Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வில்லோடு வா நிலவே

Featured Replies

சமீபத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய "வில்லோடு வா நிலவே" என்ற புத்தகத்தை படித்தேன். இது 1993ல் வெளிவந்தது. இப்பொழுது தான் எனக்கு அதை படிக்கும்  வாய்ப்பு கிட்டியது.

சேரன் செங்குட்டுவனின் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், காக்கை பாடினியார் நச்செள்ளை எனும் புலவரை பக்கத்தில் கொண்டதாக புறநானுற்றில் ஒரு குறிப்பு காணப்படுகிறது. "பக்கத்து கொண்டான்" எனபதற்கு பட்டத்து மனைவியாகக் கொண்டான் என்ற பொருளைக் கொண்டு எழுதப்பட்ட கவித்துவமான நாவல்.

கவிதை இனிது.. காதல் இனிது... வீரம் இனிது. இந்த மூன்றையும் சங்க காலத்து பிண்ணனியில் கொடுத்த இந்தக் கதையும் இனிதாக இருக்கிறது.  

அம்பைத் தீண்டுவது வீரனின் செயல், வம்பைத் தீண்டுவது காதலனின் செயல். இவர் இரண்டையும் தீண்டியுள்ளார்.  "வம்பு" என்பதன் மற்றோரு பொருளையும் இந்த நாவலில் காணக் கண்டேன். மடலூர்தல் பற்றியும் விரிவாக்க சொல்லி உள்ளார்.

 

நிறைய தமிழ்ப் பெயர்கள் கதை முழுவதும் உள்ளது... கருமான், அழும்பில் வேள் , உம்பற்காடன், வில்லவன் கோதை, நார்முடிச் சேரல், வேண்மாள்

காதலனைப் பற்றி ஒரு இடத்தில் தோழி கூறுவதாகச் சில வரிகள்.....

"பழுத்த பழங்களையும் வெடித்த மலர்களையும் அணில்களும் வண்டுகளும் அப்படியே விடுவதில்லை. அணிலுக்கு பழத்தின் மீது அன்பொன்றுமில்லை. வண்டுக்கு மலர் மீது வாஞ்சை ஒன்றுமில்லை"
எப்படியேனும் குடிக்க வேண்டும்"    

கதை முழுவதும் அழகிய தமிழ்ச் சொற்றொடர்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. அவற்றும் சில  ....

"இந்த அம்புகள் மட்டுமே நாணோடு பிறந்தவை.."

"ஓர் அறிவான அரிவை.."

"உறுப்பிலக்கணம் கவிதைக்குத்தான் உண்டு காதலுக்கு இல்லை..."

"நித்தம் விரிவடையும் சேர அரசின் பரப்பாய் எத்தனை அழகாய் விரிகிறது உன் சித்திரவிழி..."  

"தாய்மண் மீது அவ்வளவு பற்றா உங்களுக்கு ?
 என் தாயை தந்த மண் என்பதால் ஒரு மடங்கு பற்று. இந்தத் தமிழையும் தந்த மண் என்பதால் இரு மடங்கு பற்று !"

"குவளைக் கண்கள்; வள்ளைக் காது;எட்பூ மூக்கு;செண்பகத் தோள்கள்; தாமரைத் தனங்கள்;முல்லைப் பற்கள்; காந்தள் விரல்கள்;"


காக்கை பாடினியார் நச்செள்ளை பாடிய குறுந்தொகை பாடல் ஒன்று..

திண்தேர் நள்ளி கானத்து அண்டர்
பல்ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழகலந்து ஏந்தினும் சிறிது - என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.


விளக்கம்: உறுதியான தேரினையுடைய நள்ளியின்(நள்ளி கடையெழ வள்ளல்களில் ஒருவன்) காட்டில் உள்ள இடையர்கள் வளர்த்த பசுக்கள் தந்த நெய்யோடு தொண்டி என்னும் ஊரில்  உள்ள வயல்களில் விளைந்த வெண் நெல் அரிசியால் சமைத்த சுடு சோற்றினை, ஏழு கலங்களில் நிறைத்துத் தோளில் சுமந்து நின்றாலும் கூட, என் தோழியாகிய தலைவியின் பெருந் தோளை நெகிழச் செய்த துன்பத்தை நீக்குவதற்கு தலைவன் வருவதைக் கரைந்து கூறிய காக்கைக்கு இடும் பலி உணவு சிறிய அளவினதேயாகும்
 

 

"பழுத்த பழங்களையும் வெடித்த மலர்களையும் அணில்களும் வண்டுகளும் அப்படியே விடுவதில்லை. அணிலுக்கு பழத்தின் மீது அன்பொன்றுமில்லை. வண்டுக்கு மலர் மீது வாஞ்சை ஒன்றுமில்லை"
எப்படியேனும் குடிக்க வேண்டும்"  

 

இங்கு நிற்கின்றீர்கள் இளம்பிறையாநாரே !!!!!இன்பத் தமிழ் சுவைத்தேன் தொடருங்கள்    :)  :) .  

  • தொடங்கியவர்

கருத்திட்ட கோவிற்கும், ஊக்குவித்த வல்வை மற்றும் யாழ் வாலிக்கும் எனது நன்றிகள்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.