Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"டிராமா" கருணாநிதியுடன் 3 மத்திய மந்திரிகள்.... இரண்டரை மணிநேரத்திற்கு பின் "புஸ்ஸ்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"டிராமா" கருணாநிதியுடன் 3 மத்திய மந்திரிகள்.... இரண்டரை மணிநேரத்திற்கு பின் "புஸ்ஸ்"

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது சென்னை சி.ஐ.டி., காலனி இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, சிதம்பரம், குலாம்நபிஆசாத் ஆகிய மூவரும் நேற்று மாலை இரண்டரை மணி நேரம் சந்தித்து பேசினர். நீண்ட நேரம் பேசியும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இலங்கை விவகாரத்தில், பேச்சு வார்த்தை என்ற பெயரில் நடந்த இந்த, "டிராமா' இலங்கை தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் நடந்த படுகொலையை, இனப்படுகொலையாக அறிவிக்க வேண்டும். போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை தேவை என்ற, இரு கோரிக்கைகளை, பார்லிமென்டில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என, கருணாநிதி நேற்று திடீரென புதுக் கோரிக்கையையும் விடுத்தார். "இந்த கோரிக்கையை பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் தெரிவித்து முடிவு எடுக்கப்படும்' என, குலாம்நபிஆசாத் கூறி விட்டு, டில்லிக்கு பறந்ததால், இந்த சந்திப்பு, "புஸ்ஸ்' ஆகிவிட்டது. இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை போர்க்குற்றம், இனப்படுகொலை என, அறிவிக்க வேண்டும் என்ற திருத்தத்துடன், ஐ.நா. மனித உரிமை அமைப்பில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகிய இருவருக்கும், தனித்தனியாக தி.மு.க., தலைவர் நேற்று முன்தினம் கடிதம் எழுதினார்.

இலங்கைக்கு எதிரான, அமெரிக்க தீர்மானத்தில் மத்திய அரசு திருத்தம் செய்யாவிட்டால், ஐ.மு., கூட்டணியில் தி.மு.க., நீடிப்பது சந்தேகம் என, கருணாநிதி மிரட்டல் விடுத்தார். மேலும், தன்னை சமரசம் செய்வதற்கு, டில்லி மேலிடம் சாபில் தூதர் யாரும் வரவில்லை என்பதால், கருணாநிதி கடும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, சோனியா சார்பாக, கருணாநிதியை சமரசம் செய்து, ஐ.மு., கூட்டணியில் தி.மு.க., வை நீடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக, நேற்று மாலை 5.30 மணிக்கு சென்னை சி.ஐ.டி., காலனியில் உள்ள கருணாநிதியின் வீட்டிற்கு, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், ஏ.கே. அந்தோணி, குலாம்நபிஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் தலைவர் தங்கபாலு ஆகியோர் வந்தனர். கருணாநிதியுடன், மத்திய அமைச்சர்கள் மூவரும், இரண்டரை மணி நேரம் சந்தித்து பேசினர்.

அவர்களின் சந்திப்பு முடிந்த பின் வெளியே வந்த

குலாம்நபிஆசாத், நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர், சோனியாவுக்கு கருணாநிதி, இரு கடிதங்களை எழுதினார். அந்தக் கடிதங்களில் உள்ள விவரங்கள் குறித்து கருணாநிதியிடம் விவாதித்தோம். தீர்மானங்களில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கருணாநிதி முன் வைத்தார். அவரது கோரிக்கையை பிரதமர், சோனியாவிடம் எடுத்துச்சொல்லுவோம். அவர்கள் இது குறித்த முடிவை அறிவிப்பர், என்றார்.

கருணாநிதி கூறியதாவது: இலங்கையில் நடந்த படுகொலையை, இனப்படுகொலையாக பிரகடனப்படுத்த வேண்டும். இலங்கையின் போர்க் குற்றங்கள் பற்றி, சுதந்திரமான, பன்னாட்டு விசாரணை தேவை ஆகிய, இரு கோரிக்கைகளை பார்லிமென்டில் உடனடியாக தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என மத்திய அமைச்சர்களிடம் தெரிவித்தோம். அதற்கு அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். அவர்களுடைய ஒப்புதல் நிறைவேற்றினால் தான் காங்கிரசுக்கும், தி.மு.க., வுக்கும் உள்ள இறுக்கம் குறையும், என்றார்.

மத்திய அரசு முடிவு எப்போது? "இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் இறுதி வரைவு தீர்மானத்தை படித்த பின், இந்த விஷயத்தில், மத்திய அரசு, தன் முடிவை அறிவிக்கும்' என, வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறினார். அவர் தெரிவித்ததாவது: ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில், இந்தியா என்ன நிலை எடுக்கும் என்பதை, தற்போது தெரிவிக்க முடியாது. தீர்மானத்தின் நகல், இன்று கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆலோசிப்பதற்காக, ஐ.நா.,வின் இந்திய பிரதிநிதி, திலீப் சின்காவுக்கு, டில்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர், இன்று வருவார் என,

எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து, வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளிடம், அவர் விளக்குவார். இதன்பின், அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து, முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

அரசுக்கு ஆபத்து இல்லையாம்: ""அமைச்சரவையிலிருந்து விலகுவோம் என்ற, தி.மு.க.,வின் அச்சுறுத்தலால், மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அரசு நிலையாக உள்ளது. ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக முடிக்கும்,'' என, காங்., தகவல் தொடர்பாளர், ரஷீத் ஆல்வி நேற்று கூறினார். டில்லியில் அவர் மேலும் கூறுகையில், ""தி.மு.க.,வுடன் எந்த கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அது தீர்க்கப்படும் என, நம்புகிறோம். இலங்கைக்கு எதிரான, தீர்மான விவகாரத்தில், தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டே, மத்திய அரசு முடிவெடுக்கும்,'' என்றார். இதற்கிடையில், இலங்கை தமிழர் விவகாரம், தமிழகத்தில் பெரும் பிரச்னையாக உருவெடுத்து உள்ளதால், இலங்கையுடனான, ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான, செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை, வரும், 25ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

Dinamalar

  • கருத்துக்கள உறவுகள்
57157934.jpg

கருணாநிதி ஒரு பழுத்த அரசியல்வாதி தான். ஆனால் இந்த தமிழர் விடயமும் அதில் அவரின் அரசியலும் தோற்று போனது மட்டுமல்ல திமுக என்ற கட்சியின் அழிவிற்கே வித்திட்டுவிட்டன.

 

தமிழக மற்றும் உலகத்தமிழர் அரசியல் வரலாற்றில் இவருக்கு இடமே இல்லாமல் போகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.