணித்துவிடப்போகிறது. எனவே, எந்தவொரு முஸ்லிமும் கலக்கமடையவோ, கவலைப்படவோ தேவையில்லை. ஏனெனில் அது அரைகுறை பெளத்தர்களைக் கொண்ட அமைப்பாகும். பெளத்த தர்மமானது பிரிவினை வாதத்தையோ, மதவாதத்தையோ போதிக்கவில்லை என்று தேசப்பற்றுள்ள தேசிய மத்திய நிலையத்தின் தலைவரும் ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் தம்பர அமில தேரர் தெரிவித்தார்.


தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலியின் ஏற்பாட்டில் ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற வேற்றுமையில் ஒற்றுமை காணு வோம் எனும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகை யிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


தம்பர அமில தேரர் இங்கு மேலும் கூறுகையில்,
 

நாம் அனைவரும் இலங்கையர் என்பதை முதலில் உணர வேண்டும். பள்ளிவாசல்கள் அதிகரித்துச் செல்வதாகவும் அதனால் பெளத்தத்துக்கு ஆபத்து என்றும் சிங்கள பெளத்தர்களை ஏமாற்றி அச்சுறுத்தும் செயற்பாடுகளில் சிலர் இறங்கியுள்ளனர்.

 

உண்மையான பெளத்தர்களிடம் பிரிவினைவாதமோ, மதவாதமோ கிடையாது. நான் உண்மையான பெளத்தன் என்பதனை இங்கு கூறிக்கொள்கிறேன். அரைகுறை பெளத்தர்களாலேயே இந்த பிரிவினை வாதங்கள் தூண்டிவிடப்படுகின்றன.


சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வரலாற்று ரீதியிலான உறவு பேணப்பட்டு வருகின்றது. இந்த உறவினை சிதறடிப்பதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை.


ஹலால் ஹராம் என்பவற்றை பிரித்துப்பார்க்கும் போது தமிழர்களையும் முஸ்லிம்களையும் தாக்குவதும் அரச காணிகள் வெளியாருக்கு விற்கப்படுவதும் ஜனநாயகம் மறுக்கப்படுவதுமே ஹராமாகவும் இவற்றுக்கு மாறானவை ஹலாலாகவும் பார்க்கப்பட வேண்டும்.


30 வருடகால யுத்தத்தினால் வலிமாத்திரமே எஞ்சியிருக்கின்றது. எனவே, அது குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. 2005ஆ ம் ஆண்டு காலப்பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஒரு பகுதியினர் கிளர்ந்தனர். அவர்கள் வேறுயாருமல்ல. ஜாதிக ஹெல உறுமய என்ற அமைப்பினரே அன்று இந்நாட்டில் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு எதிராகவும் செயற்பட்டு சிங்களவர்களின் வாக்குகளைப் பெற் றுக்கொண்டது.


அன்று நாம் அந்த செயற்பாட்டுக்கு எதிராக நின்றோம். அதே  போன்றுதான் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்து நிற்கின்ற பொது பல சேனாவுக்கு எதிராக குரல் கொடுக்கின்றோம்.


இன்னும் இரண்டு வாரம் அல்லது இரண்டு போயா தினங்களுக்குள் பொது பல சேனா என்ற அமைப்பு நிச்சயமாக அஸ்தமத்து மரணித்து விடத்தான் போகிறது. அதில் சந்தேகமே இல்லை.


இந்நாட்டில் பெளத்தத்துக்கு எதிராக பல்வேறு சக்திகள் முளைத்தன. ஆனால், எதுவும் செய்துவிடவில்லை. அதே போன்று தான் எதிர்காலத்திலும் பெளத்தத்தை எதுவும் செய்துவிட முடியாது. எனவே, பெளத்தத்துக்கு ஆபத்து என்ற மாயையான கருத்தியல்களில் இருந்து விடுபடுமாறும் சந்தேகங்களைக் கலையுமாறும் சிங்கள மக்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன்.


எனவே , இந்நாட்டின் இன ஒற்றுமையை பேணுவதற்கும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதற்கும் அனைத்து மதத் தலைமைகளும், சிவில் அமைப்புகளும், பேராசிரியர்களும், அரசியல் தலைமைகளும் ஓரணியில் திரளவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.


அதேபோன்று இன, மத அடிப்படையில் இல்லாது தேசியத்தைக் கருத்திற்கொண்டே கட்சிகள் அமைக்கப்படுதல் மிகமிக அவசியமாகும். இது எதிர்கால இலங்கைக்கும் சிறப்பாக அமையும் அந்த வகையில் அசாத் சாலியின் இந்த முன்னணி அமைத்திருப்பதையிட்டு அவரது எதிர்காலப்பணிகளுக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


இங்கு இறுதியாக உரையாற்றிய ஜனநா யக மக்கள் முன்னணியின் உப-தலைவரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான கலாநிதி குமர குருபரன் கூறுகையில்,


திறமைமிக்கவரான அசாத் சாலியின் முயற்சிகள் வரவேற்கக் கூடியவையாக அமைந்திருக்கின்றன. சிறந்ததோர் பயணத்தினை ஆரம்பித்துள்ள அசாத் சாலியின் பணிகள் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3528

அதாவது முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களில் பௌத்த இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை கொடுத்து அவர்களை பல வழிகளில் மத மாற்றம் செய்கின்றனர். இது தொடர்பாக எமக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளது

அந்த கடைகளை சிங்கள பௌத்தர்கள் பொறுபேற்க வேண்டும்? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.