Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசின் ஊதுகுழலான கலாச்சார விழா - பிரான்செஸ் ஹரிசன்

Featured Replies

சிறிலங்கா அரசின் ஊதுகுழலான கலாச்சார விழா - பிரான்செஸ் ஹரிசன் [ வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013, 08:10 GMT ] [ நித்தியபாரதி ]

FRANCES%20HARRISON.jpg

கொழும்பில் இடம்பெற்ற Colombo scope என்கின்ற கலை விழாவுக்கு அவர்கள் இராணுவச்

சீருடையில் வந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு இராணுவச்

சீருடையில் கலைவிழாவுக்கு வந்ததானது சிறிலங்கா அரசாங்கத்தின் மீது போர்க்

குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அதற்கேதிராகத் தீர்மானம்

நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் இவ்வாறான நடவடிக்கைகளை துணிச்சலுடன்

எதிர்க்கின்ற ஒரு நகர்வாக இது அமைந்திருந்தது.

Standard Chartered என்கின்ற வங்கியின் நிதி ஆதரவுடன், பிரிட்டிஸ் கவுன்சில் மற்றும் Goethe

நிறுவகம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்புடன் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில்

நடாத்தப்பட்ட இக்கலைவிழாவில், கருத்துச் சுதந்திரத்திற்கான வரையறைகள்

சிறிதளவேனும் மதிக்கப்படவில்லை.

இக்கலைவிழாவுக்கான நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் மூன்று பேர் சிறிலங்கா அரசாங்கப்

பேச்சாளர்களாவர். நான்காவதாக நியமிக்கப்பட்டிருந்த உறுப்பினர் ஜேர்மனியப்

போரின் போது ஊடகவியலாளராகக் கடமையாற்றியவராவார். இவர் உண்மையில் 2009ல்

சிறிலங்காவில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட உள்நாட்டு யுத்தம் தொடர்பாக

செய்திகளை வெளியிடவில்லை. பிறிதொரு ஊடகவியலாளர் ஒருவர் இக்கலைவிழாவுக்கு

அழைக்கப்பட்ட போதிலும் இறுதியில் அவர் நீக்கப்பட்டிருந்தார்.

இக்கலைவிழாவானது மிக மோசமாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் இதில்

பங்குபற்றவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே காணப்பட்டது. கலைவிழாவை

நடாத்திய நான்கு பேர் கொண்ட குழுவானது தனது கருத்துக்களை மட்டும்

முன்வைப்பதற்கான ஒன்றாக இது காணப்பட்டது.

 

நான் எழுதி வெளியிட்ட 'மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன' என்ற நூலுக்கு சமனாக ‘Counting the

Bodies’ என்ற தலைப்பில் இக்கலைவிழாவில் விவாதம் இடம்பெற்றது.

இக்கலைவிழாவில் எனது நூல் மிகத்தவறாக விமர்சிக்கப்பட்டது. நான் எனது நூலில்

சிறிலங்காவில் இடம்பெற்ற போரில் 147,000 பேர் வரை கொல்லப்பட்டதாக

குறிப்பிட்டிருந்தேன்.

வெளிநாட்டவர்களின் உந்துதலின் பேரிலேயே இந்த

எண்ணிக்கையை நான் குறிப்பிட்டதாக கலைவிழாவில் ‘Counting the Bodies

என்கின்ற தலைப்பில் இடம்பெற்ற விவாதத்தில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு

மக்கள் கொல்லப்பட்ட எண்ணிக்கையை மன்னார் ஆயர் முன்னர் குறிப்பிட்டிருந்த

நிலையிலும், அரசாங்க புள்ளிவிபரங்களின் மூலமுமே நான் எனது நூலில் இவ்வாறு

குறிப்பிட்டிருந்தேன்.

மன்னார் ஆயர் வெளிநாட்டவர் அல்லர். இவர்

சிறிலங்காவில் வாழும் சிறிலங்காவைச் சேர்ந்தவராவார் என்பதை நான் இங்கு

சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சிறிலங்கா அரசாங்கத்தால் போரில் காணாமற்

போனோர் தொடர்பில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களைக் கருத்திற் கொண்டே போரின்

போது 147,000 வரை கொல்லப்பட்டதாக நான் எனது நூலில் குறிப்பிட்டுள்ளதை

கலைவிழாவில் விவாதத்தை மேற்கொண்ட இரு இராணுவப் பேச்சாளர்களும் கவனத்திற்

கொள்ளவில்லை என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. இவர்கள் எனது நூலில்

உள்ள விடயங்களை மிகத் தவறாக விமர்சனம் செய்திருந்தனர்.

யுத்தத்தின் போது பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்படவில்லை என

இராணுவப் பேச்சாளர்கள் மிகத் தெளிவாக முன்வைத்த போது அதனை எவரும் எதிர்த்து

கருத்துக்களைக் கூறவில்லை என்பதுடன் இதனைக் கேட்டுக் கொண்டிருந்த

பார்வையாளர்கள் இராணுவப் பேச்சாளர்களின் கருத்துக்களை ஏற்று மகிழ்ச்சி

தெரிவித்தனர் என்பது சுவாரசியமான விடயமாகும்.

இந்த விவாதமானது போர்க் குற்றச்சாட்டுக்களை மையப்படுத்தியதாக இருந்த போதிலும், யுத்தக்

குற்றங்களைப் புரிந்தவர்கள் இவ்விவாதத்தில் பங்கு கொண்டதானது

வேடிக்கையானதாகும். யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பாதுகாப்பு

வலயங்களுக்குச் சென்று அங்கு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி

வழங்குவதற்கு எந்தவொரு சுயாதீன சாட்சியளர்களுக்கோ, உதவிப் பணியாளர்களுக்கோ

அல்லது ஊடகவியலாளர்களுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை.

நான் ‘Counting the Bodies என்கின்ற தலைப்பில் இடம்பெற்ற விவாதத்தை You Tubeல்

பார்த்தேன். இதற்காக நான் நுழைவுச்சீட்டை பெறவில்லை. அடுத்த ஆண்டில்

நடாத்தப்படும் Colombo Scope என்கின்ற கலைநிகழ்வில் 2009ல் முடிவுக்குக்

கொண்டுவரப்பட்ட போர் தொடர்பாக விவாதம் மேற்கொள்ளும் போது அதில் அனைத்துலக

போர்க் குற்றங்களுக்கான மூன்று சட்டவாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள்

மற்றும் போருடன் எவ்விதத்திலும் தொடர்புபடாத அரசாங்கப் பிரதிநிதி ஒருவர்

கலந்து கொள்வார்கள் என நான் நம்புகிறேன். இது இவ்வாண்டு இடம்பெற்ற விவாதத்

தொடரை சமன் செய்வதாக இருக்கும்.

இக்கலைநிகழ்வில் இடம்பெற்ற விவாதம் தொடர்பாக கருத்துக்களைக் கூற கொழும்பிலுள்ள பிரிட்டிஸ் கவுன்சில்

மறுப்புத் தெரிவித்து விட்டது. ஆனால் இது கவுன்சிலுக்கு வெளியேயுள்ள யாரோ

ஒருவரால் சுயாதீனமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு நிகழ்வு போன்ற ஒரு தோற்றப்பட்டை

வழங்குகிறது. சிறிலங்கா மீதான மனித உரிமைகள் மற்றும் போர்க்

குற்றச்சாட்டுக்களை மூடிமறைப்பதற்காக எனது நிதியை பிரித்தானிய வரி

செலுத்துனர் பயன்படுத்துகிறார் என்பதே உண்மையாகும்.

இவ்வாறான ஆபத்துமிக்க, உயர் அரசியல் செல்வாக்கைக் கொண்டு மேற்கொள்ளப்படும்

கலைவிழாவுக்கு பிரிட்டிஸ் கவுன்சில் நிதி செலுத்துவதில் எவ்வாறான

பயனுமில்லை. இவ்வாறான ஒன்றை இது மீண்டும் நடாத்த முன்வரக்கூடாது.

Frances Harrison is the author of Still Counting the Dead: Stories from Sri Lanka’s Hidden War.

வழிமூலம் : Asian Correspondent

மொழியாக்கம் : நித்தியபாரதி

 

http://www.puthinappalakai.com/view.php?20130405108055

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.