Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதர்களின் வாழ்நாள் எப்போது முடியும் என்பதை, கணக்கிட்டு சொல்லும், லேசர் கருவியை, பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Featured Replies

 

மனிதர்களின் வாழ்நாள் எப்போது முடியும் என்பதை, கணக்கிட்டு சொல்லும், லேசர் கருவியை, பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கைக்கடிகாரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள, லேசர் கருவி மூலம், நாடித்துடிப்பு கணக்கிடப்படும். இதன் மூலம் உட்செலுத்தப்படும், லேசர் கதிர்கள் சிறிய நரம்புகளில் ஊடுருவிச் சென்று, "எண்டோதிலியல்' செல்களை பகுப்பாய்வு செய்கின்றன.

இந்த செல் பகுப்பாய்வின் மூலம், நரம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் தெளிவாக கணக்கிடப்படுகின்றன. 

இந்த மாற்றங்களின் மூலம், மனித செல்களின் அழிவுக்காலம் மற்றும் மனித உடலில் ஏற்படும், புற்று நோய் போன்ற அபாயகரமான நோய்களையும் எளிதில் கண்டறியலாம்.

மனித செல்களின் ஆயுள் காலம் மற்றும் அதில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எளிதில் அறிய முடிவதின் மூலம், மனிதன் இன்னும் எவ்வளவு காலம் உயிர் வாழ்வான் என துல்லியமாக கணக்கிட முடியும். 

எளிய முறையில் கையாளக் கூடிய இந்த கருவியை, அடுத்த மூன்று ஆண்டுகளில், உலகின் அனைத்து நாடுகளை சேர்ந்த மருத்துவர்களும் பயன்படுத்துவர் என, பிரிட்டன் - லான்காஸ்டர் பல்கலை, இயற்பியல் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

0000000000000000000000000000000000000000000000000000000

செவ்வாய் கிரகத்துக்குச் சென்று, அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக, 1 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவின், நாசா விண்வெளி மையம் சில விண்கலங்கள் மூலம் ரோபோக்களை அனுப்பி, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளது."செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதால், அந்தக் கிரகத்தில் உயிர் வாழ முடியும்' என, சில விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, சில நிறுவனங்கள், செவ்வாய் கிரகத்திற்குச் சுற்றுலா அழைத்துச் செல்லவும், அங்கே குடியிருப்புகளை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளன.

செவ்வாய் கிரகத்துக்கு பயணம் மேற்கொள்வதற்காக, இது வரை, 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள், இணையத்தளம் மூலம் விண்ணப்பித்து உள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை நடத்துவதற்குரிய சூழல் உள்ளதா என்பது இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், அங்கு நிரந்தரமாக வாழ்வதற்கு பலரும் விரும்புகின்றனர்.

இந்தப் பயணத் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இளைஞர்களாகவும் இருக்கலாம், முதியவர்களாகவும் இருக்கலாம். பயணம் செய்பவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்து அவர்களிடம் அதற்குரிய கட்டணம் வசூலிக்கப்படும்.

வரும், 2022ம் ஆண்டுக்குள், செவ்வாய் கிரகத்துக்கு, பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான ஆயத்தப் பணிகள் நடக்கின்றன. 

இதற்காக, 40 விண்வெளி வீரர்களைத் தேர்வு செய்துள்ளதாகவும். இவர்களுக்கு, எட்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும், விண்வெளி வீரர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்ப மாட்டார்கள். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தான், பயண நடைமுறையை வகுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும், விண்வெளி வீரர்கள், அங்கு காய்கறிகளை விளைவிப்பது, மருத்துவ சிகிச்சையை அளிப்பது போன்ற பணிகளைக் கவனிப்பார்கள் என, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த, செவ்வாய் கிரகப் பயணத் திட்ட நிறுவனத்தின் தலைவர், பாஸ் லேன்ஸ்டார்ப் தெரிவித்துள்ளார்.

000000000000000000000000000000000000000000000000

thankx.Facebook

  • கருத்துக்கள உறவுகள்

மன்னன் கை தட்டுகிறான்!

 

ஹேய், யாரங்கே!

 

மூன்று சேவகர்கள் ஓடி வந்து பணித்து வணங்குகின்றார்கள்!

 

அந்தக்கண்டறியாத 'கண்டுபிடிப்பைக்' கொண்டு போய் நெருப்பில் போடுங்கள்! :D

 

அதைக் கண்டு பிடித்தவர்கள் அனைவரையும் 'சிரச்சேதம்' செய்யுங்கள்! :wub:

 

இது மன்னனின் உத்தரவு! :icon_mrgreen:

 

அதை எரிக்க முன்பு, 'மகாராணியை' ஒரு முறை செக் பண்ணி விடுங்கள்! :icon_idea:

 

நம்புகிற மாதிரியில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.