Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது விரைவில் குண்டர் சட்டம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது விரைவில் குண்டர் சட்டம் பாயலாம் என போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

 

மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளார். அக்குபஞ்சர் மருத்துவ படிப்பை தபால் மூலம் படித்த சீனிவாசன், முதல் மனைவி விஜியை பிரிந்து, தற்போது, 2வது மனைவி ஜுலியுடன் வசித்து வருகிறார்.

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது ரங்கநாதன் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில்தான் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது, பணத்தை எப்படி கொடுக்கப்போகிறீர்கள் என்று காவல்துறையினர் கேட்டுள்ளனர். அதற்கு, படத்தில் நடித்து பணத்தை திருப்பி கொடுப்பதாக பவர் ஸ்டார் கூறியுள்ளார்.

இந்த விசாரணையின்போது, அவரது சொத்து ஆவணங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவரது வங்கி கணக்கு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதோடு, வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டது. அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன்பிறகு சீனிவாசன் மீது மேலும் புதிதாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம் சண்டிகாரைச் சேர்ந்த ஜெகத்சிங் என்பவரிடம் ரூ.2 கோடியும், கோவாவைச் சேர்ந்த பிரகாஷ் ரத்தோர் என்பவரிடம் ரூ.16 லட்சமும், சென்னை பெசன்ட்நகரைச் சேர்ந்த ஜெகநாதன் என்ற வழக்கறிஞரிடம் ரூ.70 லட்சமும் ஏமாற்றி உள்ளார். இந்த புகார்கள் அடிப்படையில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வேலூர் சிறையில் சீனிவாசன் அடைக்கப்பட்டார். இதுவரை சீனிவாசன் மீது 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

 

இதனிடையே, சென்னை அண்ணாநகரில் உள்ள பவர் ஸ்டாருக்கு சொந்தமான லத்திகா மருத்துவமனை, அவரது வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. முன்னதாகவே நடிகர் பவர் ஸ்டாரின் மனைவி ஜுலி மருத்துவமனையில் இருந்து ஆவணங்களை எடுத்துக் சென்று விட்டதாக ஊழியர்கள் கூறினார்.

மருத்துவமனையில் பணியாற்றி வரும் பணியாளர்கள், டாக்டர்கள் ஆகியோருக்கு பல மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லையாம். இதனால் மருத்துவமனைக்கு ஊழியர்கள் பூட்டுப் போட்டனர். தங்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை கொடுக்கும்வரை இந்த இடத்தை விட்டு போகமாட்டோம் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பவர் ஸ்டார் சீனிவாசன் விரைவில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=14525

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.