Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனவர்களும் அவர்கள் உறவுகளின் துன்பங்களும்

Featured Replies

காணாமற்போனோர் தொடர்பில் 3,000 முறைப்பாடுகள் ஜெனிவாவில் சமர்ப்பிப்பு

 

காணாமற்போனவர்கள் தொடர்பில் எமது அமைப்பிடம் பதிவு செய்யப்பட்ட 5 ஆயிரம் பேர் தொடர்பான முறைப்பாட்டில் 3 ஆயிரம் பேரின் முறைப்பாடுகள் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எஞ்சியோரின் முறைப்பாடுகளையும் அங்கு அனுப்பு வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

 

 

இவ்வாறு காணாமற்போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் செயலாளர் எஸ்.மகேந்திரம் தெரிவித்தார்.


காணாமற்போன 37 பேர் தொடர்பில் நேற்றைய தினம் (உதயனில்) வெளியிடப்பட்ட பெயர்ப்பட்டியலில் உள்ளவர்களின் உறவினர்கள் தன்னுடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

 

வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரின் போதும் அதற்கு முன்னரும் போரின் பின்னரும் ஆயிரக்கணக்கானவர்கள் இலங்கையில் காணாமற் போயுள்ளனர்.


காணாமற்போனவர்களின் உறவினர்களால் காணாமற்போனவரைத் தேடிக் கண்டறியும் குழுவுக்கு முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதுவரை 5 ஆயிரம் பேர் வரையில் காணாமற்போயுள்ளனர் என அவர்களின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

 

இதில் 95 வீதமான முறைப்பாடுகள் தமிழ் மக்களுடையவை. எஞ்சியவை முஸ்லிம் மக்களதும், சிங்களவர்களுடையதும் ஆகும்.


எமது அமைப்பில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 3 ஆயிரம் முறைப்பாடுகள் வரை ஜெனிவாவுக்குச் சமர்ப்பித்துள்ளோம். எஞ்சியோரின் முறைப்பாடுகளையும் அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.

 

மேலும் காணாமற்போனவர்களாகச் சொல்லப்பட்ட 37 பேரை இலங்கை அரசு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தி வருவது தொடர்பில் நேற்று எங்களால் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.


அந்த 37 பேரில் 25 பேரின் உறவினர்கள் வரை எங்களுடன் தொடர்பு கொண்டனர். அவர்களின் உறவுகள் இலங்கை அரசால் எங்கு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்ற விடயத்தை தெரிவித்துள்ளோம்.

 

அத்துடன் நூற்றுக்கணக்கானோர் என்னுடன் தொடர்புகொண்டு காணாமற்போன பதிவு செய்யாத காணாமற்போனவர்களின் உறவினர்கள் பதிவு செய்துகொள்ள விரும்பினால் 0776400478 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் என்றார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=104721920624453444

  • தொடங்கியவர்

தமிழ் அரசியல் கைதிகள் மீதான துஷ்பிரயோகம் அதிகரிப்பு
 
இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் மீதான சித்திரவதை அதிகரித்து வருவதாக பிரிட்டனின் த கார்டியன் பத்திரிகை  தெரிவித்திருக்கிறது. நீண்டகாலமாக துஷ்பிரயோகத்தால் துன்பப்பட்டதைத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்ட சிலர் இறந்து கொண்டிருப்பதாக புதிய விசாரணை மூலம் அறிய வருவதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்புகள் இலங்கையில் இந்த வருடம் பிற்பகுதியில் இடம்பெறவுள்ள சர்ச்சைக்குரிய உச்சி மாநாட்டிலிருந்தும் வாபஸ் பெற வேண்டுமென்ற அழுத்தத்தை பிரிட்டனுக்கு அதிகரிக்கச் செய்யும்.
 
2009 தொடக்கம் அதிகளவான தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். லண்டனைத் தளமாகக் கொண்ட சமாதானத்திற்கும் நீதிக்குமான இலங்கை செயற்பாட்டு   அமைப்பின் புதிய அறிக்கையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கைதிகளை படிமுறையாக துஷ்பிரயோகத்திற்ள்ளாக்குவதன் மூலம் மோதலுக்குப் பின்னரான  நல்லிணக்கம் தொடர்பான உறுதிமொழிகளை அரசாங்கம் மீறிவிட்டதாகவும்  சட்டங்களை கிரமமாக மீறிவருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தக் கைதிகளில் பலர் தமிழ்ப் புலிகளுடன் தொடர்புகளைக் கொண்டிராதவர்களாவர். 26 வருடத்திற்கும் அதிககாலம் நீடித்த யுத்தத்தினால் இரு தரப்பிலிருந்தும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளும் அரச படையினரும் மோதலின் போது அதிகளவு கொடூரங்களை இழைத்ததாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்போது சுற்றுலாப் பயணிகளுக்கான சிறப்பான இடமாக இலங்கை மீட்சி பெற்று வருவதன் ஊடாக நன்மதிப்பை மீளப்பெற்றுவருகிறது. அத்துடன், இந்த வருட  பிற்பகுதியில் பொதுநலவாய உச்சி மாநாட்டை நடத்துவது தொடர்பான இலங்கையின் பங்களிப்பின் ஊடாகவும் நன்மதிப்பை  ஈட்டிவருகிறது. ஆனால், நாட்டின் தலைமைத்துவத்தின் மீது அழுத்தத்தைக்கொடுக்காவிடில் இறுதிச் சமாதானத்தைத் தக்க வைப்பதற்கான முக்கிய வாய்ப்பு இழக்கப்பட்டுவிடுமென செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கின்றனர். நவம்பரில் கொழும்பில் பொதுநலவாய உச்சி மாநாடு இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டை மகா ராணியும் பிரதமர் டேவிட் கமரூனும் பகிஷ்கரிக்க வேண்டுமென்ற அழைப்புகள் பிரிட்டனில் அதிகரித்துள்ளன.

இலங்கையின் மனித உரிமைகள் பதிவுகளில் தளர்வு ஏற்படாவிடின் கொழும்பில் இடம்பெறும் உச்சி மாநாட்டில் சமூகமளிப்பது நிராகரிக்கப்படும் நிலைமை காணப்படுவதாக  பிரிட்டனின் வெளிவிவகார அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது. ஆனால், பிரிட்டன் சமுகமளிப்பது தொடர்பாக கதைப்பதற்கு இன்னமும் காலம் இருக்கின்றது என அலுவலகம் விபரித்துள்ளது. மோதலுக்குப் பின்னரான நல்லிணக்கம், பதிலளிக்கும் கடப்பாடு, மனித உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற விடயங்களில் பரந்துபட்ட கவலைகளை வெளிப்படையாகவும் தனிப்பட்ட ரீதியிலும் நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த விடயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றது என்று வெளிவிவகார அலுவலக பேச்சாளர் கார்டியனுக்குக் கூறியுள்ளார்.
 
http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=3607:2013-03-24-17-15-39&catid=54:local&Itemid=458

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.