Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசா ஊழல் செய்தார் என்றால் பிரதமரும் அதற்கு உடந்தை. கருணாநிதி

Featured Replies

ராசா ஊழல் செய்தார் என்றால் பிரதமரும் அதற்கு உடந்தை. கருணாநிதி பிரிவு: அரசியல்

2G-Spectrum-raja.jpgதி.மு.க. மீது விழுந்த இடி, இப்போது காங்கிரஸ் பக்கம் திரும்பியுள்ளது. 2ஜி சேற்றை பிரதமரின் மீது பூசும் ஆவணங்கள் வெளியானதில் தி.மு.க-வின் பங்கு இருப்பதாக மத்திய அரசு நினைக்கிறது.

 'முதலில் வருவோருக்கே முன்னுரிமை’ என்ற மூன்று வார்த்தைகள்தான் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவுக்கு ஏற்றத்தையும் இறக்கத்தையும் கொடுத்தது. மிகஅரிதான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற பணமூட்டைகளோடு முன்அனுபவம் உள்ள நிறுவனங்கள், முந்தாநாள் முளைத்த நிறுவனங்கள்... என்று நூற்றுக்கும் மேற்பட்ட பணம் கொழிக்கும் நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதியதும்... இந்த தள்ளுமுள்ளுவில் ராசா தில்லுமுல்லு செய்தார் என்பதும்தான் ஒரு லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் கோடி தொடர்புடைய ஊழல் வழக்கின் ஒன்லைன். 

'ராசாவின் இந்த செயல்பாடுகள் எல்லாமே பிரதமரின் அனுமதியோடுதான் நடந்தது. ராசா ஊழல் செய்தார் என்று சொன்னால், பிரதமரும் அதற்கு உடந்தையாக இருந்தார்!’ என்று சொல்லாமல் சொல்லும் விதமாக ராசாவுக்கு வக்காலத்து வாங்கும் சில ஆவணங்கள் இப்போது வெளியாகி உள்ளன. 2ஜி அலைக்கற்றை உரிமங்கள் வழங்கப்படுவதற்கு இரண்டு வாரங்கள் முன், பிரதமர் அலுவலகத்துக்கும் ராசாவின் தொலைத் தொடர்புத் துறைக்கும் இடையே பல தகவல் பரிமாற்றங்கள் நடந்துள்ளன. 2ஜி உரிமங்கள் வழங்கப்பட்டது ஜனவரி 10, 2008. அதற்கு இரண்டு வாரங்கள் முன், அதாவது 2007-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி, 2ஜி உரிமங்கள் தொடர்பாக ராசா பிரதமருக்கு ஆறு பக்கக் கடிதம் எழுதினார். இந்த விவகாரத்தை ஆராய்வதற்காகவே அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் தலைவர் பிரணாப் முகர்ஜி, 'டாப் சீக்ரெட்’ அறிக்கை ஒன்றை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பினார். இந்த இரண்டும் ஒரே நாளில் பிரதமர் அலுவலகத்தை வந்தடைந்தது. பிரதமரின் உத்தரவின் பேரில் அவரது செயலர் புலோக் சாட்டர்ஜி, ஓர் ஒப்பீட்டு அறிக்கையைத் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் 'பழைய விலைக்கே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைக் கொடுக்கலாம். முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் 2ஜி உரிமங்களை ஏலம் விடலாம் என்று ராசா சொல்லி இருக்கிறார். போட்டி அதிகமாக இருக்கும்போது ஏலம் விட்டு யாருக்கெல்லாம் அலைக்கற்றை சேவை செய்யும் உரிமங்களை வழங்கலாம் என்று முடிவுசெய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதை வைத்துத்தான் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்த ஆதாரங்கள் வெளியானதும், பிரதமர் அலுவலகம் உடனே மறுப்பு வெளியிட்டு உள்ளது. ''2ஜி உரிமங்களுக்கான ஒதுக்கீட்டின்போது ராசாவின் செயல்பாடுகளுக்குப் பிரதமர் ஒப்புதல் அளித்தார் என்று சொல்லி இருப்பது சரியல்ல. அந்தக் காலகட்டத்தில், ஏற்கெனவே செயல்பட்டு வந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும், புதிதாக நுழைந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையே பல மோதல்கள் ஏற்பட்டன. அதனால், இந்த விவகாரத்தை டிராய் (தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) உடன் ஆலோசனை நடத்தி, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் விரிவாகப் பரிசீலிக்க வேண்டும் என்றுதான் பிரதமர் கருதினார். அந்த அர்த்தத்தில்தான் அவர் 'விரைவாகப் பரிசீலிக்கவும்’ என்று தனது அலுவலக அதிகாரிகளுக்கு அவர் குறிப்பு எழுதினார்.

'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையில் தப்பில்லை. அது எப்படி நிறைவேற்றப்பட்டது என்பதுதான் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. சட்டத்தை தன் விருப்பப்படி எல்லாம் வளைத்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

இப்போது, தி.மு.க-வும் காங்கிரஸும் பிரிந்து விட்டதால் பிரதமர் மீதான புகார்களைக் கூடுதலாக கருணாநிதி சொல்ல ஆரம்பித்தாலும் ஆச்சர்யம் இல்லை!

 

  • கருத்துக்கள உறவுகள்
ராசா ஊழல் செய்தார் என்றால் பிரதமரும் அதற்கு உடந்தை. கருணாநிதி
 
 
 
## எல்லாம் மன்மோகன் வாயே தொறக்கமாட்டார் எங்கிற துணிவுதான்.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.