Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரறிவாளன் சாந்தன் முருகனின் உயிர் தப்புமா? இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பால் சிக்கல்!

Featured Replies

கருணை மனுவை தாமதமாக நிராகரித்த காரணத்துக்காக ஒருவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க முடியாது என்று புல்லர் என்பவரின் வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) முக்கியமான ஒரு தீர்ப்பை அளித்துள்ளது
 
இந்த தீர்ப்பு ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு மேல்முறையீடு செய்திருக்கும்; முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 தமிழர் நிலை என்ன என்று கேள்வியை எழுப்பியுள்ளது.
 
அவர்களும் இதே காரணத்தின் அடிப்படையிலேயே தமது மேல்முறையீட்டை செய்துள்ளனர்.
 
இந்திய பயங்கரவாத எதிர்ப்பு படையின் தளபதி ; மனீந்தர் சிங் பீட்டாவை கொலை செய்யும் நோக்கில், 1993 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 9 பேர் பலியாகினர்.
 
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட தேவேந்தர் பால் சிங் புல்லர்;, இந்திய குடியரசுத் தலைவருக்கு 2003 ஆம் ஆண்டு கருணை மனு அனுப்பியிருந்தார். அது தொடர்பாக முடிவெடுக்கப்படாமல் 2011 ஆம் ஆண்டுதான் அது நிராகரிக்கப்பட்டது.
 
கருணை மனு மீதான முடிவுக்காக காத்திருந்ததில், பல ஆண்டுகள் அவர் சிறையில் கழித்துவிட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த வழங்கில் இன்று தீர்ப்பளித்த இந்திய உச்ச நீதிமன்றம் மனுதாரான புல்லரின் கருணை மனு நிராகரிக்கப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டதை அடிப்படையாக வைத்து அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற முடியாதென்று தீர்ப்பளித்தது.தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை நீண்டகாலம் சிறையில் அடைத்து வைத்துவிட்டு காலம் தாழ்த்தி தூக்கிலிடுவது ஒரு குற்றத்துக்கு இரண்டு தண்டனை என்பது போல் ஆகிவிடாதா? ஏன்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம் பதிலளிக்கவில்லை.
 
இவ்வாறே ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுக்களும் 11 ஆண்டுகாலம் கழித்து நிராகரிக்கப்பட்டதால் அவர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி மேல் முறையீடு செய்தனர். சென்னை உயர்நீதிமன்றம் அவர்களது தூக்கை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது. அதே நாளில் தமிழக சட்டசபையிலும் மூன்று தமிழருக்கு தூக்கு நிறைவேற்றக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இருப்பினும் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் இதேபோன்ற கோரிக்கையுடன் புல்லர் வழக்கு விசாரணை நடைபெற்றதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 தமிழர்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தானே விசாரிப்பதாக எடுத்துக் கொண்டது. தற்போது புல்லர் வழக்கில் அவரது மனுவை நிராகரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் அந்த தீர்ப்பின் பிரதிபலிப்பு இந்த மூன்று தமிழர்களது வழக்கிலும் இருக்கும் என்பதே உண்மையாகும். ஏனெனில் ஒரே அடிப்படைகளை கொண்ட இரண்டு வழக்குகளில் முரண்பாடான வௌ;வேறு தீர்ப்புகளை வழங்க முடியாதென சட்டவாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
 
அதனால் இந்த மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனையை மட்டுமல்லாமல் ஏற்கனவே சந்தன வீரப்பன் வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் மேன்முறையீடு செய்திருக்கும் 4 தமிழர்கள் உட்பட மொத்தம் ஏழு தமிழர்களுக்கான தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்யும் என்பதே பரவலான எதிர்பார்ப்பாகும்.
 
ஆனால் தமிழகத்தில் ஈழ ஆதரவுக்கான மாணவர் போராட்டம் அரசியல் கட்சிகளின் சிறீலங்கா எதிர்ப்பு நிலைப்பாடு மீனவர்கள் போராட்டம் என்று ஒரு பரபரப்பான அரசியல் கொதிநிலை உள்ள சூழலில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது ? என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.
 
முக்கியமாக இப்போதுள்ள சூழலில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது தமிழகத்தில் பாரிய எதிர்விளைவுகளை எற்படுத்தும் என்பதும் அங்கு காங்கிரஸ் கட்சியின் இருப்பை கேள்விக்குள்ளாக்கிவிடும் என்பதும் டில்லியுள்ள காங்கிரஸ் தலைமைக்குத் தெரியும்.
 
அடுத்த வருடம் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்திலுள்ள 40 தொகுதிகளையும் முற்றாக இழப்பது என்பது மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு பாதகமாக அமைந்துவிடும் என்பதையும் காங்கிரஸ் தலைமை அறியும்.
 
அதேபோல இவர்கள் விடயத்தில் காங்கிரஸ் கட்சி வேறு முடிவை எடுத்தாலும் அது பஞ்சாப்பில் பிரச்சனை தோற்றுவிக்கும்.தமிழகத்துக்கு ஒரு நியாயம் பஞ்சாப்புக்கு ஒரு நியாயமா? என்று நிச்சயமாக சீக்கியர்கள் போர் கொடி தூக்குவார்கள்.
 
எனவே இவ்வாறான ஒரு நெருக்கடியான சூழலில் இந்த வழக்கு விசாரணையை நாடளுமன்றத் தேர்தல் முடியும் வரையும் இழுத்தடித்து தாமதப்படுத்தவே காங்கிரஸ் அரசாங்கம் முயற்சிக்கும் என்பதே பெரும்பாலனவர்கள் கருத்தாகும்.
 
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்து பெரும்பான்மை பலத்துடன் அந்தக் கட்சி ஆட்சியமைத்தால் அது தமிழகத்தின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது இந்த மூவரையும் தயவு தாட்சண்யமின்றி தூக்கிலிட்டு ராஜிவ் காந்தியின் ஆத்மாவை சாந்தியடைய வைத்துவிட்டதாக பெருமையடித்துக்கொள்ளும்.
 
இது தொடர்பாக தமிழகத்தில் எழக்கூடிய எதிர்ப்பலைகளை காரணம் காட்டி ஜெயலலிதாவின் ஆட்சியை கலைத்து குடியரசுத்லைவர் ஆட்சியை கொண்டுவரவும் காங்கிரஸ் கட்சி பின்நிற்காது.காஸ்மீர் திரிபுரா மேகலாயா மணிப்பூர் என்று இதற்கு நிறைய முன்னுதாரணங்கள் இருக்கின்றன.
 
குடியரசுத்தலைவர் ஆட்சியில் உள்ளுர் அரசியல் கட்சிகளின் முரண்பாடுகளை கையாண்டு மாநிலங்களின் பொதுபிரச்சனைகளில் ஒன்று பட்ட மக்கள் எழுச்சிகளை திசை திருப்பி அடக்கிய அனுபவமும் காங்கிரஸ் கட்சிக்கு நிறையவே உள்ளது.
 
மாறாக எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தல் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவி மாற்றுக் கட்சி ஒன்று ஆட்சியமைத்தால் அந்த ஆட்சியும் தமிழகத்தின் தயவிலேயே தங்கியிருக்கும் நிலை வந்தால் மட்டும் தான் உச்ச நீதிமன்றம் இந்தத் தமிழர்களது தூக்குத் தண்டனையை உறுதிப் படுத்தினாலும் அவர்களது உயிரை காப்பற்ற முடியும்.
 
அதாவது ராஜிவ் கொலை வழக்கில் 3 தமிழரின் தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் என்ன மாதிரியான தீர்ப்பளித்தாலும் மூவரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளதை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானது.
 
மூன்று தமிழருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று ஏற்கனவே தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில் அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் மூவரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும் என்று சட்டநிபணர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
மொத்தத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சொல்வதைப் போல தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற தமிழகம் சொல்வதை கேட்கின்ற ஒரு ஆட்சி மத்தியில் அமைந்தால் தான் இந்த மூன்று தமிழர்களின் பிரச்சனைக்கு மட்டுமல்ல ஈழத்தமிழர் பிரச்சனை மீனவர் பிரச்சனை என்று காவிரிப்பிரச்சனை முல்லைப் பெரியாறு பிரச்சனை என்று தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கும் ஓரளவுக்காவது தீர்வு கிடைக்கும்.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.