Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சியையே ஏமாற்றுவோரிடம் பிரபாகரன் நம்பிக்கை வைப்பாரா

Featured Replies

பிரதான எதிர்க்கட்சியையே ஏமாற்றுவோரிடம் பிரபாகரன் நம்பிக்கை வைத்து பேசுவாரா?

[09 - July - 2006]

-கேள்வி எழுப்புகிறது ஐ.தே.க.

ஐ.தே.கட்சி தலைவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டு அக்கட்சிக்கெதிரான துரோகத்தை தொடரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் செயலை கண்காணிக்கும் பிரபாகரன் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து அவருடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கு வருவாரா எனக் கேள்வியெழுப்பும் ஐ.தே.கட்சியின் பிரதிச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, இது தொடர்பாக இந்தியாவும் தனது ஆட்சேபனையை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

இது தொடர்பாக திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேலும் கருத்து தெரிவிக்கையில்;

அரசாங்கம் - விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தால் ஐ.தே.கட்சி நிபந்தனையில்லாமல் ஆதரவை வழங்குவோமென ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தது. அத்துடன், சர்வகட்சி மாநாடுகளிலும் கலந்து கொண்டது.

ஆனால், ஜனாதிபதியோ எம்முடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டே எமது உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி ஆசை காட்டி தமது பக்கம் இழுக்கும் நடவடிக்கைகளை தொடர்கிறார்.

தொடர்ந்தும் இதற்கு அனு மதிக்க முடியாது. எனவே, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஐ.தே.கட்சியின் மத்திய குழு கூடி சமாதான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? சர்வகட்சி மாநாடுகளில் பங்குகொள்வதா இல்லையா என்பது தொடர்பாக இறுதித் தீர்மானத்தை எடுப்போம்.

அரசாங்கம் - ஐ.தே.கட்சியுடன் இணைந்து வட, கிழக்குப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி வரும் இந்தியா, ஜனாதிபதியின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக தனது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.

நாட்டின் பிரதான கட்சியையே ஏமாற்றும் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வருவாரா? அது நடக்கக் கூடிய காரியமா?

"குட்டக் குட்டக் குனிபவன் மடையன்" என்ற பழமொழிக்கேற்ப மேலும் குனிவதா அல்லது இறுதித் தீர்மானத்தை எடுப்பதா என்பதை செவ்வாய்க்கிழமை தீர்மானிப்போம்.

http://www.thinakkural.com/news/2006/7/9/i...ws_page6046.htm

தலைவர் தன்னையும் தம்போராளிகளையும் மக்களையுமே நம்புகிறாரே தவிர வேறு ஒருவரையும் நம்ப தயாராக இல்லை. அப்படி நம்பி நகர்ந்திருந்தால் போராட்டத்தை முப்பது வருடம் கட்டிக்காத்து இவவளவு வெற்றிகளுடன் விடுதலையின் வாசலில் வந்து நின்றிருக்க முடியாது.

அதனால் தான் தலைவர் உன்னத மனிதராக தமிழீழ மக்களிடம் திகழ்கின்றார்.

தலைவர் எப்படி மற்றவர்களை போராட்டத்தில் நம்புகிறார் என்பதை நோர்வே கூட பேச்சுவார்த்தைக்கு வந்தபின் நிறைய அறிந்து கொண்டு விடட்து.

  • தொடங்கியவர்

தலைவர் தன்னையும் தம்போராளிகளையும் மக்களையுமே நம்புகிறாரே தவிர வேறு ஒருவரையும் நம்ப தயாராக இல்லை. அப்படி நம்பி நகர்ந்திருந்தால் போராட்டத்தை முப்பது வருடம் கட்டிக்காத்து இவவளவு வெற்றிகளுடன் விடுதலையின் வாசலில் வந்து நின்றிருக்க முடியாது.

சரியாதும் உண்மையானதுமான விளக்கம்....!

மிக முக்கியமா இன்னும் ஒண்டையும் சேர்த்து சொல்லவேண்டும்...! மற்ற தலைவர்கள் சாதிக்காத பல சாதனைகளுக்கு வளி சமைத்தவர்...! விடுதலை அமைப்புகள் எண்று பலர் வந்தும் அவர்களை எல்லாம் விஞ்சி அவர்களின் பாதைவிலகலால், அவர்களின் தொல்லைகளை எல்லாம் களைந்து போராட்டைத்தை முன்நகர்த்தியவர்..!

துரோகத்துக்கு தமிழினம் பலியாகாமல் இண்றும் காத்து இருப்பவர்..,( உதாரணமாக பல விடயங்களை சொல்லலாமே) அவரை இண்று தலைமைக்கு வந்த இராஜபக்ஸ்ச ஏமாற்ற முடியுமா எண்டு கேள்வி கேட்ப்பதே தேவை இல்லாததுதான்....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.