Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் ஊர்வலமும் கூட்டம

Featured Replies

பெரும் எண்ணிக்கையானோர் பங்கெடுத்த ஈழத்தமிழர் பாதுகாப்பை வலியுறுத்தும் மனிதநேயப் பேரணி

இன்று மாலை சென்னை மன்றோ சிலையிலிருந்து புறப்பட்ட ஈழத்தமிழர் பாதுகாப்பை வலியுறுத்தும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மனிதநேயப் பேரணியில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரணி மாலை 3 மணிக்கு புறப்படும் என அறிவித்திருந்தபோதும், தொண்டர்களின் தொடர் வருகை காரணமாய் மாலை 4.30 மணிக்கே புறப்பட்டது. பேரணியை எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் தலைமையேற்று நடத்த தமிழ்த் தேசிய பெருந்தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலை வகித்தார். பேரணியில் மருத்துவர் ந. சேதுராமன், பசீர்அகமது, நடிகர் மன்சுூர் அலிகான், அரிமாவளவன், ஓவியர் புகழேந்தி, மனிதம் அக்னி சுப்பிரமணியம், ஓவியர் வீரசந்தானம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரணியில் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க, முவேந்தர் முன்னேற்றக் கழகம், தமிழர் களம், மனிதம் - மனித உரிமை அமைப்பினர், தமிழீழ விடியல் இன்னும் பல அமைப்புகள் கலந்து கொண்டன. மேடை அமைக்கப்பட்ட வாகனத்தில் பாசறைபானர் தேனிசை செல்லபா குழுவினர் ஈழ எழுச்சி பாடல்களை ஆரம்பம் முதல் படி வருகின்றனர். கூடியிருந்த தொண்டர்கள் ஆட்ட ஆடி, பாட்டுபாடி வழிநெடுகா உற்சாக்கத்தோடு வந்தவண்ணம் உள்ளனர். நடிகர் மன்சுூர் அலிகான் முதலில் கோரிக்கை முழக்கங்கள் ஒலிபெருக்கியில் முழங்க, அதை தொடர்ந்து பேரணியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஓருங்கே முழங்க, விண்ணே பிளந்தது.

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

சிங்கள இராணுவ வெறியாட்டத்தில்

இன்னுயிர் நீத்த ஈழத்தமிழர்களுக்கு

வீரவணக்கம்! வீரவணக்கம்!!.

இந்திய அரசே! இந்திய அரசே!!

சிங்கள அரசின் இனவெறிக்கு

துணைபோகாதே! துணைபோகாதே!!

ஈழத்தமிழரைக் கொன்று குவிக்கும்

சிங்கள இனவெறிக்கும்பலுக்கு

இராணுவ உதவிகள் செய்யாதே!!

தமிழக அரசே! தமிழக அரசே!!

ஈழத்தமிழரைக் காப்பாற்ற

இந்திய அரசை வற்புறுத்து!!

இந்திய-தமிழக அரசுகளே!

ஈழத்தமிழரைக் காப்பாற்று!!

சிங்கள இனவெறி அரசுக்கு

துணைபோகும் துதோகத்தைக் கைவிடு!!

இலங்கைத் தீவில் இரு நாடுகள்;:

ஈழம் - சிங்களம் ஒப்புக்கொள்!!

அய். நா. பேரவை நெறிகள் ஏற்று

அகதிகள் மறுவாழ்வை நிலைநாட்டு!!

சிங்களவெறி ஆட்சியாளருக்கு

சிவப்பு கம்பளம் விரிப்பாதா?

செந்தமிழ் இனத்தை அழிப்பதற்கு

ஆயுதங்களைக் கொடுப்பதா?

மனித நேய அடிப்படையில்

மக்கள் ஒன்று சேருவோம்!

மாண்டு மடியும் ஈழத்தமிழர்

மானம்காக்க கூடுபோம்!!

சாதி மத வேறுபாடுகள்

கட்சி அரசியல் மாறுபாடுகள்

ஏதுமின்றி கூடுவோம்

வெற்றிவாகைச் சுூடுவோம்!!

ஈழத்தமிழர் இன்னல் துடைக்க

இணைந்து களமாடுவோம்!

எமது வலிமை என்னவென்று

எட்டுத்திக்கும் சாற்றுவோம்!!

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

சிங்கள இராணுவ வெறியாட்டத்தில்

இன்னுயிர் நீத்த

ஈழத்தமிழர்களுக்கு

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

பேரணி அண்ணாசாலை வழியாக வந்து, காமராசர் சாலை வழியே மைலப்புூர் மாங்கொல்லையை அடைந்தது.

இரவு 7 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் ஈழத்தமிழர் பாதுகாப்பை வலியுறுத்தி மைலப்புூர் மாங்கொல்லையில் நடைபெறவுள்ளது.

நிதர்சனம்.

பொதுக்கூட்டம் பற்றி தகவகல்கள் கிடைத்ததா...

  • தொடங்கியவர்

ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து

சென்னையில் ஊர்வலமும் கூட்டமும்

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலும் ஊர்வலத்திலும் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டு தமிழர் ஆதரவு கோஷம் எழுப்பினர்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு இவற் றிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

முதலில் ஊர்வலம் நடைபெற்றது. இதில்கலந்துகொண்டவர்கள்

* தமிழக அரசே ஈழத்தமிழர்களை காப்பாற்று!

* இந்திய அரசே தமிழர்களைக் காப்பாற்று!

* இந்திய, தமிழக அரசுகளே ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று கோஷம் இட்டவாறு நடந்து சென்றனர்.

வீதியெங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஊர்வலத்தைத்தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சிகளினதும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

உதயன்.

நேற்றைய திருமாளவனின் ஈழத்தமிழர் ஆதரவுக்கூட்டத்தில் நடிகர் மன்சூன் அலிகான் உணர்ச்சி வயப்பட்டவராக முன்நின்று கொட்டொலிகளை எழுப்பி ஊர்வலத்தை நடத்தி சென்றதை பார்த்த போது தமிழக சினிமாவும் எங்களுக்கு கைகொடுக்க முயற்ச்சிக்கின்றது என்பதை பார்த்து சந்தோசமாக இருக்கின்றது.

மற்றைய தமிழ்நடிகர்களும் இணையவேண்டும்

இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய மக்களின் பேரணி குறித்த செய்தி ஒலிவடிவில்..

http://www.bbc.co.uk/tamil/2115.ram

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.