Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புல்லுமலைக் கிராமத்தின் குழந்தைகளையும் ஆதரிப்போம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புல்லுமலைக் கிராமத்தின் குழந்தைகளையும் ஆதரிப்போம்.

மட்டக்களப்பு நகரத்தின் மேற்கே 30 கிலோ மீற்றருக்கு அப்பால் செங்கலடி பதுளை பிரதான வீதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு எல்லைக் கிராமமாக ‘பெரிய புல்லுமலை’ எனும் அழகிய கிராமம் அமைந்துள்ளது.

 

சுமார் 800வரையிலான தமிழ்குடும்பங்கள் குடியிருந்த இக்கிராமம் விவசாயத்தையே தன் ஆதாரமாகக் கொண்டிருந்தது. காலத்துக்குக் காலம் யுத்தத்தின் பாதிப்பு இக்கிராமத்தையும் அதிகளவில் காவு கொண்டது. யுத்தத்தினால் ஊர்களை விட்டு மக்கள் வெளியேறிவிட  ஒரு கட்டத்தில் புல்லுமலை மனிதர்கள் இல்லாத ஊராக இருந்ததும் ஒருகாலம்.

 

இதர இடங்களில் குடியேறி அங்கங்கே பல குடும்பங்கள் நிரந்தரமாக தங்கிவிட்ட போதும் 148 குடும்பங்கள் தங்கள் சொந்த ஊரான புல்லுமலைக்குத் திரும்பியுள்ளனர். யுத்தத்தின் பாதிப்பு இந்தக் கிராமத்துக் குழந்தைகளையும் குடும்பங்களையும் மிகவும் பாதித்துள்ளது. உளவள ஆற்றுப்படுத்தல் முதலான சமூக மேம்பாடு வரை இக்கிராமத்துக்குச் செய்ய வேண்டிய மாற்றங்கள் நிறையவே இருக்கிறது.

1.jpg

800பிள்ளைகள் கல்விகற்ற புல்லுமலை தமிழ்க்கலவன் பாடசாலையானது முதலாம் வகுப்பு முதல் 10;வகுப்பு வரையான வகுப்புக்களைக் கொண்டிருந்தது. யுத்த முடிவின் பின் தற்போது குடியேறிய குடும்பங்களிலிருந்து 90 பிள்ளைகள் மட்டுமே பாடசாலைக்குச் செல்கின்றனர். இங்கு போதியளவு அசிரியர்கள் இல்லை. கணிதம் , விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கான ஆசிரியர் இல்லாது இப்பாடங்களை கற்க முடியாத நிலமையில் பிள்ளைகள் அவதிப்படுகின்றனர்.

 

மீளவும் உயிர்த்துள்ள இந்தப் பாடசாலை மாணவர்களின் கல்வி நிலமையும் அடிப்படை வசதிகளும் மிகவும் பின் தங்கியே காணப்படுகிறது. போக்குவரத்து முதல் பிள்ளைகளுக்கான கற்கை உபகரணங்கள் வரையிலும் உதவிகளை எதிர்பார்த்தே கனவுகளோடு மாணவர்கள் தொலைதூத்திலிருந்தும் நடந்து சென்று படிக்கின்றனர்.

2.jpg

யுத்தத்தினால் பெற்றோரை இழந்த பிள்ளைகள் , விதவைகள் , குடும்ப வறுமையை போக்க அரபு நாடுகளுக்குச் சென்று துன்புறும் பெண்களின் குழந்தைகள் வரை இக்கிராமத்தின் கண்ணீர்க் கதைகள் பல.

 

இந்த 90 மாணவர்களுக்கும் முதல் கட்ட அவசர உதவியாக பாதணிகள், புத்தகப்பைகள், மற்றும் நூலகம் ஒன்றிற்கான உதவியையும் வழங்க வேண்டிய அவசியத்தை எமது பணியாளர்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்கள்.

கட்டம் கட்டமாக இக்கிராமத்தின் முன்னேற்றத்தை நோக்கிய எங்கள் பயணத்தில் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவினை வேண்டுகிறோம்.

 

ஒரு பாதணியின் விலை – 600.00ரூபா

90 பிள்ளைகளுக்கான பாதணிகள் – 54000.00ரூபா (அண்ணளவாக 335€)

ஒரு புத்தகப்பையின் விலை – 450.00

90 பிள்ளைகளுக்கான புத்தகப்பைகள் – 40500.00ரூபா (அண்ணளவாக 250€)

நூலகம் – 50000.00ரூபா (அண்ணளவாக 310€)

இம்மூன்று அவசிய தேவைகளையும் நிறைவேற்ற 895€க்கள் தேவைப்படுகிறது.

 

புல்லுமலைக் கிராமத்தின் ஏழைக்குழந்தைகளின் கல்வியை முன்னேற்றவும் அவர்களது எதிர்காலத்தை சிறப்பாக மாற்றவும் உங்கள் ஆதரவினை வழங்குமாறு அனைத்து புலம் பெயர் உறவுகளிடமும் உரிமையோடு வேண்டுகிறோம்.

தொடர்புகளுக்கு :-

 

Bank information

 

Germany:

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

 

Other countrys:

 

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

 

Paypal Account – nesakkaram@gmail.com

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

 

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

 

http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புல்லுமலைக் கிராமத்தின் குழந்தைகளுக்கான பாடசாலை உபகரணங்கள் அவசரம் வழங்க வேண்டியுள்ளது. உதவ முடிந்தவர்கள் உதவுமாறு வேண்டுகிறோம்.

ஏழைக்குழந்தைகள் அடிப்படை வசதிகள் அற்ற வாழ்வை கொண்டு செல்ல நடைபெறும் வாழ்வுப்போராட்டம் தினம் தினம் கொடுமை. இத்தோடு இவர்கள் கல்வியில் முன்னேற வேண்டுமென்ற அக்கறை இக்குழந்தைகளின் பெற்றோருக்கு பெரும் போராட்டமாகவே இருக்கிறது.
இவர்களுக்கு ஆதாரமாக கல்விக்கான அடிப்படை வசதிகளை புலம்பெயர் தமிழர்கள் வழங்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள உறவு Naanthaan அவர்கள் தனது உதவியாக 104,71€ வழங்கியுள்ளார். இவ்வுதவியை விரும்பிய திட்டத்திற்கு பயன்படுத்துமாறு கூறி அனுப்பியுள்ளார். புல்லுமலை குழந்தைகளுக்காக இவ்வுதவியை வழங்கவுள்ளோம். மேலதிகமாக தேவைப்படும் உதவியை முடிந்த உறவுகள் தந்து உதவுமாறு வேண்டுகிறோம்.

 

மொத்தம் தேவைப்படும் உதவி - 895€

 

மேலும் தேவைப்படும் உதவி - 895€-104,71€ =790,29€

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலை உறவு நான்தான் இற்கு நன்றி.

 

எப்போதும் போலான உங்கள் ஊக்கத்துக்கு நன்றிகள் விவசாயி விக்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.