Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு எம்.பிக்களை கொலை செய்யச் சதியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

RANIL.jpg

யாழ். மாவட்டத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவும், விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக இருந்த கே.பியும் தனியான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் செயற்பட்டு வருகின்றனர். 

இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைப் படுகொலை செய்யவும் திட்டம் இருக்கின்றதோ தெரியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுச் சபையில் சந்தேகம் வெளியிட்டார்.

பிரதமர் என்ற பதவி மிகவும் கௌரவமானது. இப்பதவியில் இருப்பவர் அதன் உயர் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் கூற்றுகளையும் பதில்களையும் வெளியிடவேண்டும்.

தெல்லிப்பழைத் தாக்குதல் சம்பவத்தைப் பிரதமர் பார்க்கவில்லை. ஆனால் நான் அங்கு கலந்துகொண்டு நேரில் கண்டேன் என ஆவேசமாகக் கூறினார் ரணில். 

அண்மைக் காலங்களில் வடக்கில் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அடாவடித்தனமான தாக்குதல்கள் தொடர்பாகக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சபையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுப் பேசினார்

சம்பந்தனின் கூற்றுகளுக்குப் பதில் அளித்த பிரதமர் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகளை ஒட்டுமெத்தமாக நிராகரித்தார்.

இதனைத் தொடர்ந்தே ரணில் விக்கிரமசிங்க தனது கருத்துகளையும் வெளியிட்டார். தெல்லிப்பளையில் துர்க்கை அம்மன் ஆலய முன்றிலில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். 

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு பலாலிக்குச் சென்ற சமயத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களைப் பொலிஸார் கைதுசெய்யவில்லை. 

ஆனால், பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் பொலிஸார் அவரை உடனடியாக விடுவித்துள்ளனர்.

மற்றுமொருவர் இராணுவ முகாமுக்குள் ஓடியுள்ளார். இவ்வாறான தாக்குதல்களையும் அசசுறுத்தல்களையும் இராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழுவினரே மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி எந்தவிதமான விசாரணைகளையும் நடத்தவில்லை. கைதுசெய்யப்படும் நபர்கள் பொலிஸாரிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். 

ஆனால் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரிடம் ஒப்படைப்பது ஏன்? என்றும் கேட்டார் ரணில். இந்தச் சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட பிரதமர், இந்தத் தாக்குதலை நடத்தியவர்களுள் ஐ.தே.கவினரும் இருந்ததாகக் கூறப்படுகிறதே என்றார்.

இதனால் ஆத்திரமடைந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவி பொறுப்பும் கௌரவமும் உடையது. அந்தப் பதவியில் இருப்பவர் பொறுப்புடன் பேசவேண்டும். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் விக்கிரமபாகு கருணாரட்ன, மனோகணேசன் ஆகியோரும் தமது ஆதரவாளர்களுடன் கலந்துகொண்டனர்.

இத்தனைபேர் முன்னிலையில் தாக்குதல் நடத்தப்பட்டபோதும் எவரும் கைதுசெய்யப்படவில்லை. மக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த நபர் எங்கே? அவர் யார் என்பதை இந்தச் சபையில் தெரிவிக்க முடியுமா? என்றும் கேள்விகளைத் தொடுத்து சவால்விட்டார் ரணில் விக்கிரமசிங்க.

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=6875:2013-04-11-07-12-07&catid=1:latest-news&Itemid=18

 

உங்கள் எல்லோருக்கும் வாய்தான் வேறே தவிர நீங்கள்  எல்லோரும் ஒருவரே 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அத்திவாரம் போட்டாச்சு, 5 மாதம் இருக்கு அதுக்குள்ளே கட்டிடம் கட்டி முடிச்சா போதும். மெரிக்காவ கூட்டி வந்து குடிபூரல் நடத்த வைக்கலாம். :)

 

பிரதமர் என்ற பதவி மிகவும் கௌரவமானது. இப்பதவியில் இருப்பவர் அதன் உயர் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் கூற்றுகளையும் பதில்களையும் வெளியிடவேண்டும்.

தெல்லிப்பழைத் தாக்குதல் சம்பவத்தைப் பிரதமர் பார்க்கவில்லை. ஆனால் நான் அங்கு கலந்துகொண்டு நேரில் கண்டேன் என ஆவேசமாகக் கூறினார் ரணில்.

 

சிங்கள பௌத்தர்கள் இருக்கும்வரை பிரதமர் பதவி என்பது பொய்யர்கள், பிரட்டர்களின் பதவியாகவே இருக்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.