Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூண்டு - மௌனம் என்பது நடுநிலையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கார்டன் வைஸ் எழுதிய "கூண்டு - இலங்கை போரும் விடுதலைப்புலிகளின் இறுதி நாட்களும்" என்ற சர்ச்சைக்குரிய புத்தகத்தை பற்றிய எனது பார்வை. 

 

யாழில் இந்த புத்தகம் பற்றி ஏற்கனவே வேறொரு திரி இருந்ததை அவதானித்திருந்தேன். அதில் பல கருத்துக்குள் கத்தரிக்கப்பட்டுள்ளன. ஒரு சூடான விவாதம் நடந்தற்கான அடையாளமாகவே அதனை பார்க்கின்றேன்.

நான் இங்கு புத்தகத்தில் உள்ள சர்ச்சைக்குரிய விடயங்களை கேள்விக்குறியாக்க விரும்பவில்லை. 

இந்த நூலின் பின் அட்டையில் தெளிவாக ஒன்றை சொல்லியிருக்கிறார் கார்டன் வைஸ்.

"பக்கச்சார்பின்றி அறக்கடப்பாட்டோடு எழுதப்பட்டுள்ள இந்த நூலின் கருத்துக்கள் எல்லாவற்றோடும் ஒருவர் உடன்பட வேண்டியதில்லை...."

 

எனவே அவர் முன்வைத்த கருத்துக்கள் மற்றும் குறிப்புகள் பற்றி நாம் ஆராய முற்பட்டோமானால் நாம் இங்கே ஒரு "கருத்தினால் ஆன கொலைக்களத்தை" சந்திக்கவேண்டி வரும். எனவே அதனை தவிர்கின்றேன்.

 

இந்த புத்தகத்தில் பல இடங்களில் "நடுநிலை" என்ற சொற்பதம் பாவிக்கப்பட்டுள்ளது. இயலாமையின் இறுதிவடிவமே ஐரோப்பியர்களை "நடுநிலைமை" என்ற நிலைக்கு தள்ளுகின்றது என்பதை முள்ளிவாய்க்கால் காலத்தில் நான் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கின்றேன். அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வரும் போது நாம் "நடுநிலை"யாக இருந்தால் தான் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண முடியும் என்று நொண்டிச்சாக்கு சொல்லி பிரச்சனையில் இருந்து விலக முயற்சிப்பார்கள். 

இங்கே கார்டன் வைஸ் செய்திருப்பதும் அதையே தான். இரு தரப்பினரும் மக்களை கொன்றனர் என்கிறார் அவர். ஆனால் நடைபெற்ற அனைத்துக்கொலைகளையும் இவர்கள் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்கள். இவர்களின் நடுநிலமை என்கிற மௌனமும் ஏதோ ஒரு வகை தீவிரவாதம் தான். 
இலங்கை அரசாங்கத்தை மீறி தங்களால் எதுவும் செய்யமுடியாமல் போய்விட்டது. மனித உரிமை அமைப்புகள்; தொண்டு நிறுவனங்கள்; ஐ.நா. சபை போன்ற அமைப்புகளால்  கூட இலங்கை அரசை மீறி எதுவுமே செய்யமுடியவில்லை என்கிறார். கொலைகாரன் எமக்கு அவன் செய்யப்போகும் கொலையை தடுப்பதற்கான அனுமதி வழங்கவில்லை எனவே நாங்கள் நடுநிலையாக இருந்து அந்த கொலையை வேடிக்கை பார்த்தோம் என்கிற தோனியில் உள்ளது இது. இரு தரப்பும் மக்களை கொன்றார்கள் என்பதை விட முத்தரப்பும் (சர்வதேசமும்) சேர்ந்து கொன்றது என்று அவர் ஒரு நடுநிலைவாதியாக எழுதியிருக்க வேண்டும். 

20 நாடுகளின் துணையோடு தான் இந்த யுத்தத்தை நடத்தினோம் என்று கோத்தபாயவே சொன்ன பிறகு இவர் வெறுமனே இந்தியா மற்றும் சீனா இந்த இரு நாடுகளை மட்டுமே முக்கியமாக குறிப்பிடுகின்றார். முக்கியமாக பிரிட்டன் இலங்கைக்கு விற்பனை செய்த ஆயுதங்கள் பற்றி ஒரு நடுநிலைவாதி மறைத்துவிட்டார். கோத்தபாய கூறிய அந்த இருபது நாடுகளில் பிரிட்டனும் ஒன்று என்றே நினைக்கின்றேன். இந்தியாவும் சீனாவும் இராணுவத்தின் கரங்களை பலப்படுத்தியதை தவறாக கருதாத இவர் புலம்பெயர் தமிழர்கள் புலிகளின் கரத்தை பலப்படுத்தியதை எப்படி தவறாக பார்க்கிறாரோ தெரியவில்லை. 

விடுபட்ட விடயங்களில் முக்கியமானது தடைசெய்யப்பட்ட ஆயுதங்களின் பாவனை. ஆனந்தபுர சமரில் தளபதி தீபன் உட்பட நூற்றுக்கணக்கான போராளிகள் ரசாயன ஆயுதங்களின் பாவனையால் கருகிய உடல்களை நாம் புகைப்படங்களில் பார்த்தோம். அது இவரின் கண்களிற்கு படவில்லையோ தெரியவில்லை. 

 

எதிர்காலத்தில் இது போன்று தவறுகள் எந்த இனத்திற்கும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஐ.நா ஏதாவது நடவடிக்கை எடுத்ததா என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம். ஒவ்வொரு போருக்கு பின்னரும் அதில் கற்றுக்கொண்ட புதிய அனுபவங்களை வைத்து புதிய சட்டங்கள் உருவாகின என்பதை அவரே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இலங்கை விடயத்தில் அப்படியெதுவும் நடந்ததாக தெரியவில்லை.

 

இந்த புத்தகத்தில் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையின் வரலாறு பல புதிய தகவல்களை வெளிக்கொண்டுவந்துள்ளது. இந்த புத்தகத்தின் இன்னொரு சிறப்பம்சம் என்றால் போர் நடந்த வேளையில் பின்னனியில் நடைபெற்ற பல அரசியல் தந்திரங்களை குறிப்பிட்டுள்ளார். 

 

koondu.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.