Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியாவில் இலங்கை கோரிக்கையாளர்கள் 66 பேர் தஞ்சம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அவுஸ்திரேலியாவில் இலங்கை கோரிக்கையாளர்கள் 66 பேர் தஞ்சம்

 

images66.jpgஇலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 66 பேர் படகு மூலம் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளனர்.  மேற்கு அவுஸ்திரேலியாவின் கிரால்டன் பகுதி துறைமுகத்தை அண்டிய பகுதியை இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்கள் சென்றடைந்துள்ளனர். இந்தப் படகில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டவர்களும் பயணித்துள்ளனர். படகில் பயணித்தவர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நடுப்பகலில் பாதுகாப்பு கட்டமைப்புக்குள் சிக்காது துறைமுகத்தை அண்டிய பகுதிக்குள் இந்தப் படகுப் பயணிகள் பிரவேசித்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் ஆறு வாரகால பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவை சென்றடைற்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 66 பேரைக் கொண்ட படகொன்று நேற்று மதியம் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளது. கிறிஸ்மஸ் தீவுக்கு 2 ஆயிரம் கிலோமீற்றர் தெற்கில் உள்ள மேற்கு அவுஸ்திரேலியாவின் கிரால்டன் பகுதி துறைமுகத்தை அண்டிய பகுதியை குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சென்றடைந்துள்ளனர்.

அந்தப் படகில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டவர்களும் பயணித்துள்ளதாக முகவர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. படகில் பயணித்தவர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. நடுப்பகலில் பாதுகாப்பு கட்டமைப்புக்குள் சிக்காது துறைமுகத்தை அண்டிய பகுதிக்குள் இந்தப் படகுப் பயணிகள் பிரவேசித்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுங்க மற்றும் துறைமுக பாதுகாப்பு எச்சரிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த படகு துறைமுக எல்லைகளையும் கடந்து வந்துள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ஜேசன் கிளெயார் தெரிவித்துள்ளார். இவர்கள் ஆறு வாரகால பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவை சென்றடைற்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

காணொளி இணைப்பு

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=6863:2013-04-09-16-02-04&catid=1:latest-news&Itemid=18

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதத்தின் மூலம் அவுஸ்திரேலியாவின் கொள்கைகளை மாற்ற முடியாது: ஜூலியா கிளார்ட்

அவுஸ்திரேலிய மெல்பேர்னில் உள்ள தடுப்பு முகாமில் புகலிடக் கோரிக்கையாளர்கள் முன்னெடுத்துள்ள  உண்ணாவிரதப்போராட்டமானது அந்நாட்டு அரசாங்கத்தின் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் வெற்றியடைப்போவதில்லை என பிரதமர் ஜூலியா கிளார்ட் தெரிவித்துள்ளார்.

மெல்பேர்னினுள்ள  புரோட்மெடோஸ் தடுப்பு முகாமில் 25  தமிழ்  புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட 27 பேர் முன்னெடுத்துள்ள  உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்குள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் பாதுகாப்பு பரிசோதனை என்ற மதிப்பீட்டை அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பான ASIO( Australian Security Intelligence Organisation) மேற்கொள்ளும்.

அவர்களால் அவுஸ்திரேலியாவிற்கோ அல்லது வேறு நாடுகளின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மட்டுமே  அகதிகளுக்கான விசா வழங்கப்பட்டு வருகின்றது.

 

மிகவும் கடுமையான நிபந்தனைகளை இம் முறைகொண்டுள்ளதுடன் சிக்கலானதுமாகும்.

சிலவேளைகளைல் அம் மதீப்பீட்டின் முடிவு எதிர்மறையாக முடியும் பட்சத்தில் அவர்கள் காலவரையின்றி தடுத்து வைக்கப்படுவர்.

 

இந் நடைமுறையால் பெரும்பாலான இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதே காரணத்தினாலேயே புரோட்மெடோஸ் தடுப்பு முகாமில் பல இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இவர்களது உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் ஒரு சிலர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

தற்போது அவர்களது போராட்டம் உலகினது கவனத்தினை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் அகதியோ அல்லது புகலிடக்கோரிக்கையாளரோ  பாதுகாப்பு பரிசோதனை கொள்கைகளை மாற்றமுடியாது என கிலார்ட் தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=4002

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.