Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படுக்கை அறை காட்சிகளை காட்டி ஸ்ரீசாந்த் 'பிளாக்மெயில்.

Featured Replies

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 'ஸ்பாட்பிக்சிங்' முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான்,முன்னாள் வீரரும், தற்போது புக்கியாக செயல்பட்டவருமான அமித்சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுடன் தொடர்புடைய 16 புக்கிகளும் மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் கைதான 4 வீரர்களையும் போலீசார் டெல்லியில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டக்காரர்களின் வலையில் வீழ்ந்தது எப்படி என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சூதாட்டக் காரர்கள் சீசனுக்கு தகுந்தபடி செயல்படுவார்கள். அவர்களுக்கு நாட்டைப் பற்றியோ, நாட்டின் பொருளாதாரத்தை பற்றியோ கவலையில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தவிர வேறு எதுவும் கிடையாது.

தேர்தல் சமயங்களில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? யார் ஆட்சிக்கு வருவார்கள்? என்று சூதாட்டம் நடத்துவார்கள்.

தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் நாடு முழுவதும் வசதி படைத்த இளைஞர்கள் கிரிக்கெட் மோகத்தில் சிக்கி உள்ளனர். இதனால் கிரிக்கெட் போட்டிகள் திருவிழா போல நடந்து வருகிறது. எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பதில் இளைஞர்களிடையே ஆர்வமிகுதி ஏற்பட்டுள்ளது. இதை சூதாட்ட கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது.

ஆட்டத்தின் போக்கை தங்களுக்கு சாதகமாக மாற்றி பணத்தை அள்ள திட்டமிடும் சூதாட்டக்காரர்கள் இதற்காக முதலில் வீரர்களுக்கு வலை விரிப்பார்கள். வீரர்களை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது. அவருக்கு நெருக்கமானவர்கள் யார்? நண்பர்கள் யார்? என்பதை கண்டு பிடித்து அவர்களுக்கு முதலில் விருந்து வைத்து குளிப்பாட்டுவார்கள்.

அடுத்து நண்பர் மூலம் வீரர்களை வலைத்து விடுவார்கள். முதலில் சாதாரண நட்பு முறையில் விருந்து இருக்கும். அழகிகள், நடிகைகளையும் நட்பு ரீதியில் சப்ளை செய்வார்கள். இதில் மயங்கிய வீரர்கள் சிக்கிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தெரியாமல் அழகிகளுடன் உல்லாச காட்சிகளை படம் பிடித்து வைத்துக்கொள்வார்கள்.

முதலில் சூதாட்டத்தில் ஈடுபட பேரம் பேசுவார்கள். தங்கள் வலையில் சிக்கியது பவுலர் என்றால் பந்து வீச்சில் எப்படி நடந்து கொள்வது, சைகை காட்டும் வீதம் போன்றவற்றை முடிவு செய்து விடுவார்கள். பேட்ஸ்மேன் என்றால் அதற்கு தக்கபடி ரகசிய ஒப்பந்தம் இருக்கும். ஆனால் இதற்கு சம்மதிக்க தயங்கும் வீரர்களை சூதாட்டக்கும்பல் உல்லாச படங்களையும், வீடி யோக்களையும் காட்டி மிரட்டவும் தயங்க மாட்டார்கள். அப்படித்தான் ஸ்ரீசாந்த் சிக்கி இருக்கிறார்.

ஸ்ரீசாந்த்துக்கு பிஜூ என்பவர் நெருங்கிய நண்பராவார். ஸ்ரீசாந்த் கூடவே இருப்பார். மற்றொரு வீரரான சண்டிலாவும் அவருக்கு நெருக்கம். சூதாட்டக்கும்பல் முதலில் நண்பரைப் பிடித்து அழகிகளை சப்ளை செய்து மடக்கியது.

பெண்கள் விஷயத்தில் ஸ்ரீசாந்த் பலவீனமானவர் என்பதை தெரிந்து கொண்டு அவருக்கும் விருந்து வைத்திருக்கிறார்கள். இந்த ஆண்டில் மட்டும் இதுபோல் 5 முறை அழகிகளை அனுப்பி வைத்து உல்லாசமாக இருக்க வைத்து விருந்து வைத்திருக்கிறார்கள்.

பெண்களை அனுப்பி வைத்துவிட்டு தரகர்கள் வீரர்களுக்கு தகவல் கொடுப்பார்கள். அவர்கள் வந்து சேர்ந்ததும் வீரர்கள் அதை உறுதி செய்து பதில் தருவார்கள். இந்த உரையாடல்களை போலீசார் ரகசியமாக பதிவு செய்துள்ளனர். ஸ்ரீசாந்த் மும்பை ஓட்டலில் கைது செய்யப்பட்டபோது அவருடன் ஒரு அழகியும் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

போலீஸ் காவலில் ஸ்ரீசாந்த் மிகவும் இறுகிய முகத்துடன் இருந்தார். எந்த தகவலையும் சொல்ல மறுத்தார். படிப்படியாக மவுனத்தை கலைத்தார். தன்னை சுற்றி இருந்தது சூதாட்டக் கும்பல் என்று தெரியாமல் அவர்கள் வலையில் வீழ்ந்துவிட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சூதாட்ட தரகர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்-டாப் கம்ப்யூட்டர்களில் கிரிக்கெட் வீரர்கள் ஓட்டல் அறைக்குள் அழகிகளுடன் நுழையும் காட்சிகள் உள்ளது. எனவே தரகர்கள் திட்டமிட்டு வீரர்களை சிக்க வைப்பதற்காக முன் கூட்டியே அறைகளில் வீடியோ காமிராக்கள் பொருத்தி ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த வீடியோக்களை போலீசார் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14772:sreesanth-out-of-the-bedroom-scenes-blackmail&catid=40:sports&Itemid=108

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.