Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோசடி நடிகை லீனா மரியா பாலை சென்னை அழைத்து வருகிறது போலீஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: 19 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை லீனா மரியா பாலை போலீசார் சென்னை அழைத்து வருகின்றனர்.

தேசிய விருது பெற்ற "ரெட் சில்லீஸ்" என்ற மலையாள படத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்தவர் நடிகை லீனா மரியா பால் (25). "ஹஸ்பண்ட்ஸ் இன் கோவா", "கோப்ரா" ஆகிய படங்களிலும் மற்றும் இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமுடன் "மெட்ராஸ் கபே" படத்திலும் இவர் நடித்து இருக்கிறார்.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த லீனா, பல் டாக்டருக்கு படித்தவர். பள்ளிப்படிப்பை துபாயில் படித்தார். இவரது பெற்றோர் துபாயில் வசித்து வருகிறார்கள். இவரது தந்தை என்ஜினீயர் ஆவார். லீனாவின் ஆண் நண்பர் பாலாஜி என்ற சுகாஷ் சந்திரசேகர். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். சுகாஷ் சந்திரசேகர் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிக் கொண்டு லீனாவுடன் சென்னை அம்பத்தூரில் உள்ள கனரா வங்கி கிளை ஒன்றுக்கு சென்று இருக்கிறார்.
 

actress%20leema%20paul.jpg

பெரிய திட்டம் ஒன்றை தொடங்குவதாக கூறி, அதற்காக அவர்கள் அந்த வங்கி கிளையில் ரூ.19 கோடி கடன் வாங்கி உள்ளனர். அதன்பிறகு அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக அந்த வங்கி கிளையின் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் கடந்த மார்ச் மாதம் சுகாஷ் சந்திரசேகர், லீனா ஆகிய இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 420 (ஏமாற்றுதல்), 120 பி (கிரிமினல் சதி), 406 (நம்பிக்கை மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சுகாஷ் சந்திரசேகர் தன்னை முக்கிய அரசியல் தலைவர்களின் உறவினர் என்று கூறி ஏற்கனவே ஒரு வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததும், அது தொடர்பாக சென்னை சேத்துப்பட்டு போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது. மேலும் அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டு மேலும் சில வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்து இருப்பதும் தெரிய வந்தது.

அத்துடன் லீனா, தன்னை சுகாஷ் சந்திரசேகரின் மனைவி என்று கூறிக் கொண்டு ஒரு வங்கியில் ரூ.65 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்து இருப்பதையும் விசாரணையின் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து, தலைமறைவான இருவரையும் கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் நடிகை லீனாவும், சுகாஷ் சந்திரசேகரும் டெல்லியின் தெற்கு பகுதியில் அசோலா என்ற இடத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டி தங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் டெல்லி சென்ற தனிப்படை போலீசார், டெல்லி போலீசாரின் உதவியுடன் நேற்று அந்த பண்ணை வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தி அங்கிருந்த நடிகை லீனா மரியா பாலை கைது செய்தனர். மேலும் அவருடைய பாதுகாவலர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேர் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆவர்.

ஆனால், போலீசார் வருவதை அறிந்ததும் சுகாஷ் சந்திரசேகர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அந்த பண்ணை வீட்டில் இருந்து 9 ஆடம்பர கார்கள், 81 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். கைதான பாதுகாவலர்களிடம் இருந்த 4 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக லீனாவும், சுகாஷ் சந்திரசேகரும் கடந்த 12ஆம் தேதி முதல் அந்த பண்ணை வீட்டில் பதுங்கி இருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட நடிகை லீனாவை டெல்லி நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் ஆஜர்படுத்தினர். விசாரணைக்காக, அவரை விமானம் மூலம் போலீசார் இன்று சென்னை கொண்டு வருகிறார்கள். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு மேலும் பல தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=15450

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.