Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

LLRC பரிந்துரைகளை அமுலாக்கும் ரணிலின் யோசனை நிராகரிப்பு! - நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு!!

Featured Replies

LLRC பரிந்துரைகளை அமுலாக்கும் ரணிலின் யோசனை நிராகரிப்பு! - நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு!!

                                             ef24b89a-b7f4-4753-b8b6-52a2cacac41b1.jp

                                        

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக

சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி அதனூடாகப் பொறிமுறையொன்றை வகுக்கவேண்டும் என்ற

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் யோசனையை அரசு

நிராகரித்துள்ளதால் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும்

ஹர்த்தால் நடவடிக்கைகளில் ஈடுபடப் பொது எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இந்த ஹர்த்தால் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மக்களை அணிதிரட்டுவதற்காக

எதிர்வரும் 31 ஆம் திகதி கண்டியில் மாபெரும் பொதுக்கூட்டமொன்றை நடத்த பொது

எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ளன என்று அதில் அங்கம் வகிக்கும் நவ

சமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக்

கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பொது எதிர்க்கட்சியில்

அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்பர் என்றும் அவர்

தெரிவித்தார்.

சர்வதேச அழுத்தங்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டுமெனில்,

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளை அரசு உடனடியாக

அமுல்படுத்தவேண்டும். அதற்கு சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி அதனூடாகப்

பொறிமுறையொன்றை வகுத்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து

நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்ற யோசனைத் திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர்

ரணில் விக்கிரமசிங்க அரசிடம் முன்வைத்தார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் சர்வகட்சி

மாநாடு யோசனையைத் தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாதென பொது எதிர்க்கட்சியில்

அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக மக்கள்

முன்னணி போன்றன அதிருப்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், சர்வகட்சி மாநாடு குறித்த தமது உத்தியோகபூர்வ பதிலைக்

கடந்த 22 ஆம் திகதிக்கு முன்னர் அரசு அறிவிக்கவேண்டும் என்று ரணில்

விக்கிரமசிங்க அரசுக்குக் கால அவகாசம் வழங்கியிருந்தார். இருப்பினும்,

எதிர்க்கட்சித் தலைவரின் சர்வகட்சி மாநாடு யோசனையைத் தம்மால் ஏற்கமுடியாது

என பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்

தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ஷ அரசின் நிலைப்பாட்டை அறிவித்திருந்தார்.

இதனையடுத்து சர்வகட்சி மாநாடு குறித்து அரசிடமிருந்து சாதகமான பதில்

கிடைக்காவிட்டால் அரச எதிர்ப்புப் போராட்டங்களில் தொடர்ச்சியாக

ஈடுபடப்போவதாகவும், நாடு தவறுசெய்யவில்லை, அரசுதான் தவறிழைத்தது என்று

சர்வதேசத்திற்கு எடுத்துரைப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில்

விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில், இது விடயம் தொடர்பில் பொது எதிர்க்கட்சிகளின் அடுத்த

நடவடிக்கை என்ன என்பது குறித்து கட்சித் தலைவர்கள் தீர்மானம்

எடுத்துள்ளனரா என வினவியபோது விக்கிரமபாகு கருணாரட்ன கூறியவை வருமாறு:-

'நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகள் 50 சதவீதத்திற்கும்

அதிகமாக நிறைவேற்றப்பட்டுள்ளன என அரசு கூறுகின்ற போதிலும், நாட்டில்

அவ்வாறானதொரு நடவடிக்கை இடம்பெறுகின்றதா என்பது எமக்குத் தெரியவில்லை.

சர்வகட்சி மாநாடு யோசனையை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க

முன்வைத்தது பேச்சு நடத்துவதற்காக அல்ல. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைப்

பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையொன்றை வகுக்கவே அவர் அதனை

முன்வைத்தார். ஆனால், இதனை அரசு நிராகரித்துவிட்டது.

எனவே, அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடுதழுவிய ரீதியில்

ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடப் பொதுஎதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இதற்கமைய நாடுமுழுவதிலுமுள்ள மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையாக எதிர்வரும்

31 ஆம் திகதி  காலை 10 மணிக்கு  மாபெரும் பொதுக்கூட்டமொன்றை கண்டியில்

நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்' எனத் தெரிவித்தார் கலாநிதி விக்கிரமபாகு

கருணாரத்ன.

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=ef24b89a-b7f4-4753-b8b6-52a2cacac41b

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.