Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்க்கள ஆடையை சிறிலங்கா அரசு கழற்ற வேண்டும் , போர் ஞாபகச் சின்னங்களும் அகற்றப்படவேண்டும்: - தம்பர அமில தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Dabara_amila_theror-150.jpg

போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் காயங்களை ஆற்றாது, நான்கு வருடங்களின் பின்னரும் அதை நினைவுபடுத்தும் வகையில் ஞாபகச் சின்னங்களை அரசு நிறுவுவது பெரும் தவறான செயலாகும். இது தமிழர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார். ஜெனிவா தீர்மானத்தினூடாக இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இடைவேளை அல்ல எனச் சுட்டிக்காட்டிய அவர், இலங்கைக்குள்தான் உலகம் இருக்கின்றது என்ற நிலைப்பாட்டில் அரசு இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

  

கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது

 

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினூடாக சர்வதேசத்திலிருந்து இலங்கை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. உலகத்துக்குள்தான் இலங்கை இருக்கின்றது என்பதை மறந்து, இலங்கைக்குள்தான் உலகம் இருக்கின்றது என்று அரசு நினைக்கின்றது. குத்துச்சண்டை வீரர் மைக்டைசன், பாதாளக் கொள்ளையரான ஜுலம்பிட்டிய அமரே ஆகியோர் போன்று சர்வதேசத்துடன் செயற்பட முடியாது. சர்வதேசத்துடன் ஒன்றிணைந்து செயற்பட புத்திக்கூர்மை வேண்டும். ஆனால் அது இந்த அரசிடம் இல்லை.

 

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய 2014 ஆம் ஆண்டுவரை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இடைவேளை அல்ல. அது ஒரு "கமா'தான் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இதனைக் கருத்திற்கொண்டு அரசு செயற்படவேண்டும். அயல்நாடான இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட ஏனைய ஆசிய நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா முதலான நாடுகளுடனான நட்புறவை எவ்வாறு பேணுவது என்பது குறித்து இராஜதந்திர ரீதியில் அரசு சிந்தித்துச் செயற்படவேண்டும்.

 

போர்க்கள ஆடையை அரசு கழற்ற வேண்டும் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துள்ளன. அதனால் யுத்த காலத்தில் அரசு அணிந்திருந்த ஆடையை, கொண்டிருந்த மனநிலையை இப்போது கொண்டிருக்கக் கூடாது. எனவே, அந்த போர்க் கள ஆடையை அரசு உடனடியாகக் கழற்றிவிட வேண்டும். போர்க் காலத்தில் புலிகள் பயன்படுத்திய போர் டாங்கியொன்றை ஆனையிறவில் அரசு காட்சிப்படுத்தியுள்ளது. இது உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட வேண்டும்.

ஏனெனில், அதைப் பார்க்கும்போது தமிழர்கள் மனதில் ஒரு தாக்கம் ஏற்படும். போர் முடிவடைந்து நான்கு வருடங்கள் கடந்த பின்னரும், அதனை மறுபடியும் நினைவுபடுத்தும் வகையில் ஞாபகச் சின்னங்களை அமைப்பது தவறு. எனவே, போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் காயங்களை ஆற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

 

War-memoreals-756-001.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=79525&category=TamilNews&language=tamil

அந்த கவச வாகனத்தைப் பார்த்து, பல்வேறு நெருக்கடிகள் மத்தியில் எமது பிள்ளைகள் வடிவமைத்த யுத்த வாகனம் என்று தமிழ் மக்கள் பெருமைப் படுகிரார்களே என்று அந்த பிக்கு கவலைப்படுகிறான்.

தமிழர் மேல் உண்மையான அக்கறையுடன் கதைத்திருந்தால்முதலில் புத்த விகாரைகளையும், சிங்களப் பயங்கரவாதிகளின் வெற்றிச் சின்னங்களையும், சிங்கள ராணுவப் பயங்கரவாதிகளையும், சிங்கள ஆக்கிரமிப்புக்களையும்   அகற்ற வேண்டும்என்று சொல்லியிருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.