Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்போராளி மலரவனின் நாட்குறிப்பு 'போர் உலா' - ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

War-Journey-Diary.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்டு நவம்பர் 1992ல் மரணித்த மலரவன் என்கின்ற போராளியின் நாட்குறிப்பானது தற்போது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

மலரவன் போரில் மரணித்ததன் பின்னர் போர் பற்றிய நாட்குறிப்பானது அவரது சக போராளித் தோழர்களால் கண்டெடுக்கப்பட்டு பின்னர் 'போர் உலா' என்ற பெயரில் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது. விஜின்தன் என்கின்ற இயற்பெயரைக் கொண்ட மலரவன், எழுத்தாளர் குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.

Diary-of-a-Tamil-Tiger.jpg

இவர் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போர் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை தனது நாட்குறிப்பில் எழுதியிருந்தார். இதுவே பின்னர் 'போர் உலா' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இவர் தனது நாட்குறிப்பில் நிச்சயமற்ற வாழ்க்கை தொடர்பாகவும் அதன் ஏற்ற இறக்கங்கள் தொடர்பாகவும் போர் தொடர்பான தனது உணர்வுகளையும் எழுதியிருந்தார். 

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் தோற்கடிக்கப்பட முடியாது என ஏனைய பலர் நம்பியது போன்று மலரவனும் மிக உறுதியாக நம்பியிருந்தார். "எதிரியானவன் எண்ணிக்கையிலும், ஆயுத தளபாடங்களிலும் எங்களை விட வலிமை மிக்கவன். எமது உறுதி, எமது இலக்கு மீதான எமது நம்பிக்கை, எமது நிலம் மற்றும் எமது மக்கள் மீது நாம் வைத்திருக்கும் அன்பு போன்றனவே எமது பலமாகும்" என மலரவன் தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். 

எனினும், சிறிலங்கா அரசின் மிகப் பலமான ஆயுத சக்தியால் தமிழீழத்தை அடைவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் தோற்கடிக்கப்பட்டது. 

'போர் உலா' என்கின்ற இந்த நூலில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு பின்னால் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட இரகசிய ஏற்பாடுகள், தாக்குதல் தொடர்பான தெளிவான விபரங்கள், போரில் ஏற்பட்ட தாங்க முடியாத இழப்புக்கள், போரில் சந்தித்த கடினங்கள், தமிழ் மக்களுடன் ஏற்பட்ட சில முரண்பாடுகள், தற்கொலைத் தாக்குதல்கள் போன்ற பல்வேறு விடயங்களை மலரவன் வெளிப்படையாகப் பதிவு செய்திருந்தார். 

இந்த நூலானது 1990ல் தமிழில் எழுதப்பட்டது. அவ்வாண்டில் சிறிலங்காவின் வடக்கில் இடம்பெற்ற மிகப் பெரிய யுத்தம் பற்றி இந்த நூலில் விபரிக்கப்பட்டது. 1990ல் புலிகள், சிறிலங்கா அரசாங்கத்துடனான உடன்படிக்கையை முறித்துக் கொண்டு போரை ஆரம்பித்தது. இந்த நூலானது 2007ல் அதாவது நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானம் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் மொழிபெயர்க்கப்பட்டது. 

"மலரவனை உருவாக்கிய சமூகமானது அழிக்கப்படும் என்பதை நான் ஒரு கணம் கூட கற்பனை செய்து பார்க்கவில்லை" என இந்நூலை மொழிபெயர்த்த நியூசிலாந்தைச் சேர்ந்த ஈழத்தமிழர் கூறுகிறார். தமிழீழ விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டதால், இன்று தமிழ் மக்கள் விரக்தியடையக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் தோற்கடிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது இன்னமும் அறியப்படவில்லை. 

Title: War Journey – Diary of a Tamil Tiger; Author: Malaravan; Publisher: Penguin Books; Pages: 123; Price: Rs.250 (Paperback) 

வழிமூலம் : Firstpost - M.R. Narayan Swamy, Executive Editor of IANS, is a Sri Lanka watcher. 

மொழியாக்கம் : நித்தியபாரதி

 

http://www.puthinappalakai.com/view.php?20130707108619

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.